62. ஸூரத்துல் ஜுமுஆ (வெள்ளிக் கிழமை)

மதனீ, வசனங்கள்: 11

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
يُسَبِّحُதுதிக்கின்றனلِلّٰهِஅல்லாஹ்வைمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவர்களும்وَمَا فِى الْاَرْضِபூமியில் உள்ளவர்களும்الْمَلِكِபேரரசனாகியالْقُدُّوْسِபரிசுத்தவனாகியالْعَزِيْزِமிகைத்தவனாகியالْحَكِيْمِ‏மகா ஞானவானாகிய
யுஸBப்Bபிஹு லிலாஹி மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளில் மலிகில் குத்தூஸில் 'அZஜீZஜில் ஹகீம்
முஹம்மது ஜான்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை புகழ்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றன வானங்களில் உள்ள ஒவ்வொன்றும்; பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! அவன் அரசனாக இருக்கிறான். மிகவும் தூய்மையானவன்; யாவரையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. (அவன்தான்) பேரரசன், பரிசுத்தமானவன், (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
Saheeh International
Whatever is in the heavens and whatever is on the earth is exalting Allah, the Sovereign, the Pure, the Exalted in Might, the Wise.
هُوَ الَّذِیْ بَعَثَ فِی الْاُمِّیّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۗ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
هُوَ الَّذِىْஅவன்தான்بَعَثَஅனுப்பினான்فِى الْاُمِّيّٖنَஎழுதப் படிக்கக் கற்காத மக்களில்رَسُوْلًاஒரு தூதரைمِّنْهُمْஅவர்களில் இருந்தேيَتْلُوْاஅவர் ஓதுகிறார்عَلَيْهِمْஅவர்களுக்கு முன்اٰيٰتِهٖஅவனது வசனங்களைوَيُزَكِّيْهِمْஇன்னும் அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்وَيُعَلِّمُهُمُஅவர்களுக்கு கற்பிக்கிறார்الْكِتٰبَவேதத்தை(யும்)وَالْحِكْمَةَஞானத்தையும்وَاِنْ كَانُوْاநிச்சயமாக அவர்கள் இருந்தனர்مِنْ قَبْلُஇதற்கு முன்னர்لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏தெளிவான வழிகேட்டில்தான்
ஹுவல் லதீ Bப'அத Fபில் உம்மிய்யீன ரஸூலம் மின் ஹும் யத்லூ 'அலய்ஹிம் ஆயாதிஹீ வ யுZஜக்கீஹிம் வ யு'அல்லிமுஹுமுல் கிதாBப வல் ஹிக்மத வ இன் கானூ மின் கBப்லு லFபீ ளலாலிம் முBபீன்
முஹம்மது ஜான்
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தபோதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.
IFT
அவன்தான் உம்மிகளிடையே* ஒரு தூதரை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர் எத்தகையவர் எனில், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுகின்றார்; அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்றார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், அவர்களோ இதற்கு முன்பு வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், எழுத்தறிவில்லாத (அரபி) சமூகத்தார்களில், அவர்களிலிருந்தே ஒரு தூதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், தீர்க்கமான அறிவை (சுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார், நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.
Saheeh International
It is He who has sent among the unlettered [Arabs] a Messenger from themselves reciting to them His verses and purifying them and teaching them the Book [i.e., the Qur’an] and wisdom [i.e., the sunnah] - although they were before in clear error -
وَّاٰخَرِیْنَ مِنْهُمْ لَمَّا یَلْحَقُوْا بِهِمْ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
وَّاٰخَرِيْنَஇன்னும் வேறு மக்களுக்காகمِنْهُمْஅவர்களில்لَمَّا يَلْحَقُوْاஅவர்கள் வந்து சேரவில்லைبِهِمْ‌ؕஇவர்களுடன்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
வ ஆகரீன மின்ஹும் லம்மா யல்ஹகூ Bபிஹிம் வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
முஹம்மது ஜான்
(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
(தற்காலமுள்ள இவர்களுக்காகவும்) இதுவரை இவர்களுடன் சேராத இவர்கள் இனத்தில் (பிற்காலத்தில் வரும்) மற்றவர்களுக்காகவும் (அத்தூதரை அனுப்பிவைத்தான்). அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
IFT
இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதர் தோற்றுவிக்கப்பட்டுள்ளார்). அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களிலிருந்து (தோன்றக்கூடியவர்களும்) இதுவரை அவர்களுடன் சேராத(வர்களும் உலக முடிவுவரை தோன்றக் கூடியவர்களுமான) மற்றுமுள்ளோருக்கும் (தூதராக அவரை அல்லாஹ் அனுப்பி வைத்தான்) அவனோ யாவரையும் மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
Saheeh International
And [to] others of them who have not yet joined them. And He is the Exalted in Might, the Wise.
ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
ذٰ لِكَஇதுفَضْلُசிறப்பாகும்اللّٰهِஅல்லாஹ்வின்يُؤْتِيْهِஅதை கொடுக்கின்றான்مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُதான் நாடுகின்றவர்களுக்கு/அல்லாஹ்ذُو الْفَضْلِசிறப்புடையவன்الْعَظِيْمِ‏மகத்தான
தாலிக Fபள்லுல் லாஹி யு'தீஹி ம(ன்)ய்-யஷா; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
முஹம்மது ஜான்
அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
இது அல்லாஹ்வுடைய அருளாகும். அவன் விரும்பியவர்களுக்கே இதைக் கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
IFT
இது அவனுடைய அருள். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மகத்தான அருளைப் பொழிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது அல்லாஹ்வுடைய பேரருளாகும், அவன் நாடியவர்களுக்கு அதனைக் கொடுக்கின்றான், மேலும், அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன்.
Saheeh International
That is the bounty of Allah, which He gives to whom He wills, and Allah is the possessor of great bounty.
مَثَلُ الَّذِیْنَ حُمِّلُوا التَّوْرٰىةَ ثُمَّ لَمْ یَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ یَحْمِلُ اَسْفَارًا ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
مَثَلُஉதாரணம்الَّذِيْنَஎவர்கள்حُمِّلُواபணிக்கப்பட்டார்கள்التَّوْرٰٮةَதவ்றாத்தின் படிثُمَّ لَمْ يَحْمِلُوْهَاபிறகு/அதன்படி அவர்கள் அமல் செய்யவில்லைكَمَثَلِஉதாரணத்தைப் போல்الْحِمَارِகழுதையின்يَحْمِلُசுமக்கிறதுاَسْفَارًا‌ ؕபல நூல்களைبِئْسَமிகக் கெட்டதுمَثَلُஉதாரணம்الْقَوْمِமக்களின்الَّذِيْنَ كَذَّبُوْاபொய்ப்பித்தவர்கள்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِ ؕஅல்லாஹ்வின்وَاللّٰهُ لَا يَهْدِىஅல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏அநியாயக்கார மக்களை
மதலுல் லதீன ஹும் மிலுத் தவ்ராத தும்ம லம் யஹ்மிலூஹா கமதலில் ஹிமாரி யஹ் மிலு அஸ்Fபாரா; Bபி'ஸ மதலுல் கவ்மில் லதீன காத்தBபூ Bபி ஆயாதில் லாஹ்; வல்லாஹு லா யஹ்தில் கவ்மள்ளாலிமீன்
முஹம்மது ஜான்
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
‘தவ்றாத்' என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகா கெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்.
IFT
எந்த மக்கள் மீது ‘தவ்ராத்’ சுமத்தப்பட்டதோ பின்னர் அவர்கள் அதன் பொறுப்பை ஏற்றுச் செயல்படவில்லையோ அந்த மக்களின் உதாரணம், வேதங்களைச் சுமக்கின்ற கழுதையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று தூற்றிய மக்களின் உதாரணம் இதனைவிட மோசமானதாகும். இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“தவ்றாத்”தைச் சுமத்தப்பட்டுப் பின்னர், அதிலுள்ளவாறு செயல்படாதவர்களின் உதாரணம்: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதராணத்தைப் போன்றதாகும், அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களான சமூகத்தாரின் இவ்வுதாரணம் மிகக்கெட்டது, அல்லாஹ்வோ அநியாயக்கார சமூகத்தாரை நேர் வழியில் செலுத்தமாட்டான்.
Saheeh International
The example of those who were entrusted with the Torah and then did not take it on is like that of a donkey who carries volumes [of books]. Wretched is the example of the people who deny the signs of Allah. And Allah does not guide the wrongdoing people.
قُلْ یٰۤاَیُّهَا الَّذِیْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِیَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராக!يٰۤاَيُّهَا الَّذِيْنَ هَادُوْۤاயூதர்களே!اِنْ زَعَمْتُمْநீங்கள் பிதற்றினால்اَنَّكُمْநிச்சயமாக நீங்கள்தான்اَوْلِيَآءُநண்பர்கள்لِلّٰهِஅல்லாஹ்வின்مِنْ دُوْنِ النَّاسِமற்ற மக்கள் அல்லفَتَمَنَّوُاஆசைப்படுங்கள்!الْمَوْتَமரணத்தைاِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்
குல் யா அய்யுஹல் லதீன ஹாதூ இன் Zஜ'அம்தும் அன்னகும் அவ்லியா' உலிலாஹி மின் தூனின் னாஸி Fபதமன்னவுல் மவ்த இன் குன்தும் ஸாதிகீன்
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக்கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர்களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.''
IFT
(இவர்களிடம்) கூறும்: “யூதர்களாக ஆகிவிட்டவர்களே! மக்கள் அனைவரையும்விட நீங்கள்தாம் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்கள் என்று கர்வத்துடன் எண்ணுவீர்களானால் உங்கள் கருத்தில் நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், மரணத்தை விரும்புங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“யூதர்களே! (மற்ற) மனிதர்களன்றி நீங்கள் தான் அல்லாஹ்வின் நண்பர்களென்று நிச்சயமாக நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால், (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் நீங்கள் மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
Saheeh International
Say, "O you who are Jews, if you claim that you are allies of Allah, excluding the [other] people, then wish for death, if you should be truthful."
وَلَا یَتَمَنَّوْنَهٗۤ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
وَلَا يَتَمَنَّوْنَهٗۤஅதை அவர்கள் ஆசைப்பட மாட்டார்கள்اَبَدًۢا بِمَا قَدَّمَتْஒரு போதும்/முற்படுத்தியவற்றின் காரணமாகاَيْدِيْهِمْ‌ؕஅவர்களின் கரங்கள்وَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِالظّٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களை
வ லா யதமன்னவ் னஹூ அBபதம் Bபிமா கத்தமத் அய்தீஹிம்; வல்லாஹு 'அலீமும் Bபிள் ளாலிமீன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
IFT
ஆனால், அவர்கள் செய்துவிட்ட தீய செயல்களின் காரணத்தால் அதனை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். மேலும், அல்லாஹ் இந்தக் கொடுமைக்காரர்களை நன்கு அறிந்தே இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்களின் கரங்கள் முற்படுத்திவைத்ததின் காரணமாக (மரணமாகிய) அதை ஒரு போதும் அவர்கள் விரும்பமாட்டார்கள், மேலும் அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
Saheeh International
But they will not wish for it, ever, because of what their hands have put forth. And Allah is Knowing of the wrongdoers.
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِیْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِیْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
قُلْகூறுவீராக!اِنَّ الْمَوْتَநிச்சயமாக மரணம்الَّذِىْஎதுتَفِرُّوْنَவிரண்டு ஓடுகின்றீர்கள்مِنْهُஅதை விட்டுفَاِنَّهٗநிச்சயமாகஅதுمُلٰقِيْكُمْ‌உங்களை சந்திக்கும்ثُمَّபிறகுتُرَدُّوْنَநீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்اِلٰى عٰلِمِஅறிந்தவன் பக்கம்الْغَيْبِமறைவானவற்றையும்وَالشَّهَادَةِவெளிப்படையானவற்றையும்فَيُنَبِّئُكُمْஅவன் உங்களுக்கு அறிவிப்பான்بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை
குல் இன்னல் மவ்தல் லதீ தFபிர்ரூன மின்ஹு Fப இன்னஹூ முலாகீகும் தும்ம துரத்தூன இலா 'ஆலிமில் கய்Bபி வஷ் ஷஹாததி Fப யுனBப்Bபி'உகும் Bபிமா குன்தும் தஃமலூன்
முஹம்மது ஜான்
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி,) கூறுவீராக: ‘‘நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
IFT
(இவர்களிடம்) கூறும்: “எந்த மரணத்தைவிட்டு நீங்கள் விரண்டோடுகின்றீர்களோ அது திண்ணமாக உங்களை அடைந்தே தீரும். பின்னர், மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாகிய இறைவனின் முன் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். மேலும், நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தீர்களோ அவற்றை அவன் உங்களுக்கு அறிவித்துத் தருவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக: நிச்சயமாக நீங்கள் எதைவிட்டும் வெருண்டோடுகிறீர்களோ அத்தகைய மரணம்_நிச்சயமாக அது_உங்களைச் சந்திக்கும், பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிகிறவன் பக்கம் நீங்கள் மீட்டப்படுவீர்கள், அப்போது, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான்.
Saheeh International
Say, "Indeed, the death from which you flee - indeed, it will meet you. Then you will be returned to the Knower of the unseen and the witnessed, and He will inform you about what you used to do."
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰی ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَیْعَ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا نُوْدِىَஅழைக்கப்பட்டால்لِلصَّلٰوةِதொழுகைக்காகمِنْ يَّوْمِ الْجُمُعَةِஜுமுஆ தினத்தன்றுفَاسْعَوْاநீங்கள் விரையுங்கள்!اِلٰى ذِكْرِநினைவின் பக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்وَذَرُواஇன்னும் விட்டு விடுங்கள்!الْبَيْعَ‌ ؕவியாபாரத்தைذٰ لِكُمْஅதுதான்خَيْرٌமிகச் சிறந்ததாகும்لَّـكُمْஉங்களுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்تَعْلَمُوْنَ‏அறிகின்றவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னூதிய லிஸ்-ஸலாதி மி(ன்)ய் யவ்மில் ஜுமு'அதி Fபஸ்'அவ் இலா திக்ரில் லாஹி வ தருல் Bபய்'; தாலிகும் கய்ருல் லகும் இன் குன்தும் தஃலமூன்
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!)
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை யன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! (வெள்ளிக்கிழமையாகிய) ஜூமுஆ தினத்தன்று தொழுகைக்காக (பாங்கு சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால், அப்போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் சென்றுவிடுங்கள், வர்த்தகத்தையும் விட்டுவிடுங்கள், நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் (இதனை அறிந்துகொள்வீர்களாக!)
Saheeh International
O you who have believed, when [the adhan] is called for the prayer on the day of Jumuʿah [Friday], then proceed to the remembrance of Allah and leave trade. That is better for you, if you only knew.
فَاِذَا قُضِیَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِی الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
فَاِذَا قُضِيَتِமுடிந்துவிட்டால்الصَّلٰوةُதொழுகைفَانْتَشِرُوْاபரவிச் செல்லுங்கள்فِى الْاَرْضِபூமியில்وَابْتَغُوْاஇன்னும் தேடுங்கள்مِنْ فَضْلِஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்وَاذْكُرُواஇன்னும் நீங்கள் நினைவு கூருங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைكَثِيْرًاஅதிகம்لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏நீங்கள் வெற்றி அடைவீர்கள்
Fப-இதா குளியதிஸ் ஸலாது Fபன்தஷிரூ Fபில் அர்ளி வBப்தகூ மின் Fபள்லில் லாஹி வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
முஹம்மது ஜான்
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஜூமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
IFT
பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (ஜூமுஆத்) தொழுகை நிறைவேற்றுப்பட்டுவிட்டால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள், மேலும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
Saheeh International
And when the prayer has been concluded, disperse within the land and seek from the bounty of Allah, and remember Allah often that you may succeed.
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا نْفَضُّوْۤا اِلَیْهَا وَتَرَكُوْكَ قَآىِٕمًا ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟۠
وَاِذَا رَاَوْاஅவர்கள் பார்த்தால்تِجَارَةًஒரு வர்த்தகத்தையோاَوْஅல்லதுلَهْوَا۟ஒரு வேடிக்கையையோاۨنْفَضُّوْۤاஅவர்கள் பிரிந்து சென்று விடுவார்கள்اِلَيْهَاஅதன் பக்கம்وَتَرَكُوْكَஇன்னும் உம்மை விட்டு விடுவார்கள்قَآٮِٕمًا‌ ؕநின்றவராகقُلْகூறுவீராக!مَا عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம் உள்ளதுதான்خَيْرٌமிகச் சிறந்ததாகும்مِّنَ اللَّهْوِவேடிக்கையை விடவும்وَمِنَ التِّجَارَةِ‌ ؕவர்த்தகத்தை விடவும்وَاللّٰهُஅல்லாஹ்தான்خَيْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِيْنَ‏உணவளிப்பவர்களில்
வ இதா ர'அவ் திஜாரதன் அவ் லஹ்வனின் Fபள்ளூ இலய்ஹா வ தரகூக கா'இமா; குல் மா 'இன்தல் லாஹி கய்ரும் மினல் லஹ்வி வ மினத் திஜாரஹ்; வல்லாஹு கய்ருர் ராZஜிகீன்
முஹம்மது ஜான்
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (பிரசங்கம் நிகழ்த்துகின்ற) உம்மை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்விடத்தில் உள்ளது, இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், மேலும், உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ்தான் மிக மேலானவன்.''
IFT
அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கயையோ அவர்கள் பார்த்துவிட்டால், அதனளவில் சென்றுவிடுகின்றனர், (குத்பா ஓதும்) உம்மை நின்றவண்ணமாக விட்டும் விடுகின்றனர், (ஆகவே, நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக: “அல்லாஹ்விடத்தில் உள்ளது வேடிக்கையையும், வர்த்தகத்தையும் விட மிகச் சிறந்ததாகும், அன்றியும் உணவளிப்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்.”
Saheeh International
But [on one occasion] when they saw a transaction or a diversion, [O Muhammad], they rushed to it and left you standing. Say, "What is with Allah is better than diversion and than a transaction, and Allah is the best of providers."