(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர்.
IFT
அந்த இறை நம்பிக்கையாளர்களிடம் இவர்கள் பகைமை பாராட்டியதற்குக் காரணம் இதைத் தவிர வேறு எதுவும் இல்லை: யாவற்றையும் மிகைத்தவனும் தனக்குத்தானே புகழுக்குரியவனுமான அல்லாஹ்வின் மீது அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(யாவரையும்) மிகைத்தோன், மிக்க புகழுக்குரியோனாகிய அல்லாஹ்வை அவர்கள் விசுவாசித்ததற்காகவே தவிர (வேறு எதற்கும் விசுவாசிகளான) அவர்களை அவர்கள் பழிவாங்கவில்லை.
Saheeh International
And they resented them not except because they believed in Allah, the Exalted in Might, the Praiseworthy,
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரத்திற்கு உரிமையாளனும் அந்த இறைவனே. மேலும், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; அல்லாஹ்வோ ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாளன்.
Saheeh International
To whom belongs the dominion of the heavens and the earth. And Allah, over all things, is Witness.
اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்فَتَـنُواதுன்புறுத்தினார்கள்الْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களைوَ الْمُؤْمِنٰتِஇன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களைثُمَّபிறகுلَمْ يَتُوْبُوْاஅவர்கள் திருந்தவில்லைفَلَهُمْஅவர்களுக்குعَذَابُவேதனைجَهَنَّمَஜஹன்னம் என்ற நரகத்தின்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابُவேதனைالْحَرِيْقِؕசுட்டெரிக்கக்கூடிய
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு.
IFT
இறைநம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மீது எவர்கள் கொடுமைகள் புரிந்தார்களோ, பிறகு, அதற்காக மன்னிப்புக் கோரி மீளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயம் நரகவேதனை இருக்கிறது. மேலும், சுட்டெரிக்கும் தண்டனையும் உண்டு,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே,) நிச்சயமாக விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் (இவ்வாறு) துன்புறுத்திப் பின்னர், அவர்கள் (தவ்பாச் செய்து) மன்னிப்புக் கோரவுமில்லையோ அத்தகையோர் - அவர்களுக்கு நரக வேதனையுண்டு; அவர்களுக்கு (விசுவாசிகளை அவர்கள் கரித்தவாறு நெருப்பால்) கரிக்கும் வேதனையுமுண்டு.
Saheeh International
Indeed, those who have tortured the believing men and believing women and then have not repented will have the punishment of Hell, and they will have the punishment of the Burning Fire.
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ நிச்சயமாக அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. இதுதான் மாபெரும் வெற்றி.
IFT
எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களுக்குத் திண்ணமாக சுவனங்கள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். இதுவே பெரும் வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக விசுவாசங்கொணடு நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்குச் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அது மாபெரும் வெற்றியாகும்.
Saheeh International
Indeed, those who have believed and done righteous deeds will have gardens beneath which rivers flow. That is the great attainment.