84. ஸூரத்துல் இன்ஷிகாக் (பிளந்து போதல்)

மக்கீ, வசனங்கள்: 25

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
اِذَا السَّمَآءُ انْشَقَّتْ ۟ۙ
اِذَاஎப்பொழுதுالسَّمَآءُவானம்انْشَقَّتْۙபிளந்துவிடும்
இதஸ் ஸமா'உன் ஷக்கத்
முஹம்மது ஜான்
வானம் பிளந்துவிடும் போது-
அப்துல் ஹமீது பாகவி
(உலகம் அழியும் சமயத்தில்) வானம் பிளந்து விடும்போது,
IFT
வானம் பிளக்கின்றபோது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானம் பிளந்து விடும்போது-
Saheeh International
When the sky has split [open]
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ۙ
وَ اَذِنَتْமேலும் அது செவிசாய்க்கும்لِرَبِّهَاதன் இறைவனுக்குوَ حُقَّتْۙமேலும் அது உரித்தானது
வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
முஹம்மது ஜான்
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்துவிடும் போது. (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
IFT
மேலும், அது தன்னுடைய அதிபதியின் கட்டளையை செயல்படுத்தும்போது, இது(தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது (பிளந்து விடவேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது; (அவ்வாறு செவி சாய்ப்பது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டது.
Saheeh International
And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so]
وَاِذَا الْاَرْضُ مُدَّتْ ۟ؕ
وَ اِذَاமேலும், எப்பொழுதுالْاَرْضُபூமிمُدَّتْۙவிரிக்கப்படும்
வ இதல் அர்ளு முத்தத்
முஹம்மது ஜான்
இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
அப்துல் ஹமீது பாகவி
மேலும், பூமி விரிக்கப்படும்போது,
IFT
மேலும், பூமி பரப்பப்பட்டு விடும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியும் (நீண்டதாக) விரிக்கப்பட்டுவிடும்போது-
Saheeh International
And when the earth has been extended
وَاَلْقَتْ مَا فِیْهَا وَتَخَلَّتْ ۟ۙ
وَ اَلْقَتْமேலும் வெளியே எறிந்துவிடும்مَاஎவற்றைفِیْهَاஅதனுள்وَ تَخَلَّتْۙமேலும் வெறுமையாகிவிடும்
வ அல்கத் மா Fபீஹா வ தகல்லத்
முஹம்மது ஜான்
அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் எறிந்து வெறுமனே ஆகிவிடும்போது,
IFT
இன்னும், அது தன்னுள் இருப்பவை அனைத்தையும் வெளியில் எறிந்துவிட்டு, ஏதுமற்றதாய் ஆகிவிடும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்தி அது வெறுமையாகியும் விடும்போது-
Saheeh International
And has cast out that within it and relinquished [it].
وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ۟ؕ
وَ اَذِنَتْமேலும் அது செவிசாய்க்கும்لِرَبِّهَاதன் இறைவனுக்குوَ حُقَّتْؕமேலும் அது அதற்கு உரித்தானதே
வ அதினத் லி ரBப்Bபிஹா வ ஹுக்கத்
முஹம்மது ஜான்
தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அது தன் இறைவனின் கட்டளைக்கு செவிசாய்த்து விடும் (போது மனிதன் தன் செயலுக்குரிய கூலியைப் பெறுவான்). (அவ்வாறே) அதற்கு விதிக்கப்பட்டுள்ளது.
IFT
மேலும், அது தன் அதிபதியின் கட்டளையைச் செயல்படுத்தும்போது, இது (தன் அதிபதியின் கட்டளைக்கு முழுமையாகப் பணிவது)தான் அதற்கு ஏற்றதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது (தன்னுள்ளிருப்பதை வெளிப்படுத்திவிட வேண்டுமெனும்) தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும்விட்டது; (அவ்வாறு செய்வது) அதற்க்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டுவிட்டபோது..
Saheeh International
And has listened [i.e., responded] to its Lord and was obligated [to do so] -
یٰۤاَیُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰی رَبِّكَ كَدْحًا فَمُلٰقِیْهِ ۟ۚ
یٰۤاَیُّهَاالْاِنْسَانُமனிதனேاِنَّكَநிச்சயமாக நீكَادِحٌபாடுபடுபவன்اِلٰیநோக்கிرَبِّكَஉன் இறைவனைكَدْحًاகடுமையாகفَمُلٰقِیْهِۚபின்னர் அவனைச் சந்திப்பாய்
யா அய்யுஹல் இன்ஸானு இன்னக காதிஹுன் இலா ரBப்Bபிக கத் ஹன் Fபமுலாகீஹ்
முஹம்மது ஜான்
மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
அப்துல் ஹமீது பாகவி
மனிதனே! நீ உன் இறைவனிடம் செல்லும் வரை (நன்மையோ தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) சிரமத்துடன் முயற்சி செய்துகொண்டே இருக்கிறாய். (பின்னர், மறுமையில்) அவனை நீ சந்திக்கிறாய்.
IFT
“மனிதனே! நீ இடைவிடாமல் பாடுபட்டு உன் இறைவனின் பக்கம் சென்று கொண்டிருப்பவனாகவும் அவனை நீ சந்திக்கக் கூடியவனாகவும் இருக்கின்றாய்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதனே! நீ உன் இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேலைகளில் ஈடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றாய்; பின்னர் (மறுமையில்) அவனை நீ சந்திக்கிறவனாக இருக்கிறாய்.
Saheeh International
O mankind, indeed you are laboring toward your Lord with [great] exertion and will meet it.
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۟ۙ
فَاَمَّاஆனால்مَنْஎவர்اُوْتِیَகொடுக்கப்படுகிறாரோكِتٰبَهٗதனது குறிப்பேட்டைبِیَمِیْنِهٖۙதனது வலது கையில்
Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹ்
முஹம்மது ஜான்
ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலது கையில் அவருடைய செயலேடு கொடுக்கப்படுகிறதோ,
IFT
எவருடைய வினைப்பட்டியல் அவர் வலக்கையில் கொடுக்கப்படுமோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே (அந்நாளில்) எவர் அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ-
Saheeh International
Then as for he who is given his record in his right hand,
فَسَوْفَ یُحَاسَبُ حِسَابًا یَّسِیْرًا ۟ۙ
فَسَوْفَவிரைவில்یُحَاسَبُவிசாரிக்கப்படுவார்حِسَابًاவிசாரணையாகیَّسِیْرًاۙஎளிதான
Fபஸவ்Fப யுஹாஸBப் ஹிஸாBப(ன்)ய் யஸீரா
முஹம்மது ஜான்
அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.
IFT
அவரிடம் எளிதான கணக்கு வாங்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் மிக்க இலகுவான கேள்வி கணக்காக கணக்குக் கேட்கப்படுவார்.
Saheeh International
He will be judged with an easy account
وَّیَنْقَلِبُ اِلٰۤی اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
وَّ یَنْقَلِبُமேலும் அவர் திரும்புவார்اِلٰۤیபால்اَهْلِهٖதன் குடும்பத்தார்مَسْرُوْرًاؕமகிழ்ச்சியுடன்
வ யன்கலிBபு இலா அஹ்லிஹீ மஸ்ரூரா
முஹம்மது ஜான்
இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர் மகிழ்ச்சியடைந்தவராக(ச் சொர்க்கத்திலுள்ள) தன் குடும்பத்தார்களிடம் திரும்புவார்.
IFT
மேலும், அவர் தம் குடும்பத்தாரை நோக்கி மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வார்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர் மகிழ்ச்சியுடன் (சுவனத்திலுள்ள) தன்னுடைய குடும்பத்தாரிடம் திரும்புவார்.
Saheeh International
And return to his people in happiness.
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖ ۟ۙ
وَ اَمَّاஆனால்مَنْஎவர்اُوْتِیَகொடுக்கப்படுகிறாரோكِتٰبَهٗஅவருடைய குறிப்பேடுوَرَآءَபின்னால்ظَهْرِهٖۙஅவருடைய முதுகிற்கு
வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ வரா'அ ளஹ்ரிஹ்
முஹம்மது ஜான்
ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
அப்துல் ஹமீது பாகவி
எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ,
IFT
ஆனால், எவனுடைய வினைப்பட்டியல் அவன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுமோ
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், எவர்-அவருடைய பதிவுப்புத்தகத்தை அவருடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டாரோ-
Saheeh International
But as for he who is given his record behind his back,
فَسَوْفَ یَدْعُوْا ثُبُوْرًا ۟ۙ
فَسَوْفَவிரைவில்یَدْعُوْاஅழைப்பான்ثُبُوْرًاۙஅழிவை
Fபஸவ்Fப யத்'ஊ துBபூரா
முஹம்மது ஜான்
அவன் (தனக்குக்) “கேடு” தான் எனக் கூவியவனாக-
அப்துல் ஹமீது பாகவி
அவன், (தனக்குக்) கேடுதான் என்று (அப்படியே) சப்தமிடுவான்,
IFT
அவன் மரணத்தை அழைப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர் (தனக்குக் கேடுதான் என்று கூறி அழிவையே) அழைப்பார்.
Saheeh International
He will cry out for destruction
وَّیَصْلٰی سَعِیْرًا ۟ؕ
وَّ یَصْلٰیமேலும் அவன் நுழைவான்سَعِیْرًاؕகொழுந்துவிட்டு எரியும் நெருப்பில்
வ யஸ்லா ஸ'ஈரா
முஹம்மது ஜான்
அவன் நரகத்தில் புகுவான்.
அப்துல் ஹமீது பாகவி
நரகத்தில் நுழைவான்.
IFT
பிறகு, கொழுந்து விட்டெரியும் நரகத்தில் போய் வீழ்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நரகத்திலும் அவர் நுழைவார்.
Saheeh International
And [enter to] burn in a Blaze.
اِنَّهٗ كَانَ فِیْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ۟ؕ
اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்فِیْۤமத்தியில்اَهْلِهٖதனது குடும்பத்தினரின்مَسْرُوْرًاؕமகிழ்ச்சியாக
இன்னஹூ கான Fபீ அஹ்லிஹீ மஸ்ரூரா
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், நிச்சயமாக அவன் (இம்மையிலிருந்த காலமெல்லாம் மறுமையை மறந்து) தன் குடும்பத்தார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான்.
IFT
அவன் தன்னுடைய குடும்பத்தாரிடம் இன்பத்தில் மூழ்கியிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஏனென்றால்,) நிச்சயமாக அவர் (இம்மையில்) தன் குடும்பத்தாருடன் மிக்க ஆனந்தமாக இருந்தார்.
Saheeh International
Indeed, he had [once] been among his people in happiness;
اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ یَّحُوْرَ ۟ۚۛ
اِنَّهٗநிச்சயமாக அவன்ظَنَّஎண்ணினான்اَنْஎன்றுلَّنْஒருபோதும்یَّحُوْرَۚۛமீளமாட்டான்
இன்னஹூ ளன்ன அன் ல(ன்)ய் யஹூர்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே அவன் (தன் இறைவனிடம்) மீளவே மாட்டோம் என்றும் எண்ணிக் கொண்டிருந்தான்.
IFT
(தன்னுடைய இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வர வேண்டியதில்லை என்று அவன் கருதியிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர் (தன் இரட்சகனின்பால்) மீளவே மாட்டார் என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
Saheeh International
Indeed, he had thought he would never return [to Allah].
بَلٰۤی ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِیْرًا ۟ؕ
بَلٰۤی ۛۚஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகرَبَّهٗஅவனுடைய இறைவன்كَانَஇருக்கின்றான்بِهٖஅவனைبَصِیْرًاؕபார்ப்பவனாக
Bபலா இன்ன ரBப்Bபஹூ கான Bபிஹீ Bபஸீரா
முஹம்மது ஜான்
அப்படியல்ல; நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அது சரியன்று! நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாகவே இருந்தான்.
IFT
ஏன் திரும்பி வர வேண்டியதில்லை? அவனுடைய இறைவன் அவனுடைய இழிசெயல்களைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆம்! (அவர் மீளத்தான் போகிறார்.) நிச்சயமாக அவருடைய இரட்சகன் அவரைப் பார்க்கக்கூடியவனாக இருந்தான்.
Saheeh International
But yes! Indeed, his Lord was ever, of him, Seeing.
فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِ ۟ۙ
فَلَاۤஎனவேاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِالشَّفَقِۙசெவ்வானத்தின் மீது
Fபலா உக்ஸிமு Bபிஷ்ஷFபக்
முஹம்மது ஜான்
இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
அப்துல் ஹமீது பாகவி
(மாலை நேர) செம்மேகத்தின் மீது சத்தியமாக!
IFT
அவ்வாறில்லை! அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீதும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்தி நேரத்துச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
Saheeh International
So I swear by the twilight glow
وَالَّیْلِ وَمَا وَسَقَ ۟ۙ
وَ الَّیْلِஇரவின் மீதும்وَ مَاஇன்னும் எவற்றைوَسَقَۙஅது ஒன்று சேர்த்ததோ
வல்லய்லி வமா வஸக்
முஹம்மது ஜான்
மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
அப்துல் ஹமீது பாகவி
இரவின் மீதும், அது மறைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியமாக!)
IFT
இரவின் மீதும், மேலும், அது ஒன்றுதிரட்டி வைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவின் மீதும், அது அணைத்துக் கொண்டிருப்பவற்றின் மீதும் (சத்தியம் செய்கிறேன்).
Saheeh International
And [by] the night and what it envelops
وَالْقَمَرِ اِذَا اتَّسَقَ ۟ۙ
وَ الْقَمَرِசந்திரனின் மீது சத்தியமாகاِذَاஅது முழுமையடையும்اتَّسَقَۙபொழுது
வல்கமரி இதத் தஸக்
முஹம்மது ஜான்
பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
அப்துல் ஹமீது பாகவி
பூரணச் சந்திரன் மீது சத்தியமாக!
IFT
மேலும், முழுமையாய் மலர்ந்து விடும் சந்திரன் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சந்திரன் மீதும் அது பூரணமாகிவிட்டபோது(ம் சத்தியம் செய்கிறேன்.)
Saheeh International
And [by] the moon when it becomes full
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ۟ؕ
لَتَرْكَبُنَّநீங்கள் நிச்சயமாகக் கடப்பீர்கள்طَبَقًاமற்றொரு நிலைக்குعَنْஇருந்துطَبَقٍؕஒரு நிலையில்
லதர்கBபுன்ன தBபகன் 'அன் தBபக்
முஹம்மது ஜான்
நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு) நிச்சயமாக நீங்கள் படிப்படியாகக் கடக்க வேண்டியதிருக்கிறது.
IFT
திண்ணமாக, நீங்கள் படிப்படியாய் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஒரு நிலைமையிலிருந்து மற்றொரு நிலைமைக்கு நிச்சயமாக நீங்கள் படிப்படியாக ஏறிச்செல்வீர்கள்.
Saheeh International
[That] you will surely embark upon [i.e., experience] state after state.
فَمَا لَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۙ
فَمَاஎனவே என்னلَهُمْஅவர்களுக்குلَاஇல்லைیُؤْمِنُوْنَۙஅவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்
Fபமா லஹும் லா யு'மினூன்
முஹம்மது ஜான்
எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்ளவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (இதை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் இதை நம்பிக்கை கொள்வதில்லை.
IFT
பிறகு, இம்மக்களுக்கு என்ன நேர்ந்தது? நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (இதனை மறுத்துக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்புவதில்லை.
Saheeh International
So what is [the matter] with them [that] they do not believe,
وَاِذَا قُرِئَ عَلَیْهِمُ الْقُرْاٰنُ لَا یَسْجُدُوْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுقُرِئَஓதப்படுகிறதோعَلَیْهِمُஅவர்களுக்குالْقُرْاٰنُகுர்ஆன்لَاஇல்லைیَسْجُدُوْنَؕ۩ஸஜ்தா செய்கிறார்கள்
வ இதா குரி'அ 'அலய்ஹிமுல் குர்'ஆனு லா யஸ்ஜுதூன்
முஹம்மது ஜான்
மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு இந்த குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
IFT
மேலும், இவர்களின் முன்னிலையில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இவர்கள் ஸஜ்தா* செய்வதுமில்லையே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்களுக்கு இந்தக்குர் ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால் (அல்லாஹ்விற்கு) அவர்கள் சிரம்பணி(ந்து ஸுஜூது செய்)வதில்லை.
Saheeh International
And when the Qur’an is recited to them, they do not prostrate [to Allah]?
بَلِ الَّذِیْنَ كَفَرُوْا یُكَذِّبُوْنَ ۟ؗۖ
بَلِமாறாகالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோیُكَذِّبُوْنَؗۖபொய்ப்பிக்கிறார்கள்
Bபலில் லதீன கFபரூ யுகத்திBபூன்
முஹம்மது ஜான்
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அது மட்டுமா? இந்நிராகரிப்பவர்கள் (இந்த குர்ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
IFT
மாறாக, இந்த நிராகரிப்பாளர்களோ பொய்யெனத் தூற்றுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும் நிராகரிப்போர் (இந்தக்குர் ஆனையே) பொய்யாக்குகின்றனர்.
Saheeh International
But those who have disbelieved deny,
وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یُوْعُوْنَ ۟ؗۖ
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்اَعْلَمُமிக அறிந்தவன்بِمَاஎவற்றைیُوْعُوْنَؗۖஅவர்கள் சேகரித்து வைக்கிறார்களோ
வல்லாஹு அஃலமு Bபிமா யூ'ஊன்
முஹம்மது ஜான்
ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இவர்கள் (தங்கள் மனதில்) சேகரித்து (மறைத்து) வைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான்.
IFT
உண்மையில், இவர்கள் (தம் வினைச்சுவடிகளில்) சேர்த்துக் கொண்டிருப்பவற்றை அல்லாஹ் நன்கறிகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்கள் (தங்கள் மனங்களில் சேகரித்து) மறைத்து வைத்திருப்பவைகளை அல்லாஹ் நன்கறிந்தேயிருக்கின்றான்.
Saheeh International
And Allah is most knowing of what they keep within themselves.
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِیْمٍ ۟ۙ
فَبَشِّرْهُمْஎனவே அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராகبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَلِیْمٍۙதுன்புறுத்தும்
FபBபஷ்ஷிர்ஹும் Bபி'அதாBபின் அலீம்
முஹம்மது ஜான்
(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
IFT
எனவே, இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைக்கான “நற்செய்தியை” அறிவித்துவிடுவீராக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (நபியே!) துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!
Saheeh International
So give them tidings of a painful punishment,
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குاَجْرٌநற்கூலிغَیْرُஇல்லாதمَمْنُوْنٍ۠முடிவு
இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
முஹம்மது ஜான்
எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இவர்களில் எவர்கள் (தங்கள் பாவத்திலிருந்து திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.
IFT
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாகவும் நற்செயல்கள் செய்தவர்களாகவும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு என்றென்றும் முடிவுறாத கூலி இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங் கொண்டு நற்கருமங்களும் செய்தார்களே அத்தகையவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (நற்) கூலியுண்டு.
Saheeh International
Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted.