71. ஸூரத்து நூஹ்

மக்கீ, வசனங்கள்: 28

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنَاஅனுப்பினோம்نُوْحًاநூஹைاِلٰى قَوْمِهٖۤஅவருடைய மக்களின் பக்கம்اَنْ اَنْذِرْஏனெனில், நீர் எச்சரிப்பீராக!قَوْمَكَஉமது மக்களைمِنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِيَهُمْஅவர்களுக்கு வருவதற்குعَذَابٌதண்டனைاَلِيْمٌ‏வலி தரக்கூடிய
இன்னா அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ அன் அன்திர் கவ்மக மின் கBப்லி அ(ன்)ய் யா'தியஹும் 'அதாBபுன் அலீம்
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) ‘‘நீர் உமது மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக'' என்று கட்டளையிட்டோம்.
IFT
நாம் நூஹை இந்த ஏவுரையுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தவரின்பால் “துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு வரும் முன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்று (தூதராக) நாம் அனுப்பி வைத்தோம்.
Saheeh International
Indeed, We sent Noah to his people, [saying], "Warn your people before there comes to them a painful punishment."
قَالَ یٰقَوْمِ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ
قَالَஅவர் கூறினார்يٰقَوْمِஎன் மக்களே!اِنِّىْநிச்சயமாக நான்لَـكُمْஉங்களுக்குنَذِيْرٌஎச்சரிப்பாளர்مُّبِيْنٌۙ‏தெளிவான
கால யா கவ்மி இன்னீ லகும் னதீரும் முBபீன்
முஹம்மது ஜான்
“என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
(அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) கூறினார்: ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
IFT
அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று (அவர்களிடம்) கூறினார்.
Saheeh International
He said, "O my people, indeed I am to you a clear warner -
اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِیْعُوْنِ ۟ۙ
اَنِ اعْبُدُواஅதாவது, நீங்கள் வணங்குங்கள்!اللّٰهَஅல்லாஹ்வைوَاتَّقُوْهُஇன்னும் அவனை அஞ்சுங்கள்وَاَطِيْعُوْنِۙ‏இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
அனிஃ-Bபுதுல் லாஹ வத்த கூஹு வ அதீ'ஊன்
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்.
IFT
(நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்:) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வை (அவன் ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள், இன்னும், அவனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், எனக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள்”.
Saheeh International
To worship Allah, fear Him and obey me.
یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرْكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا یُؤَخَّرُ ۘ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
يَغْفِرْஅவன் மன்னிப்பான்لَـكُمْஉங்களுக்குمِّنْ ذُنُوْبِكُمْஉங்கள் பாவங்களைوَيُؤَخِّرْكُمْஇன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்اِلٰٓى اَجَلٍதவணை வரைمُّسَمًّى‌ؕகுறிப்பிட்டاِنَّநிச்சயமாகاَجَلَதவணைاللّٰهِஅல்லாஹ்வின்اِذَا جَآءَவந்துவிட்டால்لَا يُؤَخَّرُ‌ۘஅது பிற்படுத்தப்படாதுلَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏நீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யு'அக்கிர்கும் இலா அஜலிம் முஸம்மா; இன்னா அஜலல் லாஹி இதா ஜா'அ லா யு'அக்கர்; லவ் குன்தும் தஃலமூன்
முஹம்மது ஜான்
“(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்கள் குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரை உங்களை (அமைதியாக வாழ) விட்டு வைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது (இதை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?''
IFT
அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் உங்களை விட்டு வைப்பான். திண்ணமாக அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டால் அது ஒத்தி வைக்கப்பட மாட்டாது. அந்தோ, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(அவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான், இன்னும், குறிப்பிடப்பட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழவிட்டு)ப் பிற்ப்படுத்தி வைப்பான், நிச்சயமாக அல்லாஹ்வுடைய தவணை-அது வந்துவிடுமானால் அது பிற்படுத்தப்படமாட்டாது, (இதனை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
Saheeh International
He [i.e., Allah] will forgive you of your sins and delay you for a specified term. Indeed, the time [set by] Allah, when it comes, will not be delayed, if you only knew."
قَالَ رَبِّ اِنِّیْ دَعَوْتُ قَوْمِیْ لَیْلًا وَّنَهَارًا ۟ۙ
قَالَஅவர் கூறினார்رَبِّஎன் இறைவா!اِنِّىْநிச்சயமாக நான்دَعَوْتُஅழைத்தேன்قَوْمِىْஎனது மக்களைلَيْلًاஇரவிலும்وَّنَهَارًا ۙ‏பகலிலும்
கால ரBப்Bபி இன்னீ த'அவ்து கவ்மீ லய்ல(ன்)வ் வ னஹரா
முஹம்மது ஜான்
பின்னர் அவர்: “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதை மறுத்து அவரைப் புறக்கணித்து விடவே, அவர் தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் மக்களை இரவு பகலாக அழைத்தேன்.
IFT
அவர் பணிந்து கூறினார்: “என் அதிபதியே! நான் என் சமூகத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர் நீண்ட காலம் ஏகத்துவப்பிரச்சாரம் செய்தும் அவரைப் புறக்கணித்து விடவே,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தாரை (உன் வழியில்) இரவிலும், பகலிலும் அழைத்தேன்” என்று கூறினார்.
Saheeh International
He said, "My Lord, indeed I invited my people [to truth] night and day.
فَلَمْ یَزِدْهُمْ دُعَآءِیْۤ اِلَّا فِرَارًا ۟
فَلَمْ يَزِدْஅதிகப்படுத்தவில்லைهُمْஅவர்களுக்குدُعَآءِىْۤஎனது அழைப்புاِلَّاதவிரفِرَارًا‏விரண்டோடுவதை
Fபலம் யZஜித் ஹும் து'ஆ 'ஈ இல்லா Fபிராரா
முஹம்மது ஜான்
“ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.
அப்துல் ஹமீது பாகவி
வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என் அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
IFT
ஆனால், என்னுடைய அழைப்போ விரண்டோடுவதையே அவர்களிடம் அதிகப்படுத்தியது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அப்போது என்னுடைய அழைப்பு, அவர்களுக்கு வெருண்டோடுவதையே அன்றி, (வேறொன்றையும்) அதிகப்படுத்தவில்லை
Saheeh International
But my invitation increased them not except in flight [i.e., aversion].
وَاِنِّیْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْۤا اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِیَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا ۟ۚ
وَاِنِّىْநிச்சயமாக நான்كُلَّمَا دَعَوْتُهُمْஅவர்களை அழைத்த போதெல்லாம்لِتَغْفِرَநீ மன்னிப்பதற்காகلَهُمْஅவர்களைجَعَلُوْۤاஆக்கிக் கொண்டனர்اَصَابِعَهُمْதங்கள் விரல்களைفِىْۤ اٰذَانِهِمْதங்கள் காதுகளில்وَاسْتَغْشَوْاஇன்னும் மூடிக்கொண்டனர்ثِيَابَهُمْதங்கள் ஆடைகளால்وَاَصَرُّوْاஇன்னும் பிடிவாதம் பிடித்தனர்وَاسْتَكْبَرُواஇன்னும் பெருமையடித்தனர்اسْتِكْبَارًا‌ ۚ‏பெருமையடித்தல்
வ இன்னீ குல்லமா த'அவ்துஹும் லிதக்Fபிர லஹும் ஜ'அலூ அஸாBபி'அஹும் Fபீ ஆதானிஹிம் வஸ்தக்ஷவ் தியாBபஹும் வ அஸார்ரூ வஸ்தக்Bபருஸ் திக்Bபாரா
முஹம்மது ஜான்
“அன்றியும்: நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்; மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்கள் காதுகளில் தங்கள் விரல்களைப் புகுத்தி அடைத்துக் கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள்.
IFT
மேலும், நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொண்டார்கள். மேலும், தம் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டார்கள். மேலும், தம்முடைய தவறான நடத்தையில் பிடிவாதமாய் இருந்தார்கள். மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நிச்சயமாக நான்-“அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பதற்காக (உன்பால்) நான் அவர்களை அழைத்த பொழுதெல்லாம் (அதைக்கேட்காதிருக்க) தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை விட்டுக்கொண்டார்கள், (என்னைப் பார்க்காதிருக்க) தங்கள் ஆடைகளைக் கொண்டு தங்(களின் முகங்க)ளை மூடிக்கொண்டுமிருந்தனர், மேலும், (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தனர், பெரும் அகந்தையாகவும் அகந்தை கொண்டனர்.
Saheeh International
And indeed, every time I invited them that You may forgive them, they put their fingers in their ears, covered themselves with their garments, persisted, and were arrogant with [great] arrogance.
ثُمَّ اِنِّیْ دَعَوْتُهُمْ جِهَارًا ۟ۙ
ثُمَّபிறகுاِنِّىْநிச்சயமாக நான்دَعَوْتُهُمْஅவர்களை அழைத்தேன்جِهَارًا ۙ‏உரக்க
தும்ம இன்னீ த'அவ் துஹும் ஜிஹாரா
முஹம்மது ஜான்
“பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.
அப்துல் ஹமீது பாகவி
பிறகு, நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன்.
IFT
மீண்டும் நான் அவர்களை உரக்கக் கூவி அழைத்தேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னும், நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமாக அழைத்தேன்”
Saheeh International
Then I invited them publicly.
ثُمَّ اِنِّیْۤ اَعْلَنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًا ۟ۙ
ثُمَّபிறகுاِنِّىْۤநிச்சயமாக நான்اَعْلَـنْتُவெளிப்படையாகப் பேசினேன்لَهُمْஅவர்களிடம்وَاَسْرَرْتُஇன்னும் இரகசியமாகப் பேசினேன்لَهُمْஅவர்களிடம்اِسْرَارًا ۙ‏தனியாக, இரகசியமாக பேசுதல்
தும்மா இன்னீ அஃலன்து லஹும் வ அஸ்ரர்து லஹும் இஸ்ராரா
முஹம்மது ஜான்
“அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும். நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன்.
IFT
பின் நான் வெளிப்படையாகவும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்தரங்கமாகவும் விளக்கினேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னும் நிச்சயமாக நான் அவர்களுக்கு (அழைப்பை) பகிரங்கப்படுத்தினேன், அவர்களுக்கு (எனது பிரச்சாரத்தை) மறைமுகமாக மறைத்தும் செய்தேன்.
Saheeh International
Then I announced to them and [also] confided to them secretly
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۟ۙ
فَقُلْتُநான் கூறினேன்اسْتَغْفِرُوْاநீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்!رَبَّكُمْؕஉங்கள் இறைவனிடம்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்غَفَّارًا ۙ‏மகா மன்னிப்பாளனாக
Fபகுல்துஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் இன்னஹூ கான கFப்Fபாரா
முஹம்மது ஜான்
மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்றும் கூறினேன்.
IFT
நான் கூறினேன்: “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (முந்திய உங்கள் பாவங்களுக்காக) “உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்” என்றும் கூறினேன்.
Saheeh International
And said, 'Ask forgiveness of your Lord. Indeed, He is ever a Perpetual Forgiver.
یُّرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا ۟ۙ
يُّرْسِلِஅவன் அனுப்புவான்السَّمَآءَமழையைعَلَيْكُمْஉங்களுக்குمِّدْرَارًا ۙ‏தாரை தாரையாக
யுர்ஸிலிஸ் ஸமா'அ 'அலய்கும் மித்ராரா
முஹம்மது ஜான்
“(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்.
IFT
அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்”
Saheeh International
He will send [rain from] the sky upon you in [continuing] showers
وَّیُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَیَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّیَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًا ۟ؕ
وَّيُمْدِدْكُمْஇன்னும் உங்களுக்கு உதவுவான்بِاَمْوَالٍசெல்வங்களாலும்وَّبَنِيْنَஆண் பிள்ளைகளாலும்وَيَجْعَلْஇன்னும் ஏற்படுத்துவான்لَّـكُمْஉங்களுக்குجَنّٰتٍதோட்டங்களைوَّيَجْعَلْஇன்னும் ஏற்படுத்துவான்لَّـكُمْஉங்களுக்குاَنْهٰرًا ؕ‏நதிகளை
வ யும்தித்கும் Bபி அம் வாலி(ன்)வ் வ Bபனீன வ யஜ்'அல் லகும் ஜன்னாதி(ன்)வ் வ யஜ்'அல் லகும் அன்ஹாரா
முஹம்மது ஜான்
“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.
அப்துல் ஹமீது பாகவி
பொருள்களையும், ஆண் மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் நதிகளையும் ஓட வைப்பான்.
IFT
செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“செல்வங்களையும், ஆண் மக்களையும் (கொடுப்பது) கொண்டு, உங்களுக்கு உதவி புரிவான், உங்களுக்காகத் தோட்டங்களையும் ஆக்குவான், உங்களுக்காக ஆறுகளையும் (அவற்றில்) ஆக்குவான்”
Saheeh International
And give you increase in wealth and children and provide for you gardens and provide for you rivers.
مَا لَكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا ۟ۚ
مَا لَـكُمْஉங்களுக்கு என்ன?لَا تَرْجُوْنَநீங்கள் பயப்படுவதில்லைلِلّٰهِஅல்லாஹ்வின்وَقَارًا‌ ۚ‏கண்ணியத்தை
மா லகும் லா தர்ஜூன லில்லாஹி வகாரா
முஹம்மது ஜான்
“உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் நம்பவில்லை!
IFT
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வுக்கு மகத்துவமும் மாண்பும் ஏதேனும் இருக்கிறது என்ற உணர்வே உங்களிடம் இல்லையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் அறிந்து (அவனைப்பயந்து) கொள்ளாமலிருக்க உங்களுக்கென்ன நேர்ந்தது?”
Saheeh International
What is [the matter] with you that you do not attribute to Allah [due] grandeur
وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا ۟
وَقَدْதிட்டமாகخَلَقَكُمْஅவன் உங்களை படைத்தான்اَطْوَارًا‏பல நிலைகளாக
வ கத் கலககும் அத் வாரா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களை விதவிதமாகவும் அவன் படைத்திருக்கிறான்.
IFT
உண்மையில் அவன் உங்களைப் பல நிலைகளாகப் படைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பல நிலைகளிலும் உங்களை அவன் நிச்சயமாகப் படைத்தான்.
Saheeh International
While He has created you in stages?
اَلَمْ تَرَوْا كَیْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۟ۙ
اَلَمْ تَرَوْاநீங்கள் பார்க்கவில்லையா?كَيْفَஎப்படிخَلَقَபடைத்தான்اللّٰهُஅல்லாஹ்سَبْعَஏழுسَمٰوٰتٍவானங்களைطِبَاقًا ۙ‏அடுக்கடுக்காக
அலம் தரவ் கய்Fப கலகல் லாஹு ஸBப்'அ ஸமாவாதின் திBபாகா
முஹம்மது ஜான்
“ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா,
அப்துல் ஹமீது பாகவி
ஏழு வானங்களையும், அடுக்கடுக்காக எவ்வாறு அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?
IFT
அல்லாஹ் எவ்வாறு ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதையும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஏழு வானங்களை, அடுக்கடுக்காக அல்லாஹ் எவ்வாறு படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா,”
Saheeh International
Do you not consider how Allah has created seven heavens in layers
وَّجَعَلَ الْقَمَرَ فِیْهِنَّ نُوْرًا وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا ۟
وَّجَعَلَஇன்னும் அவன் ஆக்கினான்الْقَمَرَசந்திரனைفِيْهِنَّஅவற்றில்نُوْرًا ۙஒளியாகوَّجَعَلَஇன்னும் ஆக்கினான்الشَّمْسَசூரியனைسِرَاجًا‏விளக்காக
வ ஜ'அலல் கமர Fபீஹின்ன னூர(ன்)வ் வ ஜ'அலஷ் ஷம்ஸ ஸிராஜா
முஹம்மது ஜான்
“இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே, அவற்றில் சந்திரனைப் பிரதிபலிக்கும் வெளிச்சமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அமைத்தான்.
IFT
அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“இன்னும், அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான்.”
Saheeh International
And made the moon therein a [reflected] light and made the sun a burning lamp?
وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًا ۟ۙ
وَاللّٰهُஅல்லாஹ்தான்اَنْۢبَتَكُمْஉங்களை முளைக்க வைத்தான்مِّنَ الْاَرْضِபூமியில் இருந்துنَبَاتًا ۙ‏முளைக்க வைத்தல்
வல்லாஹு அம்Bபதகும் மினல் அர்ளி னBபாதா
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்).
IFT
மேலும், அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து வியக்கத்தக்க விதத்தில் முளைக்கச் செய்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “அல்லாஹ் உங்களை(ப்புற் பூண்டுகளைப்போல்) பூமியின் மண்ணிலிருந்து உற்பத்தி செய்வதாக உற்பத்தி செய்தான்.”
Saheeh International
And Allah has caused you to grow from the earth a [progressive] growth.
ثُمَّ یُعِیْدُكُمْ فِیْهَا وَیُخْرِجُكُمْ اِخْرَاجًا ۟
ثُمَّபிறகுيُعِيْدُكُمْஅவன் உங்களை மீட்பான்فِيْهَاஅதில்தான்وَيُخْرِجُكُمْஇன்னும் அவன் உங்களை வெளியேற்றுவான்اِخْرَاجًا‏வெளியேற்றுதல்
தும்ம யு'ஈதுகும் Fபீஹா வ யுக்ரிஜுகும் இக்ராஜா
முஹம்மது ஜான்
“பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அதில்தான் உங்களை (மரணிக்கவைத்து அதில்) சேர்த்துவிடுவான். (அதிலிருந்தே) மற்றொரு முறையும் உங்களை வெளிப்படுத்துவான்.
IFT
பின்னர், உங்களை இதே பூமிக்குத் திரும்பக் கொண்டு செல்வான். மேலும், அதிலிருந்து திடீரென உங்களை எழுப்பி நிறுத்துவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“பின்னர் அதில் உங்களை (மரணிக்கச் செய்து) அவன் மீளவைப்பான், மேலும், (அதிலிருந்தே) உங்களை வெளிப்படுத்துவதாக அவன் வெளிப்படுத்துவான்.
Saheeh International
Then He will return you into it and extract you [another] extraction.
وَاللّٰهُ جَعَلَ لَكُمُ الْاَرْضَ بِسَاطًا ۟ۙ
وَاللّٰهُஅல்லாஹ்جَعَلَஆக்கினான்لَـكُمُஉங்களுக்குالْاَرْضَபூமியைبِسَاطًا ۙ‏விரிப்பாக
வல்லாஹு ஜ'அல லகுமுல் அர்ள Bபிஸாதா
முஹம்மது ஜான்
“அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான் உங்களுக்குப் பூமியை விரிப்பாக அமைத்தான்.
IFT
மேலும், அல்லாஹ் பூமியை உங்களுக்காக விரிப்பாக அமைத்தான்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அன்றியும் அல்லாஹ் உங்களுக்குப் பூமியை விரிப்பாக ஆக்கினான்”.
Saheeh International
And Allah has made for you the earth an expanse
لِّتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا ۟۠
لِّـتَسْلُكُوْاநீங்கள் செல்வதற்காகمِنْهَاஅதில்سُبُلًاபல பாதைகளில்فِجَاجًا‏விசாலமான
லிதஸ்லுகூ மின்ஹா ஸுBபுலன் Fபிஜாஜா
முஹம்மது ஜான்
“அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்” (என்றும் போதித்தார்).  
அப்துல் ஹமீது பாகவி
அதில் (பல பாகங்களுக்கும்) நீங்கள் செல்வதற்காக, விரிவான பாதைகளையும் அமைத்தான்'' (என்றெல்லாம் அவர் தன் மக்களுக்குக் கூறினார்).''
IFT
நீங்கள் அதன் திறந்த பாதைகளில் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அதில் உள்ள விரிவான பாதைகளில் நீங்கள் செல்லும் பொருட்டு” (என்றெல்லாம் தன் சமூகத்தாரிடம் கூறினார்.)
Saheeh International
That you may follow therein roads of passage.'"
قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِیْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ یَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا ۟ۚ
قَالَகூறினார்نُوْحٌநூஹ்رَّبِّஎன் இறைவா!اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عَصَوْنِىْஎனக்கு மாறுசெய்தனர்وَاتَّبَعُوْاஇன்னும் பின்பற்றினர்مَنْஎவன்لَّمْஅதிகப்படுத்தவில்லையோيَزِدْهُஅவனுக்குمَالُهٗஅவனுடைய செல்வமும்وَوَلَدُهٗۤஇன்னும் அவனுடைய பிள்ளையும்اِلَّا خَسَارًا‌ ۚ‏நஷ்டத்தைத் தவிர
கால னூஹுர் ரBப்Bபி இன்னஹும் 'அஸவ்னீ வத்தBப'ஊ மல் லம் யZஜித் ஹு மாலுஹூ வ வலதுஹூ இல்லா கஸாரா
முஹம்மது ஜான்
நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர்.
IFT
நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இவர்கள் என் பேச்சை நிராகரித்து விட்டார்கள். மேலும், இவர்கள் சில (தலைவ)ர்களைப் பின்பற்றியுள்ளார்கள். அந்தத் தலைவர்களுக்குத் தங்கள் செல்வமும் பிள்ளைகளும் அதிக நஷ்டத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பின்னும்) நூஹ் கூறினார், “என் இரட்சகனே! நிச்சயமாக அவர்கள் என(து கட்டளை)க்கு மாறு செய்து விட்டனர், அன்றியும், எவருக்கு அவருடைய செல்வமும், அவருடைய மக்களும் நஷ்டத்தைத்தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவரையே அவர்கள் பின்பற்றினர்”.
Saheeh International
Noah said, "My Lord, indeed they have disobeyed me and followed him whose wealth and children will not increase him except in loss.
وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًا ۟ۚ
وَمَكَرُوْاஇன்னும் சூழ்ச்சி செய்தார்கள்مَكْرًاசூழ்ச்சிكُبَّارًا‌ ۚ‏மிகப் பெரிய
வ மகரூ மக்ரன் குBப்Bபாரா
முஹம்மது ஜான்
“மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.”
அப்துல் ஹமீது பாகவி
பெரும் பெரும் சூழ்ச்சிகளையும் (எனக்கெதிராக) செய்கின்றனர்.
IFT
இவர்கள் பெரியதொரு சூழ்ச்சி வலையை விரித்து வைத்திருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், மிகப் பெரிய சூழ்ச்சியாக அவர்கள் சூழ்ச்சி செய்தனர்”.
Saheeh International
And they conspired an immense conspiracy
وَقَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ۙ۬ وَّلَا یَغُوْثَ وَیَعُوْقَ وَنَسْرًا ۟ۚ
وَ قَالُوْاஇன்னும் கூறினார்கள்لَا تَذَرُنَّநீங்கள் விட்டுவிடாதீர்கள்اٰلِهَتَكُمْஉங்கள் தெய்வங்களைوَلَا تَذَرُنَّஇன்னும் விட்டுவிடாதீர்கள்وَدًّا وَّلَا سُوَاعًا  ۙவத்து/இன்னும் சுவாஃوَّ لَا يَغُوْثَஇன்னும் யகூஸ்وَيَعُوْقَஇன்னும் யவூக்وَنَسْرًا‌ ۚ‏இன்னும் நஸ்ர்
வ காலூ லா ததருன்ன ஆலிஹதகும் வலா ததருன்ன வத்த(ன்)வ் வலா ஸுவா'அ(ன்)வ் வலா யகூத வ ய'ஊக வ னஸ்ரா
முஹம்மது ஜான்
மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
(மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்' (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். ‘ஸுவாஉ' ‘எகூஸ்' ‘யஊக்' ‘நஸ்ர்' (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்'' என்று கூறுகின்றனர்,
IFT
“உங்களுடைய கடவுள்களை விட்டுவிடாதீர்கள். வத், ஸுவாஉ, யஃகூஸ், யஊஃக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை விட்டுவிடாதீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“மேலும், அவர்கள் (தம் சமூகத்தாரிடம்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள், வத்து ஸுவாஉ, எகூஸ், யஊக், நஸ்ர், (ஆகிய விக்கிரகங்)களையும் நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் கூறினார்கள்.
Saheeh International
And said, 'Never leave your gods and never leave Wadd or Suwaʿ or Yaghūth and Yaʿūq and Nasr.'
وَقَدْ اَضَلُّوْا كَثِیْرًا ۚ۬ وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا ضَلٰلًا ۟
وَقَدْதிட்டமாகاَضَلُّوْاஅவர்கள் வழி கெடுத்தனர்كَثِيْرًا‌  ۚபலரைوَلَا تَزِدِநீ அதிகப்படுத்தாதே!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّا ضَلٰلًا‏வழிகேட்டைத் தவிர
வ கத் அளல்லூ கதீ ர(ன்)வ் வலா தZஜிதிள் ளாலிமீன இல்லா ளலாலா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்; ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.”
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக பலரை வழிகெடுத்து விட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!'' (என்றும் பிரார்த்தித்தார்).
IFT
இவர்கள் பலரை வழிகெடுத்திருக்கின்றார்கள். நீயும் இந்தக் கொடுமையாளர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதிலும் முன்னேற்றத்தை அளிக்காதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக அவர்கள் அநேகரை வழி கெடுத்தும் விட்டனர், (ஆகவே, என் இரட்சகனே!) அநியாயக்காரர்களுக்கு வழிக்கேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!” (என்றும் பிரார்த்தித்தார்.)
Saheeh International
And already they have misled many. And, [my Lord], do not increase the wrongdoers except in error."
مِمَّا خَطِیْٓـٰٔتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا ۙ۬ فَلَمْ یَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا ۟
مِّمَّا خَطِٓيْئٰتِهِمْஅவர்களுடைய பாவங்களால்اُغْرِقُوْاஅவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள்فَاُدْخِلُوْاபிறகு, நுழைக்கப்பட்டார்கள்نَارًا  ۙநரகத்தில்فَلَمْ يَجِدُوْاஅவர்கள் காணவில்லைلَهُمْதங்களுக்குمِّنْ دُوْنِ اللّٰهِஅல்லாஹ்வையன்றிاَنْصَارًا‏உதவியாளர்களை
மிம்மா கதீ' ஆதிஹிம் உக்ரிகூ Fப உத்கிலூ னாரன் Fபலம் யஜிதூ லஹும் மின் தூனில் லாஹி அன்ஸாரா
முஹம்மது ஜான்
ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை.
IFT
தங்கள் தவறுகளின் காரணத்தால்தான் அவர்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டார்கள்; மேலும், நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றி உதவுவோர் எவரையும் அவர்கள் பெற்றிடவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக (பெரு வெள்ளத்தில்) அவர்கள் மூழ்கடிக்கப்பட்டு, (பின்னர்) நரகத்திலும் புகுத்தப்பட்டனர், அல்லாஹ்வைத் தவிர அவர்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
Saheeh International
Because of their sins they were drowned and put into the Fire, and they found not for themselves besides Allah [any] helpers.
وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَی الْاَرْضِ مِنَ الْكٰفِرِیْنَ دَیَّارًا ۟
وَ قَالَகூறினார்نُوْحٌநூஹ்رَّبِّஎன் இறைவா!لَا تَذَرْநீ விட்டு விடாதே!عَلَى الْاَرْضِபூமியில்مِنَ الْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களில்دَيَّارًا‏வசிக்கின்ற எவரையும்
வ கால னூஹுர் ரBப்Bபி லா ததர் 'அலல் அர்ளி மினல் காFபிரீன தய்யாரா
முஹம்மது ஜான்
அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், நூஹ் பிரார்தித்தார்: ‘‘என் இறைவனே! பூமியில் இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ வசித்திருக்க விட்டு வைக்காதே!
IFT
மேலும், நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இந்த நிராகரிப்பாளர்களில் எவரையும் பூமியில் வசிக்க விட்டு வைக்காதே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நூஹ் கூறினார், “என் இரட்சகனே! நிராகரிப்போரிலிருந்து பூமியில் வசிக்க ஒருவரையும் நீ விட்டு வைக்காதே!
Saheeh International
And Noah said, "My Lord, do not leave upon the earth from among the disbelievers an inhabitant.
اِنَّكَ اِنْ تَذَرْهُمْ یُضِلُّوْا عِبَادَكَ وَلَا یَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا ۟
اِنَّكَநிச்சயமாக நீاِنْ تَذَرْهُمْஅவர்களை விட்டு விட்டால்يُضِلُّوْاவழிகெடுத்து விடுவார்கள்عِبَادَكَஉனது அடியார்களைوَلَا يَلِدُوْۤاஇன்னும் பெற்றெடுக்க மாட்டார்கள்اِلَّاதவிரفَاجِرًاபாவியைكَفَّارًا‏மிகப் பெரிய நிராகரிப்பாளனை
இன்னக இன் ததர்ஹும் யுளில் லூ 'இBபாதக வலா யலிதூ இல்லா Fபாஜிரன் கFப்Fபாரா
முஹம்மது ஜான்
“நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் (மற்ற) அடியார்களையும் வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் தவிர, (வேறொரு குழந்தையை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.
IFT
நீ இவர்களைவிட்டு வைத்தால் இவர்கள் உன் அடிமைகளை வழிகெடுத்து விடுவார்கள். மேலும் இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவனாகவும் நிராகரிப் பாளனாகவும்தான் இருப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நீ அவர்களை விட்டுவைத்தால் உன்னுடைய (மற்ற) அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள், நிராகரிக்கின்ற பாவியைத் தவிர (வேறு நல்லவர் எவரையும்) அவர்கள் பெற்றெடுக்கவுமாட்டார்கள்” (என்றும்)
Saheeh International
Indeed, if You leave them, they will mislead Your servants and not beget except [every] wicked one and [confirmed] disbeliever.
رَبِّ اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِمَنْ دَخَلَ بَیْتِیَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ وَلَا تَزِدِ الظّٰلِمِیْنَ اِلَّا تَبَارًا ۟۠
رَبِّஎன் இறைவா!اغْفِرْلِىْஎன்னை(யும்) மன்னிப்பாயாக!وَلِـوَالِدَىَّஎன் பெற்றோரையும்وَلِمَنْ دَخَلَநுழைந்து விட்டவரையும்بَيْتِىَஎன் வீட்டில்مُؤْمِنًاநம்பிக்கையாளராகوَّلِلْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களையும்وَالْمُؤْمِنٰتِؕநம்பிக்கை கொண்ட பெண்களையும்وَلَا تَزِدِஅதிகப்படுத்தாதே!الظّٰلِمِيْنَஅநியாயக்காரர்களுக்குاِلَّا تَبَارًا‏அழிவைத் தவிர
ரBப்Bபிக் Fபிர் லீ வ லிவா லிதய்ய வ லிமன் தகல Bபய்திய மு'மின(ன்)வ் வ லில் மு'மினீன வல் மு'மினாதி வலா தZஜிதிள் ளாலிமீன இல்லா தBபாரா
முஹம்மது ஜான்
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).
அப்துல் ஹமீது பாகவி
என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர நீ அதிகப்படுத்தாதே!''
IFT
என் அதிபதியே! எனக்கும் என் தாய் தந்தையருக்கும், என் வீட்டில் இறைநம்பிக்கை கொண்டவனாக நுழைந்திருக்கும் ஒவ்வொருவனுக்கும், மேலும், நம்பிக்கை கொண்ட ஆண் பெண்கள் அனைவருக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், கொடுமைக்காரர்களுக்கு அதிக அழிவைத் தவிர வேறு எதையும் கொடுக்காதே!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என் இரட்சகனே! எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும், விசுவாசம் கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும் விசுவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசுவாசங்கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையே தவிர (வேறு எதையும்) நீ அதிகப்படுத்தாதிருப்பாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்.)
Saheeh International
My Lord, forgive me and my parents and whoever enters my house a believer and the believing men and believing women. And do not increase the wrongdoers except in destruction."