“(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்) நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்து, ‘‘நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்'' என்பதாகக் கூறுகின்றனர். நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். எனினும், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயமாகப் பொய்யையே கூறுகின்றனர் என்று அல்லாஹ் சாட்சியம் கூறுகிறான்.
IFT
(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வருகின்றபோது கூறுகின்றனர்: “திண்ணமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம்.” திண்ணமாக நீர் அவனுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வுடைய தூதர் தான் என்று நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்பதாகக் கூறுகின்றனர், இன்னும், நிச்சயமாக நீர் அவனுடைய தூதர் தான் என்பதை அல்லாஹ் நன்கறிவான். இன்னும் நிச்சயமாக, இந்த முனாஃபிக்குகள் பொய்யர்களாவர் என்று அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்.
Saheeh International
When the hypocrites come to you, [O Muhammad], they say, "We testify that you are the Messenger of Allah." And Allah knows that you are His Messenger, and Allah testifies that the hypocrites are liars.
இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
அப்துல் ஹமீது பாகவி
(தவிர, இவர்கள்) தங்கள் (பொய்) சத்தியங்களை ஒரு கேடயமாக வைத்துக் கொண்டு (மக்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து தடுக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியம் மகா கெட்டது.
IFT
இவர்கள் தங்களுடைய ‘சத்தியங்களை’க் கேடயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விதமாக அல்லாஹ்வின் வழியிலிருந்து தாங்களும் விலகி, பிறமக்களையும் அதில் (செல்லவிடாமல்) தடுக்கின்றார்கள். இவர்கள் செய்து கொண்டிருப்பவை எத்துணை மோசமான செயல்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இவர்கள் தங்களுடைய (பொய்ச்) சத்தியங்களை ஒரு கேடயமாக எடுத்துக்கொண்டு அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (அதில் செல்வோரைத்) தடுக்கின்றனர், நிச்சயமாக அவர்கள்_அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டது.
Saheeh International
They have taken their oaths as a cover, so they averted [people] from the way of Allah. Indeed, it was evil that they were doing.
இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்குரிய காரணமாவது: இவர்கள் ‘‘நம்பிக்கைக் கொண்டோம்'' என்று (வாயினால்) கூறிப் பின்னர் அதை நிராகரித்துவிட்டது தான் (காரணம்). ஆகவே, அவர்களுடைய உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. ஆகவே, (எதையும்) அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.
IFT
இவை அனைத்திற்கும் காரணம், இவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் நிராகரித்துவிட்டதுதான். இதனால் அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது, நிச்சயமாக அவர்கள் விசுவாசங்கொண்டு, பின்னர் அவர்கள் (அதனை) நிராகரித்துவிட்டார்கள் என்பதினாலேயாகும், எனவே, அவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது, ஆகவே (ஈமானின் உண்மை நிலையை) அவர்கள் விளங்கிக்கொள்ளமாட்டார்கள்.
Saheeh International
That is because they believed, and then they disbelieved; so their hearts were sealed over, and they do not understand.
இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களை நீர் பார்த்தால், அவர்களுடைய தேகங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்களுடைய வார்த்தையையே நீங்கள் கேட்கும்படி ஏற்படும். (நீர் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது பேசுவார்கள்.) சுவற்றில் சாய்ந்த மரங்களைப்போல் அவர்கள் (அசையாது) இருப்பார்கள். (அவர்கள் செவியுறும்) எந்தச் சப்தத்தையும் தங்களுக்கு விரோதமாகப் பேசுவதாகவே எண்ணிக் கொள்வார்கள். (நபியே!) இவர்கள்தான் (உமது உண்மையான) எதிரிகள். ஆகவே, இவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருந்து கொள்வீராக. அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவான். (சத்தியத்திலிருந்து) அவர்கள் எங்கு செல்கின்றனர்?
IFT
நீர் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடலமைப்பு உமக்குக் கம்பீரமாகத் தெரியும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீர் இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர். ஆனால், உண்மையில் இவர்கள், சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த ஓசையையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள்தாம் கடும் பகைவர்களாவர். இவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இரும். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசைமாறிச் சென்று கொண்டிருக்கின்றார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) அவர்களை நீர் பார்த்தால், அவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை, ஆச்சரியத்திலாழ்த்தும், அவர்கள் பேசினால் அவர்களுடைய சொல்லையே நீர் கேட்டுக்கொண்டிருப்பீர், (உமக்குச் செவியேற்காத) அவர்கள் (சுவரின் மீது) சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டைகளைப் போல் இருக்கின்றனர், மேலும், (அவர்கள் செவியேற்கும்) ஒவ்வொரு சப்தத்தையும் தங்களுக்கு விரோதமானது என எண்ணிக் கொள்வார்கள், (நபியே!) அவர்கள் தாம் (உம்முடைய கடுமையான) பகைவர்கள், ஆகவே, அவர்களைப் பற்றி நீர் எச்சரிக்கையாக இருந்துகொள்வீராக! அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவானாக! (உண்மையை ஏற்பதிலிருந்து) அவர்கள் எங்கு திருப்பப்படுகின்றனர்?
Saheeh International
And when you see them, their forms please you, and if they speak, you listen to their speech. [They are] as if they were pieces of wood propped up - they think that every shout is against them. They are the enemy, so beware of them. May Allah destroy them; how are they deluded?
وَاِذَا قِيْلَகூறப்பட்டால்لَهُمْஅவர்களிடம்تَعَالَوْاவாருங்கள்يَسْتَغْفِرْமன்னிப்புத் தேடுவார்لَـكُمْஉங்களுக்காகرَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்لَـوَّوْاவேகமாக அசைக்கிறார்கள்رُءُوْسَهُمْதங்கள் தலைகளைوَرَاَيْتَهُمْஇன்னும் அவர்களை நீர் பார்ப்பீர்يَصُدُّوْنَபுறக்கணிப்பவர்களாகவேوَهُمْஅவர்கள்مُّسْتَكْبِرُوْنَகர்வம் கொள்பவர்கள்
இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களை நோக்கி, ‘‘வாருங்கள்; அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் குற்றங்களை மன்னிக்க, (இறைவனிடம்) கோருவார்'' என்று கூறப்பட்டால், அவர்கள் தங்கள் தலைகளை அசைத்துக் கர்வம்கொண்டு (உங்களைப் பார்க்காதவர்களைப் போல்) திரும்பிச் செல்வதை நீர் காண்பீர்.
IFT
“வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்களுடைய தலைகளைத் திருப்பிக் கொள்கின்றார்கள். மேலும், இவர்கள் பெரும் ஆணவத்தால் வராமல் நின்றுவிடுவதை நீர் காண்பீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “வாருங்கள்: அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (உங்களுடைய இரட்சகனிடம் பாவ) மன்னிப்பைத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்கள் தலைகளை அவர்கள் சாய்த்துக்கொள்கின்றனர், இன்னும் அவர்கள் பெருமை கொண்டோராக (எதன்பால் அழைக்கப்பட்டார்களோ) அதைவிட்டும் புறகணித்து(த்திரும்பிச்) செல்வதை (நபியே!) நீர் காண்பீர்.
Saheeh International
And when it is said to them, "Come, the Messenger of Allah will ask forgiveness for you," they turn their heads aside and you see them evading while they are arrogant.
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் (இத்தகைய) மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
IFT
(நபியே!) நீர் இவர்களுக்குப் பாவமன்னிப்புக்காக இறைஞ்சினாலும், இறைஞ்சாவிட்டாலும் இவர்களைப் பொறுத்து சமம்தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் நேர்வழி காட்டுவதில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) அவர்களுக்காக நீர் மன்னிப்புத் தேடுவதும் அல்லது அவர்களுக்காக நீர் மன்னிப்புத் தேடாமலிருப்பதும் அவர்களுக்குச் சமமேயாகும், அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான், நிச்சயமாக அல்லாஹ், பாவிகளான சமூகத்தாரை நேர் வழியில் செலுத்தமாட்டான்.
Saheeh International
It is all the same for them whether you ask forgiveness for them or do not ask forgiveness for them; never will Allah forgive them. Indeed, Allah does not guide the defiantly disobedient people.
இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள்; (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று கூறியவர்கள்; வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை; ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள்தான் (மற்ற மக்களை நோக்கி,) ‘‘அல்லாஹ்வுடைய தூதருடன் இருக்கும் மக்களுக்கு நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். அதனால், அவர்கள் அவரை விட்டும் விலகிவிடுவார்கள்'' என்று கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) ‘‘வானங்கள் பூமியிலுள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே; எனினும், இந்த நயவஞ்சகர்கள் (இதை) உணர்ந்துகொள்ள மாட்டார்கள்.''
IFT
இவர்கள்தான் இவ்வாறு சொல்கிறார்கள்; “இறைத்தூதரின் தோழர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால் அவர்கள் சிதறிப் போகட்டும்!” உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், “அல்லாஹ்வுடைய தூதருடன் இருப்பவர்கள் (அவரைவிட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று (மற்றவர்களிடம்) கூறுகிறார்கள், (நபியே! நீர் கூறுவீராக) “வானங்கள் மற்றும் பூமியிலுள்ள களஞ்சியங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவையாகும், எனினும், இந்த (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் (இதனை) விளங்கிக் கொள்ளமாட்டார்கள்.”
Saheeh International
They are the ones who say, "Do not spend on those who are with the Messenger of Allah until they disband." And to Allah belong the depositories of the heavens and the earth, but the hypocrites do not understand.
“நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘நாங்கள் மதீனாவிற்குத் திரும்ப வந்தால், கண்ணியமுள்ள நாங்கள் (நம்பிக்கை கொண்ட இந்த) இழிவானவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றி விடுவோம்'' என்றும் கூறுகின்றனர். (நபியே! நீர் கூறுவீராக:) கண்ணியமெல்லாம், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் சொந்தமானது. எனினும், இந்த நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளவில்லை.
IFT
மேலும், அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால் எவர் கண்ணியமிக்கவரோ அவர் கேவலமானவரை அங்கிருந்து வெளியேற்றி விடுவார்.” ஆயினும், கண்ணியமானது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நாங்கள் மதீனாவிற்குத் திரும்பி வந்தால், மிகக் கண்ணியமானவர் மிக இழிவானவரை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்” என்று அவர்கள் கூறுகின்றனர், (நபியே! நீர் கூறுவீராக:)” கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விசுவாசிகளுக்கும் உரியதாகும், எனினும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகள் (இதனை) அறியமாட்டார்கள்.”
Saheeh International
They say, "If we return to al-Madīnah, the more honored [for power] will surely expel therefrom the more humble." And to Allah belongs [all] honor, and to His Messenger, and to the believers, but the hypocrites do not know.
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் அல்லாஹ்வுடைய ஞாபகத்தை உங்களுக்கு மறக்கடித்துவிட வேண்டாம். எவரேனும், இவ்வாறு செய்தால் அத்தகையவர்கள் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்தான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் செல்வங்களும், உங்கள் பிள்ளைகளும் அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டு உங்களை அலட்சியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். எவர்கள் அவ்வாறு செய்கிறார்களோ, அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய மக்களும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உங்களை(த் திருப்பி) வீணாக்கி விட வேண்டாம், இன்னும், எவர் அதைக் செய்கிறாரோ அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்களாவர்.
Saheeh International
O you who have believed, let not your wealth and your children divert you from the remembrance of Allah. And whoever does that - then those are the losers.
வ அன்Fபிகூ மிம் மா ரZஜக்னாகும் மின் கBப்லி அ(ன்)ய்-ய'திய அஹதகுமுல் மவ்து Fப யகூல ரBப்Bபி லவ் லா அக்கர்தனீ இலா அஜலின் கரீBபின் Fப அஸ்ஸத்தக வ அகும் மினஸ்ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே, நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்யுங்கள். (அவ்வாறு செய்யாதவன் மரணிக்கும் சமயத்தில்,) ‘‘என் இறைவனே! ஒரு சொற்ப காலத்திற்கு என்னை விட்டுவைக்க வேண்டாமா? (அவ்வாறு விட்டால்,) நான் தானமும் செய்வேன்; (நன்மைகளைச் செய்து) நல்லோர்களிலும் ஆகிவிடுவேன்'' என்று கூறுவான்.
IFT
நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள், உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாக! மேலும், அந்த நேரத்தில் அவர் கூறுவார்: “என் அதிபதியே! நீ எனக்கு இன்னும் சிறிதுகாலம் அவகாசம் அளிக்கக்கூடாதா! நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்பாகவே நாம் உங்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து (தர்மமாக) செலவு செய்யுங்கள்; (அவ்வாறு செய்யாதவர் தன் மரண தறுவாயில்) “என் இரட்சகனே! சமீப தவணையின்பால் என்னை நீ பிற்படுத்த வேண்டாமா? (அவ்வாறு பிற்படுத்தினால்) நான் தர்மம் செய்வேன், (இன்னபிற நற்கருமங்களைச் செய்து) நல்லோர்களிலும் உள்ளவனாக நான் ஆகிவிடுவேன்” என்று கூறுவான்.
Saheeh International
And spend [in the way of Allah] from what We have provided you before death approaches one of you and he says, "My Lord, if only You would delay me for a brief term so I would give charity and be of the righteous."
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) ஓர் ஆத்மாவுடைய (மரணத்தின்) தவணை வரும்போது அதை அல்லாஹ் பிற்படுத்தவே மாட்டான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
IFT
ஆனால், ஒருவருக்கு அவர் செயல்படுவதற்கான அவகாசம் முடிவடையும் நேரம் வந்துவிட்டாலோ எந்த மனிதனுக்கும் மேலும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக அளிப்பதில்லை. மேலும், நீங்கள் என்னென்ன செய்துகொண்டிருக்கின்றீர்களோ அவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ், எந்த ஆத்மாவையும்_அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தமாட்டான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
Saheeh International
But never will Allah delay a soul when its time has come. And Allah is Aware of what you do.