68. ஸூரத்துல் கலம்(எழுதுகோல்)

மக்கீ, வசனங்கள்: 52

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ
نٓ‌நூன்وَالْقَلَمِஎழுது கோல் மீது(ம்) சத்தியமாக!وَمَا يَسْطُرُوْنَۙ‏இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்
னூன்; வல்கலமி வமா யஸ்துரூன்
முஹம்மது ஜான்
நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
அப்துல் ஹமீது பாகவி
நூன். எழுதுகோலின் மீதும் (அதைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக!
IFT
நூன், எழுதுகோலின் மீது சத்தியமாக! எழுதுவோர் எதனை எழுதிக் கொண்டிருக்கின்றார்களோ அதன் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நூன், எழுதுகோலின்மீதும், (அதன்மூலம்) அவர்கள் எழுதுகிறவற்றின் மீதும் சத்தியமாக,
Saheeh International
Nūn. By the pen and what they inscribe,
مَاۤ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ۟ۚ
مَاۤ اَنْتَநீர் இல்லைبِـنِعْمَةِஅருளால்رَبِّكَஉமது இறைவனின்بِمَجْنُوْنٍ‌ۚ‏பைத்தியக்காரராக
மா அன்த Bபினிஃமதி ரBப்Bபிக Bபிமஜ்னூன்
முஹம்மது ஜான்
உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவனருளால் நீர் பைத்தியக்காரரல்ல.
IFT
நீர் உம் இறைவனின் அருளால் பைத்தியக்காரர் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே)! உமதிரட்சகனின் அருளால் நீர் பைத்தியக்காரர் அல்லர்.
Saheeh International
You are not, [O Muhammad], by the favor of your Lord, a madman.
وَاِنَّ لَكَ لَاَجْرًا غَیْرَ مَمْنُوْنٍ ۟ۚ
وَاِنَّநிச்சயமாகلَڪَஉமக்குلَاَجْرًاநற்கூலி உண்டுغَيْرَ مَمْنُوْنٍ‌ۚ‏முடிவற்ற
வ இன்ன லக ல அஜ்ரன் கய்ர மம்னூன்
முஹம்மது ஜான்
இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கிறது.
IFT
என்றைக்கும் முடிவடையாத கூலி திண்ணமாக உமக்கு இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக உமக்கு முடிவுறாத கூலி இருக்கின்றது.
Saheeh International
And indeed, for you is a reward uninterrupted.
وَاِنَّكَ لَعَلٰی خُلُقٍ عَظِیْمٍ ۟
وَاِنَّكَநிச்சயமாக நீர்لَعَلٰى خُلُقٍநற்குணத்தில்عَظِيْمٍ‏மகத்தான
வ இன்னக ல'அலா குலுகின் 'அளீம்
முஹம்மது ஜான்
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கிறீர்.
IFT
மேலும், திண்ணமாக நற்குணத்தின் மிக உன்னதமான நிலையில் நீர் இருக்கின்றீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக மகத்தான நற்குணத்தின் மீதும் நீர் இருக்கின்றீர்.
Saheeh International
And indeed, you are of a great moral character.
فَسَتُبْصِرُ وَیُبْصِرُوْنَ ۟ۙ
فَسَتُبْصِرُவிரைவில் நீரும் காண்பீர்وَيُبْصِرُوْنَۙ‏அவர்களும் காண்பார்கள்
FபஸதுBப்ஸிரு வ யுBப்ஸிரூன்
முஹம்மது ஜான்
எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
IFT
விரைவில் நீரும் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீரும் பார்ப்பீர், அவர்களும் பார்ப்பார்கள்.
Saheeh International
So you will see and they will see.
بِاَیِّىكُمُ الْمَفْتُوْنُ ۟
بِاَيِّٮكُمُஉங்களில் யார்الْمَفْتُوْنُ‏சோதிக்கப்பட்டவர்
Bபி அய்யிகுமுல் மFப்தூன்
முஹம்மது ஜான்
உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்களில் யார் பைத்தியக்காரர்'' என்பதை அதிசீக்கிரத்தில் (நபியே!) நீர் கண்டுகொள்வீர்; அவர்களும் கண்டுகொள்வார்கள்.
IFT
உங்களில் யார் பைத்தியத்திற்குள்ளானவர் என்பதையும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இருசாராராகிய) உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை-
Saheeh International
Which of you is the afflicted [by a devil].
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۪ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்هُوَஅவன்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَنْ ضَلَّவழிதவறியவனைعَنْ سَبِيْلِهٖஅவனது பாதையில் இருந்துوَهُوَஅவன்தான்اَعْلَمُமிக அறிந்தவன்بِالْمُهْتَدِيْنَ‏நேர்வழி பெற்றவர்களை(யும்)
இன்ன ரBப்Bபக ஹுவ அஃலமு Bபிமன் ளல்ல 'அன் ஸBபீலிஹீ வ ஹுவ அஃலமு Bபில்முஹ்ததீன்
முஹம்மது ஜான்
உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான்.
IFT
அவன் வழியிலிருந்து பிறழ்ந்தவர்கள் யாரென்பதையும் உமதிறைவன் நன்கு அறிகின்றான்; நேர்வழியில் இருப்பவர்களையும் நன்கு அறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகன், அவன் வழியைவிட்டுத் தவறியவர் யார் என்பதை அவனே மிக அறிந்தவன், (அதுபோலவே) நேர் வழி அடைந்தோரையும் அவனே மிக அறிந்தவன்.
Saheeh International
Indeed, your Lord is most knowing of who has gone astray from His way, and He is most knowing of the [rightly] guided.
فَلَا تُطِعِ الْمُكَذِّبِیْنَ ۟
فَلَا تُطِعِஆகவே, நீர் கீழ்ப்படியாதீர்الْمُكَذِّبِيْنَ‏பொய்ப்பிப்பவர்களுக்கு
Fபலா துதி'இல் முகத்திBபீன்
முஹம்மது ஜான்
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!
IFT
எனவே சத்தியத்தைப் பொய்ப்படுத்துகின்ற இவர்களின் நிர்ப்பந்தத்திற்கு நீர் பணிந்து விடாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே! உம்மைப்) பொய்யாக்கக் கூடியவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
Saheeh International
Then do not obey the deniers.
وَدُّوْا لَوْ تُدْهِنُ فَیُدْهِنُوْنَ ۟
وَدُّوْاஆசைப்படுகின்றனர்لَوْ تُدْهِنُநீர் அனுசரித்து போகவேண்டும் என்றுفَيُدْهِنُوْنَ‏அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்
வத்தூ லவ் துத்ஹினு Fப-யுத்ஹினூன்
முஹம்மது ஜான்
(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(கடமையை நிறைவேற்றுவதில்) நீர் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உம்மை விட்டு) விலகி விடவே விரும்புகின்றனர்.
IFT
நீர் சிறிது விட்டுக் கொடுத்து இணங்கி வந்தால், அவர்களும் சற்று விட்டுக்கொடுத்து இணங்கி வரலாம் என விரும்புகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்களின் வணக்க வழிபாடுகளில் சலுகை அளித்து) நீர் தளர்த்தினால் (உமக்கு) அவர்களும் தளர்ந்து செல்வதை விரும்புகின்றனர்.
Saheeh International
They wish that you would soften [in your position], so they would soften [toward you].
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ ۟ۙ
وَلَا تُطِعْநீர் கீழ்ப்படியாதீர்!كُلَّஎவருக்கும்حَلَّافٍஅதிகம் சத்தியம் செய்கின்றவன்مَّهِيْنٍۙ‏அற்பமானவன்
வ லா துதிஃ குல்ல ஹல்லா Fபிம் மஹீன்
முஹம்மது ஜான்
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்.
IFT
அதிகமாக சத்தியம் செய்கின்ற, அற்பமான எந்த மனிதனுக்கும் நீர் அடங்கி விடாதீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இழிந்தவனாக, அதிகமாக சத்தியம் செய்யக்கூடிய ஒவ்வொருவனுக்கும் நீர் கீழ்ப்படியாதீர்.
Saheeh International
And do not obey every worthless habitual swearer
هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِیْمٍ ۟ۙ
هَمَّازٍஅதிகம் புறம் பேசுபவன்مَّشَّآءٍۢ بِنَمِيْمٍۙ‏அதிகம் கோள் சொல்பவன்
ஹம்மாZஜிம் மஷ் ஷா'இம் Bபினமீம்
முஹம்மது ஜான்
(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம் கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக்கொண்டு திரிபவன்.
IFT
அவன் திட்டுகின்றவனாகவும், புறம்பேசித் திரிபவனாகவும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன் மனிதர்களின் தன்மானங்களில்) குறைபேசித் திரிபவன், கோள் சொல்லிக்கொண்டு நடப்பவன்.
Saheeh International
[And] scorner, going about with malicious gossip -
مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
مَّنَّاعٍஅதிகம் தடுப்பவன்لِّلْخَيْرِநன்மையைمُعْتَدٍவரம்பு மீறிاَثِيْمٍۙ‏பெரும் பாவி
மன்னா'இல் லில்கய்ரி முஃததின் அதீம்
முஹம்மது ஜான்
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
அப்துல் ஹமீது பாகவி
(அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும்பாவி;
IFT
நன்மை செய்யவிடாமல் தடுப்பவனாகவும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நன்மையானவற்றை அதிகமாகத் தடுத்துக்கொண்டிருப்பவன், வரம்பு மீறியவன், பாவம் செய்பவன்.
Saheeh International
A preventer of good, transgressing and sinful,
عُتُلٍّ بَعْدَ ذٰلِكَ زَنِیْمٍ ۟ۙ
عُتُلٍّ ۢஅசிங்கமானவன்بَعْدَபிறகுذٰلِكَஇதற்குزَنِيْمٍۙ‏ஈனன்
'உதுல்லிம் Bபஃத தாலிக Zஜனீம்
முஹம்மது ஜான்
கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
கடின சுபாவமுள்ளவன். இத்துடன் இழிவானவனும் கூட.
IFT
கொடுமைகள் புரிவதில் வரம்பு மீறிச் செல்பவனாகவும், பாவச் செயல்கள் அதிகம் செய்பவனாகவும், இரக்கமற்ற கொடுமைக்காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழி பிறவியாகவும் இருக்கின்றான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முரட்டுச் சுபாவமுடையவன், அதற்குப் பிறகு (தந்தை பெயர் தெரியா) இழி பிறப்புடையவன்.
Saheeh International
Cruel, moreover, and an illegitimate pretender.
اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِیْنَ ۟ؕ
اَنْ كَانَஇருந்த காரணத்தால்ذَا مَالٍசெல்வ(மு)ம் உடையவனாகوَّبَنِيْنَؕ‏ஆண் பிள்ளைகளும்
அன் கான தா மாலி(ன்)வ்-வ Bபனீன்
முஹம்மது ஜான்
பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
அப்துல் ஹமீது பாகவி
ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கிறது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு),
IFT
அவனுக்கு நிறைய செல்வமும் பிள்ளைகளும் இருக்கின்றன என்பதால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இத்தன்மையுடையவன்) செல்வமும், ஆண்மக்களும் உடையவனாக அவனிருக்கிறான் என்பதால், (அவனுக்கு நீர் கீழ்ப்படியாதீர்)
Saheeh International
Because he is a possessor of wealth and children,
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
اِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِஅவன் மீதுاٰيٰتُنَاநமது வசனங்கள்قَالَகூறுகின்றான்اَسَاطِيْرُகட்டுக் கதைகள்الْاَوَّلِيْنَ‏முன்னோரின்
இதா துத்லா 'அலய்ஹி ஆயாதுனா கால அஸாதீருல் அவ்வலீன்
முஹம்மது ஜான்
நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம் வசனங்கள் அவனுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக் கதைகள் என்று கூறுகிறான்.
IFT
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காட்டப்படும்போது, இவை முற்காலத்துக் கட்டுக்கதைகள் என்று கூறுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம் வசனங்கள் அவன் மீது ஓதிக்காண்பிக்கப்பட்டால், “(இது) முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவன் கூறுகின்றான்.
Saheeh International
When Our verses are recited to him, he says, "Legends of the former peoples."
سَنَسِمُهٗ عَلَی الْخُرْطُوْمِ ۟
سَنَسِمُهٗவிரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்عَلَى الْخُـرْطُوْمِ‏மூக்கின் மீது
ஸனஸிமுஹூ 'அலல் குர்தூம்
முஹம்மது ஜான்
விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
(என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஓர் அடையாளமிடுவோம்.
IFT
விரைவில் நாம் இவனுடைய மூக்கின் மீது சூடு இடுவோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுடைய மூக்கின் மீது நாம் ஓர் அடையாளமிடுவோம்.
Saheeh International
We will brand him upon the snout.
اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَاۤ اَصْحٰبَ الْجَنَّةِ ۚ اِذْ اَقْسَمُوْا لَیَصْرِمُنَّهَا مُصْبِحِیْنَ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்بَلَوْنٰهُمْஅவர்களை சோதித்தோம்كَمَا بَلَوْنَاۤநாம் சோதித்ததுபோல்اَصْحٰبَ الْجَـنَّةِ‌ ۚதோட்ட முடையவர்களைاِذْ اَقْسَمُوْاஅவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!لَيَصْرِمُنَّهَاஅதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்مُصْبِحِيْنَۙ‏அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
இன்னா Bபலவ்னாஹும் கமா Bபலவ்னா அஸ்-ஹாBபல் ஜன்னதி இத் 'அக்ஸமூ ல-யஸ்ரி முன்னஹா முஸ்Bபிஹீன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள்.
IFT
நாம் (மக்காவாசிகளாகிய) இவர்களைச் சோதனைக் குள்ளாக்கியுள்ளோம், ஒரு தோட்டத்தின் உரிமையாளர்களைச் சோதனைக்குள்ளாக்கியது போன்று! ஒருபோது அவர்கள் தங்களுடைய தோட்டத்தின் கனிகளை நிச்சயம் அதிகாலையில் பறிப்பதாகச் சத்தியம் செய்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் (யமன் நாட்டிலுள்ள “ஸன் ஆ”வை அடுத்துள்ள ஊர்வாசிகளில்) அத்தோட்டத்திற்குரியவர்களைச் சோதித்தவாறே (மக்கத்து காஃபிர்களான) அவர்களை நாம் சோதித்தோம், (அத்தோட்டத்திற்குரியவர்களான) அவர்கள் அதனை அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோமென்று சத்தியம் செய்த சமயத்தில்,
Saheeh International
Indeed, We have tried them as We tried the companions of the garden, when they swore to cut its fruit in the [early] morning
وَلَا یَسْتَثْنُوْنَ ۟
وَلَا يَسْتَثْنُوْنَ‏அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று கூறவில்லை
வ லா யஸ்தத்னூன்
முஹம்மது ஜான்
அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;
அப்துல் ஹமீது பாகவி
எனினும், ‘இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) என்று கூறவில்லை.
IFT
அதில் எவ்வித விதிவிலக்கையும் அவர்கள் குறிப்பிடவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(“இன்ஷா அல்லாஹ்”) அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை.
Saheeh International
Without making exception.
فَطَافَ عَلَیْهَا طَآىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَآىِٕمُوْنَ ۟
فَطَافَஇரவில் சுற்றியதுعَلَيْهَاஅதன் மீதுطَآٮِٕفٌஒரு கட்டளைمِّنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துوَهُمْ نَآٮِٕمُوْنَ‏அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது
FபதாFப 'அலய்ஹா தா'இ Fபும் மிர் ரBப்Bபிக வ ஹும் னா'இமூன்
முஹம்மது ஜான்
எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உமது இறைவனிடமிருந்து ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது.
IFT
இரவில் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உம் இறைவனின் தரப்பிலிருந்து ஒரு பேரிடர் அந்தத் தோட்டத்தைப் பிடித்துக் கொண்டது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருக்க, உம் இரட்சகனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பான)து அதன் மீது சுற்றி (அழித்து) விட்டது.
Saheeh International
So there came upon it [i.e., the garden] an affliction from your Lord while they were asleep.
فَاَصْبَحَتْ كَالصَّرِیْمِ ۟ۙ
فَاَصْبَحَتْஆகிவிட்டதுكَالصَّرِيْمِۙ‏அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று
Fப அஸ்Bபஹத் கஸ்ஸரீம்
முஹம்மது ஜான்
(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
அப்துல் ஹமீது பாகவி
பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று.
IFT
அப்போது அது அறுவடை செய்யப்பட்ட வயலைப் போன்று ஆகிவிட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(த்தோட்டமான)து, கறுத்த சாம்பல் போலாகிவிட்டது.
Saheeh International
And it became as though reaped.
فَتَنَادَوْا مُصْبِحِیْنَ ۟ۙ
فَتَـنَادَوْاஒருவரை ஒருவர் அழைத்தனர்مُصْبِحِيْنَۙ‏அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்
Fபதனாதவ் முஸ்Bபிஹீன்
முஹம்மது ஜான்
(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
(அதை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து,
IFT
காலையில் அவர்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கூறினார்கள்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, (அதனை அறியாது) காலைப்பொழுதை அவர்கள் அடைந்த சமயம் ஒருவரையொருவர் அழைத்தனர்.
Saheeh International
And they called one another at morning,
اَنِ اغْدُوْا عَلٰی حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صٰرِمِیْنَ ۟
اَنِ اغْدُوْاகாலையில் செல்லுங்கள்عَلٰى حَرْثِكُمْஉங்கள் விவசாய நிலத்திற்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰرِمِيْنَ‏அறுவடை செய்பவர்களாக
அனிக்தூ 'அலா ஹர்திகும் இன் குன்தும் ஸாரிமீன்
முஹம்மது ஜான்
“நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்'' (என்றும் கூறிக் கொண்டார்கள்).
IFT
“நீங்கள் கனிகளைப் பறிப்பதாக இருந்தால், அதிகாலையிலேயே உங்கள் வயலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிடுங்கள்” என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(உங்கள் விளைச்சலை) நீங்கள் அறுப்பவர்களாக இருந்தால், (அதனை அறுவடை செய்ய) உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்” (என்றும் கூறிக்கொண்டார்கள்)
Saheeh International
[Saying], "Go early to your crop if you would cut the fruit."
فَانْطَلَقُوْا وَهُمْ یَتَخَافَتُوْنَ ۟ۙ
فَانْطَلَقُوْاசென்றனர்وَهُمْஅவர்கள்يَتَخَافَتُوْنَۙ‏தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக
Fபன்தலகூ வ ஹும் யதகாFபதூன்
முஹம்மது ஜான்
எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
அப்துல் ஹமீது பாகவி
(தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக்கொண்டே சென்றார்கள்.
IFT
அவ்வாறே அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள்: தங்களிடையே இரகசியம் பேசிக்கொண்டு.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் ஒருவரோடொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்.
Saheeh International
So they set out, while lowering their voices,
اَنْ لَّا یَدْخُلَنَّهَا الْیَوْمَ عَلَیْكُمْ مِّسْكِیْنٌ ۟ۙ
اَنْ لَّا يَدْخُلَنَّهَاஅதில் நுழைந்து விடக்கூடாதுالْيَوْمَஇன்றைய தினம்عَلَيْكُمْஉங்களிடம்مِّسْكِيْنٌۙ‏ஏழை ஒருவரும்
அல் லா யத்குலன்னஹல் யவ்ம 'அலய்கும் மிஸ்கீன்
முஹம்மது ஜான்
“எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).
அப்துல் ஹமீது பாகவி
(யாசகம் கேட்கக்கூடிய) ஏழை ஒருவர் (கூட) உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழையாதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்).
IFT
“இன்று எந்த ஏழை எளியவனும் உங்களிடம் தோட்டத்திற்குள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்றையத்தினம் (யாசகம் கேட்டு வரக்கூடிய) எந்த ஒரு ஏழையும் அ(த்தோட்டத்)தில் நிச்சயமாக நுழையக்கூடாது என (மெதுவாக பேசிக்கொண்டனர்)
Saheeh International
[Saying], "There will surely not enter it today upon you [any] poor person."
وَّغَدَوْا عَلٰی حَرْدٍ قٰدِرِیْنَ ۟
وَّغَدَوْاஇன்னும் காலையில் புறப்பட்டனர்عَلٰى حَرْدٍஒரு கெட்ட எண்ணத்துடன்قٰدِرِيْنَ‏சக்தி உள்ளவர்களாக
வ கதவ் 'அலா ஹர்தின் காதிரீன்
முஹம்மது ஜான்
உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
தங்கள் எண்ணத்தில் (தங்களுடன் ஓர் ஏழையும் வராது) தடுத்து விட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள்.
IFT
அப்படி எதையும் கொடுக்கக்கூடாது என்று முடிவு செய்து அதிகாலையில் (கனிகளைப் பறிக்க) ஆற்றலுள்ளவர்கள் போன்று அவசர அவசரமாக அவர்கள் அங்கு சென்றார்கள்:
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதிகாலையில் (ஏழைகள் எதையும் பெறாதவாறு) தடுத்துவிடுவதன் மீது ஆற்றலுடையவர்களாக (தங்களை எண்ணிக்கொண்டு) சென்றார்கள்.
Saheeh International
And they went early in determination, [assuming themselves] able.
فَلَمَّا رَاَوْهَا قَالُوْۤا اِنَّا لَضَآلُّوْنَ ۟ۙ
فَلَمَّا رَاَوْهَاஅவர்கள் அதைப் பார்த்த போதுقَالُوْۤاகூறினார்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்لَـضَآلُّوْنَۙ‏வழிதவறி விட்டோம்
Fபலம்மா ர அவ்ஹா காலூ இன்னா லளால்லூன்
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது: “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(சென்று) அதைப் பார்க்கவே, (விளைச்சலெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு ‘‘இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்'' என்றார்கள்.
IFT
ஆனால் தோட்டத்தை அவர்கள் பார்த்தபோது கூறினார்கள். “நாம் வழிதவறி விட்டிருக்கிறோம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அங்கு சென்று, அழிந்துவிட்ட நிலையில்) அதனை அவர்கள் பார்த்தபோது (இது நம்முடையதல்ல,) நிச்சயமாக நாம் வழி தவறிவிட்டவர்கள்” என்று கூறினார்கள்.
Saheeh International
But when they saw it, they said, "Indeed, we are lost;
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ۟
بَلْஇல்லை, மாறாகنَحْنُநாங்கள்مَحْرُوْمُوْنَ‏இழப்பிற்குள்ளாகி விட்டோம்
Bபல் னஹ்னு மஹ்ரூமூன்
முஹம்மது ஜான்
(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர், அதைத் தங்கள் தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தான் நம் பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்).
IFT
இல்லை, உண்மையில் நாம் இழப்புக்குள்ளாகிவிட்டோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னர், அதனைத் தங்களுடையதுதான் என அறிந்து,) இல்லை! நாம் தடுக்கப்பட்டு (பாக்கியமற்றவர்களாகி) விட்டவர்கள் (என்று கூறினார்கள்.)
Saheeh International
Rather, we have been deprived."
قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ۟
قَالَகூறினார்اَوْسَطُهُمْஅவர்களில் நீதவான்اَلَمْ اَقُلْ لَّكُمْநான் உங்களுக்கு கூறவில்லையா?لَوْلَا تُسَبِّحُوْنَ‏நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா
கால அவ்ஸதுஹும் அலம் அகுல் லகும் லவ் லா துஸBப்Bபிஹூன்
முஹம்மது ஜான்
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி ‘‘(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?'' என்று கூறினார்.
IFT
அவர்களிடையே மிகவும் சிறந்த மனிதர் கூறினார்: “நீங்கள் இறைவனைத் துதிக்க வேண்டாமா? இதை நான் உங்களிடம் கூறவில்லையா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களிலுள்ள மிகுந்த நடுநிலையாளர் ஒருவர் அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வைத்) துதி செய்திருக்க வேண்டாமா, என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.
Saheeh International
The most moderate of them said, "Did I not say to you, 'Why do you not exalt [Allah]?'"
قَالُوْا سُبْحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்سُبْحٰنَமிகப் பரிசுத்தமானவன்رَبِّنَاۤஎங்கள் இறைவன்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاநாங்கள்ஆகிவிட்டோம்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
காலூ ஸுBப்ஹான ரBப்Bபினா இன்னா குன்னா ளாலிமீன்
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்” என்றும் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்தமானவன்; நிச்சயமாக நாங்கள்தான் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்'' என்று கூறி,
IFT
அப்போது அவர்கள் கூறினார்கள்: “மிகத் தூய்மையானவன், எங்கள் அதிபதி! உண்மையில் நாம் தாம் பாவிகளாயிருந்தோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள் “எங்கள் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நாங்கள் தாம் அநியாயக்காரர்களாகிவிட்டோம்” என்று கூறினர்.
Saheeh International
They said, "Exalted is our Lord! Indeed, we were wrongdoers."
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰی بَعْضٍ یَّتَلَاوَمُوْنَ ۟
فَاَقْبَلَமுன்னோக்கினர்بَعْضُهُمْஅவர்களில் சிலர்عَلٰى بَعْضٍசிலரைيَّتَلَاوَمُوْنَ‏அவர்களுக்குள் பழித்தவர்களாக
Fப அக்Bபல Bபஃளுஹும் 'அலா Bபஃளி(ன்)ய் யதலாவமூன்
முஹம்மது ஜான்
பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர்.
IFT
பின்னர் அவர்கள் பரஸ்பரம் பழித்துரைக்கலாயினர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்களில் சிலர் சிலரின் மீது நிந்தனை கூறியவர்களாக முன்னோக்கினர்.
Saheeh International
Then they approached one another, blaming each other.
قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِیْنَ ۟
قَالُوْاகூறினார்கள்يٰوَيْلَنَاۤஎங்களின் நாசமே!اِنَّا كُنَّاநிச்சயமாக நாங்கள் இருந்தோம்طٰغِيْنَ‏வரம்பு மீறியவர்களாக
காலூ யா வய்லனா இன்னா குன்னா தாகீன்
முஹம்மது ஜான்
அவர்கள் கூறினார்கள்: “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்'' என்று அவர்கள் கூறினர்.
IFT
இறுதியில் அவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய கேடே! ஐயமின்றி நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விட்டோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பை மீறியவர்களாகிவிட்டோம்” என்று கூறினர்.
Saheeh International
They said, "O woe to us; indeed we were transgressors.
عَسٰی رَبُّنَاۤ اَنْ یُّبْدِلَنَا خَیْرًا مِّنْهَاۤ اِنَّاۤ اِلٰی رَبِّنَا رٰغِبُوْنَ ۟
عَسٰىகூடும்رَبُّنَاۤஎங்கள் இறைவன்اَنْ يُّبْدِلَـنَاஎங்களுக்கு பகரமாக தர(க்கூடும்)خَيْرًاசிறந்ததைمِّنْهَاۤஅதை விடاِنَّاۤநிச்சயமாக நாங்கள்اِلٰىபக்கம்رَبِّنَاஎங்கள் இறைவன்رٰغِبُوْنَ‏ஆசை உள்ளவர்கள்
'அஸா ரBப்Bபுனா அ(ன்)ய் யுBப்திலனா கய்ரம் மின்ஹா இன்னா இலா ரBப்Bபினா ராகிBபூன்
முஹம்மது ஜான்
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்குகிறோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்'' (என்றும் கூறினர்).
IFT
எங்கள் அதிபதி இதற்குப் பகரமாக இதனைவிடச் சிறந்த தோட்டத்தை எங்களுக்கு வழங்கக்கூடும். நாங்கள் எங்கள் அதிபதியின் பக்கம் திரும்புகின்றோம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எங்கள் இரட்சகன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நிச்சயமாக நாங்கள் இரட்சகனின் பக்கமே (அவனது அருளை) ஆசிக்கிறவர்களாக இருக்கிறோம் (என்றும் கூறினார்கள்)
Saheeh International
Perhaps our Lord will substitute for us [one] better than it. Indeed, we are toward our Lord desirous."
كَذٰلِكَ الْعَذَابُ ؕ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُ ۘ لَوْ كَانُوْا یَعْلَمُوْنَ ۟۠
كَذٰلِكَஇவ்வாறுதான்الْعَذَابُ‌ؕதண்டனைوَلَعَذَابُதண்டனைالْاٰخِرَةِமறுமையின்اَكْبَرُ ۘமிகப் பெரியதுلَوْ كَانُوْاஅவர்கள் இருக்க வேண்டுமே!يَعْلَمُوْنَ‏அறிந்தவர்களாக
கதாலிகல் அதாBப், வ ல'அதாBபுல் ஆகிரதி அக்Bபர்; லவ் கானூ யஃலமூன்
முஹம்மது ஜான்
இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).  
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம்மை நிராகரிக்கின்ற இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதைவிட) மிகப் பெரிது. இதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
IFT
இப்படித்தான் இருக்கும் வேதனை! மறுமையின் வேதனை இதனைவிடக் கொடியதாகும். அந்தோ! இவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவ்வாறே வேதனை (அல்லாஹ் நாடியவர்களை வந்தடையும்) மேலும், அவர்கள் அறிந்தவர்களாக இருப்பார்களானால் திட்டமாக மறுமையின் வேதனை மிகப் பெரியதாகும்.
Saheeh International
Such is the punishment [of this world]. And the punishment of the Hereafter is greater, if they only knew.
اِنَّ لِلْمُتَّقِیْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِیْمِ ۟
اِنَّ لِلْمُتَّقِيْنَநிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்குعِنْدَ رَبِّهِمْதங்கள் இறைவனிடம்جَنّٰتِசொர்க்கங்கள்النَّعِيْمِ‏இன்பம் நிறைந்த
இன்ன லில்முத்தகீன 'இன்த ரBப்Bபிஹிம் ஜன்னாதின் ன'ஈம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக, இறையச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சொர்க்கங்கள் உண்டு.
IFT
திண்ணமாக இறையச்சமுடைய மனிதர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் அருள்நிறைந்த சுவனங்கள் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்குத் தங்கள் இரட்சகனிடத்தில் அருட்கொடைகளுடைய சுவனங்களுண்டு.
Saheeh International
Indeed, for the righteous with their Lord are the Gardens of Pleasure.
اَفَنَجْعَلُ الْمُسْلِمِیْنَ كَالْمُجْرِمِیْنَ ۟ؕ
اَفَنَجْعَلُஆக்குவோமா?الْمُسْلِمِيْنَமுற்றிலும் பணிந்தவர்களைكَالْمُجْرِمِيْنَؕ‏குற்றவாளிகளைப் போல்
அFபனஜ்'அலுல் முஸ்லிமீன கல்முஜ்ரிமீன்
முஹம்மது ஜான்
நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
அப்துல் ஹமீது பாகவி
(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா?
IFT
கீழ்ப்படிபவர்களின் நிலையை குற்றவாளிகளின் நிலைபோன்று நாம் செய்துவிடுவோமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முஸ்லிம்களை, குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
Saheeh International
Then will We treat the Muslims like the criminals?
مَا لَكُمْ ۥ كَیْفَ تَحْكُمُوْنَ ۟ۚ
مَا لَـكُمْஉங்களுக்கு என்ன ஆனதுكَيْفَஎப்படிتَحْكُمُوْنَ‌ۚ‏நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
மா லகும் கய்Fப தஹ்குமூன்
முஹம்மது ஜான்
(சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கிறீர்கள்?
IFT
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கின்றீர்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்?
Saheeh International
What is [the matter] with you? How do you judge?
اَمْ لَكُمْ كِتٰبٌ فِیْهِ تَدْرُسُوْنَ ۟ۙ
اَمْ لَـكُمْஉங்களுக்கு ?كِتٰبٌவேதம்فِيْهِஅதில்تَدْرُسُوْنَۙ‏படிக்கின்றீர்களா
அம் லகும் கிதாBபுன் Fபீஹி தத்ருஸூன்
முஹம்மது ஜான்
அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கிறதா? அதில் நீங்கள் (இரு வகுப்பாரும் சமமெனப்) படித்திருக்கிறீர்களா?
IFT
உங்களிடம் ஏதாவது வேதம் இருக்கின்றதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது, உங்களிடம் (ஏதும் வேத) நூல் இருந்து அதில் (முஸ்லிம்கள் பாவிகளைப் போன்று ஆக்கப்படுவார்களென) நீங்கள் படிக்கின்றீர்களா?
Saheeh International
Or do you have a scripture in which you learn
اِنَّ لَكُمْ فِیْهِ لَمَا تَخَیَّرُوْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகلَـكُمْஉங்களுக்குفِيْهِஅதில்لَمَا تَخَيَّرُوْنَ‌ۚ‏நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?
இன்ன லகும் Fபீஹி லமா தகய்யரூன்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கிறதா?
IFT
நீங்கள் உங்களுக்கு எதை விரும்புகின்றீர்களோ அது உங்களுக்கு அங்கே அவசியம் கிடைக்கும் என்று அந்த வேதத்தில் நீங்கள் படிக்கின்றீர்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் தேர்ந்தெடுப்பவை நிச்சயமாக உங்களுக்கு அதில் உள்ளன (என அவ்வேதத்தில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?)
Saheeh International
That indeed for you is whatever you choose?
اَمْ لَكُمْ اَیْمَانٌ عَلَیْنَا بَالِغَةٌ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۙ اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَ ۟ۚ
اَمْ?لَـكُمْஉங்களுக்குاَيْمَانٌஒப்பந்தங்கள்عَلَيْنَاநம்மிடம்بَالِغَةٌஉறுதியானاِلٰى يَوْمِ الْقِيٰمَةِ‌ ۙமறுமை நாள் வரைاِنَّ لَـكُمْநிச்சயமாக உங்களுக்குلَمَا تَحْكُمُوْنَ‌ۚ‏நீங்கள் தீர்ப்பளிப்பதெல்லாம்
அம் லகும் அய்மானுன் 'அலய்னா Bபாலிகதுன் இலா யவ்மில் கியாமதி இன்ன லகும் லமா தஹ்குமூன்
முஹம்மது ஜான்
அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரை, நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக்கின்றோமா?
IFT
அல்லது நீங்கள் எதைத் தீர்மானித்திருக்கின்றீர்களோ அதுவே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று இறுதித் தீர்ப்புநாள் வரை நம்மைக் கட்டுப்படுத்தும் உடன்படிக்கை ஏதேனும் நீங்கள் நம்முடன் ஏற்படுத்திவைத்திருக்கிறீர்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது நீங்கள் தீர்ப்புச் செய்பவை நிச்சயமாக உங்களுக்கு உண்டு என நம் மீது மறுமை நாள்வரை உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சத்திய(ப்பிரமாண)ங்கள் உண்டா? (அவ்வாறு எதுவும் நம்முடன் உங்களுக்கில்லை)
Saheeh International
Or do you have oaths [binding] upon Us, extending until the Day of Resurrection, that indeed for you is whatever you judge?
سَلْهُمْ اَیُّهُمْ بِذٰلِكَ زَعِیْمٌ ۟ۚۛ
سَلْهُمْஅவர்களிடம் கேட்பீராகاَيُّهُمْஅவர்களில் யார்بِذٰلِكَஇதற்குزَعِيْمٌ ۛۚ‏பொறுப்பாளர்
ஸல்ஹும் அய்யுஹும் Bபிதா லிக Zஜ'ஈம்
முஹம்மது ஜான்
(அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களிடம் கேட்பீராக: ‘‘(அவ்வாறாயின்) அவர்களில் இதற்கு யார் பொறுப்பாளி?
IFT
உங்களில் எவர் இதற்குப் பொறுப்பாளி என்று இவர்களிடம் நீர் கேளும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) “(அவ்வாறெல்லாம் கூறுகின்ற) அவர்களில் அதற்குப் பொறுப்பேற்பவர் யார்?” என்று அவர்களிடம் கேட்பீராக
Saheeh International
Ask them which of them, for that [claim], is responsible.
اَمْ لَهُمْ شُرَكَآءُ ۛۚ فَلْیَاْتُوْا بِشُرَكَآىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِیْنَ ۟
اَمْ لَهُمْஇவர்களுக்கு உண்டா?شُرَكَآءُ ۛۚகூட்டாளிகள்فَلْيَاْتُوْاஅவர்கள் கொண்டு வரட்டும்بِشُرَكَآٮِٕهِمْஅவர்களின் அந்த கூட்டாளிகளைاِنْ كَانُوْاஅவர்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
அம் லஹும் ஷுரகா'உ Fபல் ய'தூ Bபிஷுரகா 'இஹிம் இன் கானூ ஸாதிகீன்
முஹம்மது ஜான்
அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவற்றை (இன்றைய தினம் தங்கள் சாட்சிகளாக) அழைத்து வரவும்.
IFT
அல்லது இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட இணைக் கடவுள்கள் (இதற்குப் பொறுப்பேற்கும் வகையில்) உள்ளனரா? அப்படியென்றால், தங்களுடைய அந்த இணைக் கடவுள்களை இவர்கள் கொண்டுவரட்டும், இவர்கள் உண்மையாளர்களாய் இருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (இவ்வாறு அவர்கள் கூறிக் கொண்டிருப்பவற்றில்) அவர்களுக்கு இணையாளர்கள் இருக்கிறார்களா? (அக்கூற்றில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் (அவர்களுக்குப் பொறுப்பாளர்களாக) அவர்களின் இணையாளர்களைக் கொண்டு வரட்டும்.
Saheeh International
Or do they have partners? Then let them bring their partners, if they should be truthful.
یَوْمَ یُكْشَفُ عَنْ سَاقٍ وَّیُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ فَلَا یَسْتَطِیْعُوْنَ ۟ۙ
يَوْمَநாளில்يُكْشَفُஅகற்றப்படுகின்றعَنْ سَاقٍகெண்டைக்காலை விட்டும்وَّيُدْعَوْنَஇன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்اِلَى السُّجُوْدِசிரம்பணியفَلَا يَسْتَطِيْعُوْنَۙ‏ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
யவ்ம யுக்ஷFபு 'அன் ஸாகி(ன்)வ் வ யுத்'அவ்ன இலஸ் ஸுஜூதி Fபலா யஸ்ததீ'ஊன்
முஹம்மது ஜான்
கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்). அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச்சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும்.
IFT
எந்த நாளில் கடினமான நேரம் வருமோ மேலும், மக்கள் ஸஜ்தா* செய்வதற்காக அழைக்கப்படுவார்களோ அந்த நாளில் இந்த மக்களால் ஸஜ்தா செய்திட முடியாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கெண்டைக்காலைவிட்டு (திரை) அகற்றப்பட்டுவிடும் நாளில், அவர்களோ (அந்நாளின்போது) சிரம்பணிவதின் பால் அழைக்கப்படுவர், ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்தி பெறமாட்டார்கள்.
Saheeh International
The Day the shin will be uncovered and they are invited to prostration but they [i.e., the disbelievers] will not be able,
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ وَقَدْ كَانُوْا یُدْعَوْنَ اِلَی السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ ۟
خَاشِعَةًதாழ்ந்து இருக்கும்اَبْصَارُهُمْஅவர்களின் பார்வைகள்تَرْهَقُهُمْஅவர்களை சூழும்ذِلَّةٌ ؕஇழிவுوَقَدْ كَانُوْا يُدْعَوْنَஅவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்اِلَى السُّجُوْدِ وَهُمْ سٰلِمُوْنَ‏தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது
காஷி'அதன் அBப்ஸாருஹும் தர்ஹகுஹும் தில்லது(ன்)வ் வ கத் கானூ யுத்'அவ்ன இலஸ்ஸுஜூதி வ ஹும் ஸாலிமூன்
முஹம்மது ஜான்
அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதை நிராகரித்து விட்டனர்.)
IFT
இவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு இவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும். இவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ஸஜ்தா செய்யுமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வந்தது. (அப்போது இவர்கள் மறுத்துக் கொண்டிருந்தார்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய பார்வைகளெல்லாம் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும், (இம்மையில்) சுகமானவர்களாக இருந்த சமயத்தில் சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அவர்கள் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
Saheeh International
Their eyes humbled, humiliation will cover them. And they used to be invited to prostration while they were sound.
فَذَرْنِیْ وَمَنْ یُّكَذِّبُ بِهٰذَا الْحَدِیْثِ ؕ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَیْثُ لَا یَعْلَمُوْنَ ۟ۙ
فَذَرْنِىْஎன்னை(யும்) விட்டு விடுவீராக!وَمَنْ يُّكَذِّبُபொய்ப் பிப்பவர்களையும்بِهٰذَا الْحَـدِيْثِ‌ؕஇந்த வேதத்தைسَنَسْتَدْرِجُهُمْஅவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம்مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ‏அவர்கள் அறியாத விதத்தில்
Fபதர்னீ வ ம(ன்)ய் யுகத்திBபு Bபிஹாதல் ஹதீதி ஸனஸ்தத் ரிஜுஹும் மின் ஹய்து லா யஃலமூன்
முஹம்மது ஜான்
எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நீர் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டு விடுவீராக. அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களை சிரமத்தில் சிக்க வைப்போம்.
IFT
ஆகவே (நபியே!) நீர் இந்த வேதவாக்கைப் பொய்யெனத் தூற்றுபவர்களின் விவகாரத்தை என்னிடம் விட்டுவிடும். படிப்படியாக இவர்கள் அறியாத விதத்தில் அழிவின் பக்கம் இவர்களை நாம் கொண்டு செல்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, என்னையும் இச்செய்தியைப் பொய்யாக்குபவரையும் விட்டுவிடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் படிப்படியாக அவர்களை நாம் பிடிப்போம்.
Saheeh International
So leave Me, [O Muhammad], with [the matter of] whoever denies this statement [i.e., the Qur’an]. We will progressively lead them [to punishment] from where they do not know.
وَاُمْلِیْ لَهُمْ ؕ اِنَّ كَیْدِیْ مَتِیْنٌ ۟
وَاُمْلِىْநாம் தவணை அளிப்போம்لَهُمْ‌ؕஅவர்களுக்குاِنَّநிச்சயமாகكَيْدِىْஎனது சூழ்ச்சிمَتِيْنٌ‏மிக பலமானது
வ உம்லீ லஹும்; இன்ன கய்தீ மதீன்
முஹம்மது ஜான்
அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம் சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.)
IFT
நான் இவர்களுடைய கடிவாளத்தைத் தளர்த்தி விட்டிருக்கின்றேன். எனது சூழ்ச்சி மிக உறுதியானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுக்குச் சிறிது தாமதம் கொடுப்பேன், நிச்சயமாக என்னுடைய சூழ்ச்சி மிக்க பலமானது.
Saheeh International
And I will give them time. Indeed, My plan is firm.
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَ ۟ۚ
اَمْ تَسْــٴَــلُهُمْஇவர்களிடம் நீர் கேட்கின்றீரா?اَجْرًاகூலி ஏதும்فَهُمْஅவர்கள்مِّنْ مَّغْرَمٍகடனால்مُّثْقَلُوْنَ‌ۚ‏சிரமப்படுகிறார்களா?
அம் தஸ்'அலுஹும் அஜ்ரன் Fபஹும் மின் மக்ரமின் முத்கலூன்
முஹம்மது ஜான்
நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அவர்களிடம் (வரியாக) கூலி ஏதும் கேட்கிறீரா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அந்த வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கிவிட்டனரா?
IFT
என்ன, நீர் இவர்களிடம் கூலி எதுவும் கேட்கிறீரா? அவ்வாறு இவர்கள் கடன் சுமையால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (நபியே!) அவர்களிடம் ஏதாவது கூலியை நீர் கேட்கின்றீரா? அதனால், அவர்கள் கடனால் பளுவாக்கப்பட்டவர்களா?
Saheeh International
Or do you ask of them a payment, so they are by debt burdened down?
اَمْ عِنْدَهُمُ الْغَیْبُ فَهُمْ یَكْتُبُوْنَ ۟
اَمْ عِنْدَهُمُஅவர்களிடம் இருக்கின்றதா?الْغَيْبُமறைவானவைفَهُمْஅவர்கள்يَكْتُبُوْنَ‏எழுதுகின்றனரா?
அம் 'இன்தஹுமுல் கய்Bபு Fபஹும் யக்துBபூன்
முஹம்மது ஜான்
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா?
IFT
அல்லது மறைவானவற்றைப் பற்றிய ஞானம் இவர்களுக்கு இருந்து அதனை இவர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்களா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது மறைவானது அவர்களிடம் இருந்து (அதிலிருந்து தங்களுக்கு வேண்டிய ஆதாரங்களை) அவர்கள் எழுதுகின்றார்களா?
Saheeh International
Or have they [knowledge of] the unseen, so they write [it] down?
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِ ۘ اِذْ نَادٰی وَهُوَ مَكْظُوْمٌ ۟ؕ
فَاصْبِرْபொறுமை காப்பீராக!لِحُكْمِதீர்ப்புக்காகرَبِّكَஉமது இறைவனின்وَلَا تَكُنْநீர் ஆகிவிடாதீர்كَصَاحِبِ الْحُوْتِ‌ۘமீனுடையவரைப்போல்اِذْ نَادٰىஅவர் அழைத்த நேரத்தில்وَهُوَஅவர்مَكْظُوْمٌؕ‏கடும் கோபமுடையவராக
Fபஸ்Bபிர் லிஹுக்மி ரBப்Bபிக வலா தகுன் கஸாஹிBபில் ஹூத்; இத் னாதா வ ஹுவ மக்ளூம்
முஹம்மது ஜான்
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காக (நபியே!) நீர் பொறுத்திருப்பீராக; மீனுடையவரைப் போன்று (அவசரப்பட்டவர்) ஆகிவிடவேண்டாம்; அவர் துன்பம் நிறைந்தவராகத் (தன் இறைவனை) அழைத்தபோது:
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) உமது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருப்பீராக. (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (-யூனுஸை)ப் போல் நீரும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்ப்பீராக!
IFT
சரி! உம் அதிபதியின் தீர்ப்பு வரும்வரை பொறுமையாய் இரும். மேலும் மீன் மனிதர் (யூனுஸ்) போன்று ஆகி விடாதீர். அவர் துயரத்திற்குள்ளாகி இருந்த நிலையில் அழைத்த போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! மேலும், மீனுடையவரைப் போன்று நீர் ஆகிவிட வேண்டாம், அவர் துக்கம் நிரம்பப்பெற்றவராக (பிரார்த்தனை செய்து) அழைத்தபொழுது,
Saheeh International
Then be patient for the decision of your Lord, [O Muhammad], and be not like the companion of the fish [i.e., Jonah] when he called out while he was distressed.
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَآءِ وَهُوَ مَذْمُوْمٌ ۟
لَوْلَاۤ اَنْ تَدٰرَكَهٗ نِعْمَةٌஅவரை அடைந்திருக்காவிட்டால்/அருள்مِّنْ رَّبِّهٖஅவருடைய இறைவனிடமிருந்துلَنُبِذَஎறியப்பட்டிருப்பார்بِالْعَرَآءِஒரு பெருவெளியில்وَهُوَஅவர் இருந்தார்مَذْمُوْمٌ‏பழிப்பிற்குரிய வராகத்தான்
லவ் லா அன் ததார கஹூ னிஃமதும் மிர் ரBப்Bபிஹீ லனுBபித Bபில்'அரா'இ வ ஹுவ மத்மூம்
முஹம்மது ஜான்
அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
அப்துல் ஹமீது பாகவி
அவருடைய இறைவனின் அருள் அவரை அடையாதிருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார்.
IFT
அவருடைய அதிபதியின் கருணை அவருக்குக் கிடைத் திராவிட்டால், அவர் இழிவுக்கு ஆளாகி பொட்டல்வெளியில் எறியப்பட்டிருப்பார்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவருடைய இரட்சகனிடமிருந்து அருட்கொடை அவரை அடையாதிருந்தால், வெட்டவெளியில் பழிக்கப்பட்டவராக அவர் எறியப்பட்டு இரு(ந்திரு)ப்பார்.
Saheeh International
If not that a favor [i.e., mercy] from his Lord overtook him, he would have been thrown onto the naked shore while he was censured.
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِیْنَ ۟
فَاجْتَبٰهُபிறகு, அவரை தேர்ந்தெடுத்தான்رَبُّهٗஅவரது இறைவன்فَجَعَلَهٗஅவரை ஆக்கினான்مِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில்
Fபஜ்தBபாஹு ரBப்Bபுஹூ Fபஜ'அலஹூ மினஸ் ஸாலிஹீன்
முஹம்மது ஜான்
ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
(இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கிவைத்தான்.
IFT
இறுதியில் அவருடைய அதிபதி அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். மேலும், அவரை நல்லடியார்களில் ஒருவராயும் சேர்த்துக் கொண்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவருடைய இரட்சகன் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான், பின்னர் அவரை நல்லோர்களில் உள்ளவராக ஆக்கி வைத்தான்.
Saheeh International
And his Lord chose him and made him of the righteous.
وَاِنْ یَّكَادُ الَّذِیْنَ كَفَرُوْا لَیُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَیَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۟ۘ
وَاِنْ يَّكَادُநிச்சயமாக நெருங்கினார்(கள்)الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لَيُزْلِقُوْنَكَஉம்மை நீக்கிவிடبِاَبْصَارِهِمْதங்கள் பார்வைகளால்لَمَّا سَمِعُواஅவர்கள் செவியுற்றபோதுالذِّكْرَஅறிவுரையைوَيَقُوْلُوْنَஇன்னும் அவர்கள் கூறினார்கள்اِنَّهٗநிச்சயமாக அவர்لَمَجْنُوْنٌ‌ۘ‏ஒரு பைத்தியக்காரர்தான்
வ இ(ன்)ய்-யகாதுல் லதீன கFபரூ ல-யுZஜ்லிகூனக BபிஅBப்ஸாரிஹிம் லம்மா ஸமி'உத்-திக்ர வ யகூலூன இன்னஹூ லமஜ்னூன்
முஹம்மது ஜான்
மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்தி விடுபவர்களைப்போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். மேலும், அவர்கள் (உம்மைப் பற்றி) நிச்சயமாக, இவர் பைத்தியக்காரர்தான் என்று கூறுகின்றனர்.
IFT
இந்த நிராகரிப்பாளர்கள் நல்லுரையை (குர்ஆனை)ச் செவியுறும்போது உம்முடைய பாதங்களைப் பிறழச் செய்துவிடு வதைப் போன்று உம்மை முறைத்துப் பார்க்கின்றார்கள். மேலும், “நிச்சயமாக இவர் ஒரு பைத்தியக்காரர்!” என்றும் கூறுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) நிராகரிப்போர் (குர் ஆனுடைய) உபதேசத்தைக் கேட்கும்பொழுது அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உம்மை வீழ்த்திவிட நெருங்குகின்றனர், (உம்மைப்பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்(தாம்) என்றும் கூறுகின்றனர்.
Saheeh International
And indeed, those who disbelieve would almost make you slip with their eyes [i.e., looks] when they hear the message, and they say, "Indeed, he is mad."
وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِیْنَ ۟۠
وَمَا هُوَஅது இல்லைاِلَّا ذِكْرٌஓர் அறிவுரையே தவிரلِّلْعٰلَمِيْنَ‏அகிலத்தார்களுக்கு
வமா ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
முஹம்மது ஜான்
ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நீர் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
IFT
ஆனால் உண்மை நிலை யாதெனில், இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையாகவே இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நாம் உம்மீது இறக்கிவைத்திருக்கும் திக்ரு எனும்) இது, அகிலத்தார்க்கு உபதேசமே தவிர (வேறு) இல்லை.
Saheeh International
But it is not except a reminder to the worlds.