89. ஸூரத்துல் ஃபஜ்ரி (விடியற்காலை)

மக்கீ, வசனங்கள்: 30

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
وَالْفَجْرِ ۟ۙ
وَ الْفَجْرِۙவிடியற்காலையின் மீது சத்தியமாக
வல்-Fபஜ்ர்
முஹம்மது ஜான்
விடியற் காலையின் மீது சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
விடியற்காலையின் மீதும், சத்தியமாக!
IFT
வைகறைப் பொழுதின் மீது சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விடியற்காலையின் மீது சத்தியமாக!
Saheeh International
By the dawn
وَلَیَالٍ عَشْرٍ ۟ۙ
وَ لَیَالٍஇன்னும் இரவுகள்عَشْرٍۙபத்து
வ லயாலின் 'அஷ்ர்
முஹம்மது ஜான்
பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
பத்து இரவுகளின் மீதும், சத்தியமாக!
IFT
மேலும், பத்து இரவுகளின் மீதும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பத்து இரவுகளின்மீதும் சத்தியமாக!
Saheeh International
And [by] ten nights
وَّالشَّفْعِ وَالْوَتْرِ ۟ۙ
وَّ الشَّفْعِஇரட்டையின் மீதும்وَ الْوَتْرِۙஒற்றையின் மீதும்
வஷ் ஷFப்'இ வல் வத்ர்
முஹம்மது ஜான்
இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும், சத்தியமாக!
IFT
இரட்டை மற்றும் ஒற்றையின் மீதும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக!
Saheeh International
And [by] the even [number] and the odd
وَالَّیْلِ اِذَا یَسْرِ ۟ۚ
وَ الَّیْلِஇரவின் மீதுاِذَاஅதுیَسْرِۚகடந்து செல்லும்போது
வல்லய்லி இதா யஸ்ர்
முஹம்மது ஜான்
செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
அப்துல் ஹமீது பாகவி
நிகழ்கின்ற இரவின் மீது சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).
IFT
சென்று கொண்டிருக்கும் இரவின் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவின் மீதும் அது சென்று விடும்போது – சத்தியமாக!
Saheeh International
And [by] the night when it passes,
هَلْ فِیْ ذٰلِكَ قَسَمٌ لِّذِیْ حِجْرٍ ۟ؕ
هَلْஇருக்கிறதாفِیْஇல்ذٰلِكَஅதில்قَسَمٌசத்தியம்لِّذِیْஉடையவருக்குحِجْرٍؕஅறிவு
ஹல் Fபீ தாலிக கஸமுல் லிதீ ஹிஜ்ர்
முஹம்மது ஜான்
இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
அப்துல் ஹமீது பாகவி
இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கிறது.
IFT
அறிவுள்ள ஒருவருக்கு இனியும் சத்தியம் தேவையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதில் அறிவுடையோருக்கு (உறுதியளிக்கக்கூடிய) சத்தியம் இருக்கின்றதல்லவா?
Saheeh International
Is there [not] in [all] that an oath [sufficient] for one of perception?
اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீராكَیْفَஎவ்வாறுفَعَلَசெய்தான்رَبُّكَஉமது இறைவன்بِعَادٍ۪ۙஆது கூட்டத்தாரை
அலம் தர கய்Fப Fப'அல ரBப்Bபுக Bபி'ஆத்
முஹம்மது ஜான்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
IFT
ஆது கூட்டத்தாருடன் உம் இறைவன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உமதிரட்சகன் ஆ(து கூட்டத்)தை எவ்வாறு செய்தான் என்பதை நீர் காணவில்லையா?
Saheeh International
Have you not considered how your Lord dealt with ʿAad -
اِرَمَ ذَاتِ الْعِمَادِ ۟
اِرَمَஇரம்ذَاتِஉடையالْعِمَادِ۪ۙதூண்களை
இரமா தாதில் 'இமாத்
முஹம்மது ஜான்
(அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள்,
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உயர்ந்த) தூண்களைப்போன்ற இரம் என்னும் ஆது மக்களை உமது இறைவன் எப்படி (வேதனை) செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
IFT
(அவர்கள்) உயரமான தூண்களையுடைய இரம் எனும் நகரவாசிகள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பெரும்பலசாலிகளான (தூண்களையுடைய) இரமை (அவரின் பிள்ளைகளை) –
Saheeh International
[With] Iram - who had lofty pillars,
الَّتِیْ لَمْ یُخْلَقْ مِثْلُهَا فِی الْبِلَادِ ۟
الَّتِیْஎத்தகையதென்றால்لَمْஇல்லைیُخْلَقْபடைக்கப்படمِثْلُهَاஅதைப் போன்றதுفِیஇல்الْبِلَادِ۪ۙநாடுகள்
அல்லதீ லம் யுக்லக் மித்லுஹா Fபில் Bபிலாத்
முஹம்மது ஜான்
அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.
IFT
அவர்களைப் போன்று எந்தச் சமுதாயமும் உலகநாடுகளில் படைக்கப்படவில்லை;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அக்கூட்டத்தினர் எத்தகையோரென்றால் - (உலகத்திலுள்ள) நகரங்களில் (அக்கூட்டத்தினரைப்போன்று) பலசாலிகள் எவரும் படைக்கப்படவில்லை.
Saheeh International
The likes of whom had never been created in the land?
وَثَمُوْدَ الَّذِیْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ۟
وَ ثَمُوْدَஇன்னும் ஸமூதுالَّذِیْنَஎவர்கள்جَابُواகுடைந்தார்களோالصَّخْرَபாறைகளைبِالْوَادِ۪ۙபள்ளத்தாக்கில்
வ தமூதல் லதீன ஜாBபுஸ் ஸக்ர Bபில் வாத்
முஹம்மது ஜான்
பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
IFT
மேலும், பள்ளத்தாக்கில் பாறைகளைக் குடைந்த ஸமூத் சமுதாயத்தாருடனும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்து அதில் வசித்து வந்தவர்களான ஸமூது கூட்டத்தையும் -
Saheeh International
And [with] Thamūd, who carved out the rocks in the valley?
وَفِرْعَوْنَ ذِی الْاَوْتَادِ ۟
وَ فِرْعَوْنَமற்றும் ஃபிர்அவ்னையும்ذِیஉடையالْاَوْتَادِ۪ۙஆணிகளை
வ Fபிர்'அவ்ன தில் அவ்தாத்
முஹம்மது ஜான்
மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், (இராணுவங்களையுடைய) ஆணிக்கார ஃபிர்அவ்னை (உமது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீர் கவனிக்க வில்லையா?)
IFT
மேலும், முளைகளையுடைய ஃபிர்அவ்னுடனும் (உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், முளைகளுடைய – (பெரும்படைகளையுடைய) ஃபிர் அவ்னையும் (உமதிரட்சகன் எவ்வாறு செய்தான் என்பதை நீர் காணவில்லையா?)
Saheeh International
And [with] Pharaoh, owner of the stakes?
الَّذِیْنَ طَغَوْا فِی الْبِلَادِ ۟
الَّذِیْنَஎவர்கள்طَغَوْاவரம்பு மீறினார்களோفِیஇல்الْبِلَادِ۪ۙநாடுகள்
அல்லதீன தகவ் Fபில் Bபிலாத்
முஹம்மது ஜான்
அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களெல்லாம் பூமியில் வரம்பு மீறியே நடந்தார்கள்.
IFT
அந்த மக்களோ உலக நாடுகளில் வரம்புமீறிய செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், நகரங்களில் அவர்கள் வரம்பு மீறி நடந்தார்கள்.
Saheeh International
[All of] whom oppressed within the lands
فَاَكْثَرُوْا فِیْهَا الْفَسَادَ ۟
فَاَكْثَرُوْاஅவர்கள் அதிகப்படுத்தினார்கள்فِیْهَاஅதில்الْفَسَادَ۪ۙகுழப்பத்தை
Fப அக்தரூ Fபீஹல் Fபஸாத்
முஹம்மது ஜான்
அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
அப்துல் ஹமீது பாகவி
(பூமியில்) அவர்கள் மிக்க அதிகமாகவே விஷமம் செய்து கொண்டிருந்தனர்.
IFT
அங்கு பெரும் குழப்பத்தை விளைவித்திருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவைகளில் அவர்கள் குழப்பத்தை அதிகப்படுத்தினார்கள்.
Saheeh International
And increased therein the corruption.
فَصَبَّ عَلَیْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۟ۚۙ
فَصَبَّஎனவே பொழிந்தான்عَلَیْهِمْஅவர்கள் மீதுرَبُّكَஉமது இறைவன்سَوْطَசாட்டையைعَذَابٍۚۙவேதனையின்
FபஸBப்Bப 'அலய்ஹிம் ரBப்Bபுக ஸவ்த 'அதாBப்
முஹம்மது ஜான்
எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆதலால், உங்கள் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைக்கொண்டு (அடி மேல் அடி) அடித்தான்.
IFT
இறுதியில், அவர்கள் மீது உம் இறைவன் தண்டனையின் சாட்டைகளைப் பொழிந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, உமதிரட்சகன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையைப் போட்டான்.
Saheeh International
So your Lord poured upon them a scourge of punishment.
اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ ۟ؕ
اِنَّநிச்சயமாகرَبَّكَஉமது இறைவன்لَبِالْمِرْصَادِؕகண்காணித்துக் கொண்டிருக்கிறான்
இன்ன ரBப்Bபக லBபில் மிர்ஸாத்
முஹம்மது ஜான்
நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உமது இறைவன் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்த வண்ணமாக இருக்கிறான்.
IFT
உண்மையில், உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, உமதிரட்சகன் (அடியார்களின் ஒவ்வொரு செயலையும்) கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
Saheeh International
Indeed, your Lord is in observation.
فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِ ۟ؕ
فَاَمَّاஆனால்الْاِنْسَانُமனிதன்اِذَاஎப்போதுمَاஅவனைابْتَلٰىهُசோதிக்கிறானோرَبُّهٗஅவனது இறைவன்فَاَكْرَمَهٗஅவனைக் கண்ணியப்படுத்திوَ نَعَّمَهٗ ۙ۬மேலும் அவனுக்கு அருள்புரிந்துفَیَقُوْلُஅப்போது அவன் கூறுகிறான்رَبِّیْۤஎன் இறைவன்اَكْرَمَنِؕஎன்னைக் கண்ணியப்படுத்தினான்
Fப அம்மல் இன்ஸானு இதா மBப் தலாஹு ரBப்Bபுஹூ Fப அக்ரமஹூ வ ன' 'அமஹூ Fப யகூலு ரBப்Bபீ அக்ரமன்
முஹம்மது ஜான்
ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான்.
IFT
ஆனால், மனிதனின் நிலை எப்படி இருக்கின்றதெனில், அவனுடைய இறைவன் அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனை கண்ணியப்படுத்தி, அருட்கொடைகளையும் வழங்கினால், “என்னுடைய இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, மனிதன், அவனுடைய இரட்சகன் அவனை சோதித்து பின்னர் அவனைக் கண்ணியப்படுத்தி, அவனுக்கு அருட்கொடைகளையும் அளித்தால் “என்னை என்னுடைய இரட்சகன் கண்ணியப்படுத்தினான்” என்று கூறுகிறான்.
Saheeh International
And as for man, when his Lord tries him and [thus] is generous to him and favors him, he says, "My Lord has honored me."
وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَیْهِ رِزْقَهٗ ۙ۬ فَیَقُوْلُ رَبِّیْۤ اَهَانَنِ ۟ۚ
وَ اَمَّاۤஆனால்اِذَاஎப்பொழுதுمَاஅவனைابْتَلٰىهُசோதித்துفَقَدَرَசுருக்கிவிடுகிறானோعَلَیْهِஅவனுக்குرِزْقَهٗ ۙ۬அவனது வாழ்வாதாரத்தைفَیَقُوْلُஅப்போது அவன் கூறுகிறான்رَبِّیْۤஎன் இறைவன்اَهَانَنِۚஎன்னை இழிவுபடுத்திவிட்டான்
வ அம்மா இதா மBப்தலாஹு Fபகதர 'அலய்ஹி ரிZஜ்கஹூ Fப யகூலு ரBப்Bபீ அஹானன்
முஹம்மது ஜான்
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான்.
IFT
மேலும், அவனைச் சோதிக்க நாடினால் மேலும், அவனுடைய வாழ்க்கை வசதிகளைக் குறைத்து விட்டால் “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று கூறுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (அல்லாஹ்) அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரங்களை நெருக்கடியாக்கி விட்டால், அப்போது “எனதிரட்சகன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” என்று அவன்(குறை) கூறுகிறான்.
Saheeh International
But when He tries him and restricts his provision, he says, "My Lord has humiliated me."
كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْیَتِیْمَ ۟ۙ
كَلَّاஅவ்வாறல்லبَلْமாறாகلَّاஇல்லைتُكْرِمُوْنَநீங்கள் கண்ணியப்படுத்துகிறீர்கள்الْیَتِیْمَۙஅநாதையை
கல்ல Bபல் லா துக்ரிமூ னல் யதீம்
முஹம்மது ஜான்
அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(விஷயம்) அவ்வாறல்ல. நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவதில்லை.
IFT
ஒருபோதும் இல்லை! ஆனால், அநாதையுடன் கண்ணியமாய் நீங்கள் நடந்து கொள்வதில்லை;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(காரியம்) அவ்வாறன்று! எனினும், நீங்கள் அநாதையை கண்ணியப்படுத்துவதில்லை.
Saheeh International
No! But you do not honor the orphan
وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ۙ
وَ لَاமேலும் இல்லைتَحٰٓضُّوْنَநீங்கள் தூண்டுவதும்عَلٰیமீதுطَعَامِஉணவளிக்கالْمِسْكِیْنِۙஏழைக்கு
வ லா தஹாள்ளூன 'அலாத'ஆமில் மிஸ்கீன்
முஹம்மது ஜான்
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
ஏழைகளுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும் நீங்கள் அளிக்காததுடன் மற்ற எவரையும்) அளிக்கும்படி தூண்டுவதில்லை.
IFT
மேலும், வறியவர்க்கு உணவளிக்க ஒருவரையொருவர் தூண்டுவதுமில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஏழைக்கு நீங்கள் உணவளிக்காததுடன் மற்றெவரையும் உணவளிக்கும்படித் தூண்டுவதுமில்லை.
Saheeh International
And you do not encourage one another to feed the poor.
وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّا ۟ۙ
وَ تَاْكُلُوْنَமேலும் நீங்கள் உண்கிறீர்கள்التُّرَاثَஅனந்தரச் சொத்தைاَكْلًاவிழுங்குவதாகلَّمًّاۙபேராசையுடன்
வ தாகுலூனத் துராத அக்லல் லம்மா
முஹம்மது ஜான்
இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பிறருடைய சொத்துக்களை உங்கள் சொத்துடன் சேர்த்து புசித்துவிடுகிறீர்கள்.
IFT
மேலும், வாரிசுச் சொத்துக்களை முழுமையாக நீங்களே விழுங்கிவிடுகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் சேர்த்து உண்டு வருகிறீர்கள்.
Saheeh International
And you consume inheritance, devouring [it] altogether,
وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ۟ؕ
وَّ تُحِبُّوْنَமேலும் நீங்கள் நேசிக்கிறீர்கள்الْمَالَசெல்வத்தைحُبًّاநேசமாகجَمًّاؕஅளவுகடந்த
வ துஹிBப்Bபூனல் மால ஹுBப்Bபன் ஜம்மா
முஹம்மது ஜான்
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மிக்க அளவு கடந்து பொருளை நேசிக்கிறீர்கள்.
IFT
மேலும், செல்வத்தின் மீது அளவு கடந்த மோகம் கொண்டுள்ளீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நீங்கள் மிக்க அளவு கடந்து செல்வத்தை நேசிக்கிறீர்கள்.
Saheeh International
And you love wealth with immense love.
كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۟ۙ
كَلَّاۤஅவ்வாறல்லاِذَاபொழுதுدُكَّتِதூளாக்கப்படும்الْاَرْضُபூமிدَكًّاதூள் தூளாகدَكًّاۙதூள் தூளாக
கல்லா இதா துக்கதில் அர்ளு தக்கன் தக்கா
முஹம்மது ஜான்
அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் சமயத்தில்,
IFT
ஒருபோதுமில்லை! பூமி தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உங்கள் செயல்கள் இவ்வாறிருப்பது சிறந்தது) அல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்பட்டுவிடும்போது –
Saheeh International
No! When the earth has been leveled - pounded and crushed
وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۟ۚ
وَّ جَآءَமேலும் வருவான்رَبُّكَஉமது இறைவன்وَ الْمَلَكُவானவர்களும்صَفًّاஅணிصَفًّاۚஅணியாக
வ ஜா'அ ரBப்Bபுக வல் மலகு ஸFப்Fபன் ஸFப்Fபா
முஹம்மது ஜான்
இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்
அப்துல் ஹமீது பாகவி
உமது இறைவனும் வருவான். வானவர்களும் அணிஅணியாக வருவார்கள்.
IFT
மேலும் வானவர்கள் அணி அணியாக நிற்கும் நிலையில் உம் இறைவன் வருகை தரும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உமது இரட்சகன், மேலும் - மலக்குகள் அணி அணியாக வரும்போது-
Saheeh International
And your Lord has come and the angels, rank upon rank,
وَجِایْٓءَ یَوْمَىِٕذٍۭ بِجَهَنَّمَ ۙ۬ یَوْمَىِٕذٍ یَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰی لَهُ الذِّكْرٰی ۟ؕ
وَ جِایْٓءَகொண்டு வரப்படும்یَوْمَىِٕذٍۭஅந்நாளில்بِجَهَنَّمَ ۙ۬நரகம்یَوْمَىِٕذٍஅந்நாளில்یَّتَذَكَّرُநினைவு கூர்வான்الْاِنْسَانُமனிதன்وَ اَنّٰیஆனால் எவ்வாறுلَهُஅவனுக்குالذِّكْرٰیؕநினைவு கூர்வது
வ ஜீ'அ யவ்ம'இதிம் Bபி ஜஹன்ன்னம்; யவ்ம 'இதி(ன்)ய் யததக்கருல் இன்ஸானு வ அன்னா லஹுத் திக்ரா
முஹம்மது ஜான்
அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகம் கொண்டுவரப்படும். அந்நாளில் மனிதனுக்கு நல்லறிவு உதயமாகும். எனினும், அப்போது (உதயமாகின்ற) அறிவால் அவனுக்கு என்ன பயன்?
IFT
மேலும், அந்நாளில் நரகம் கண்ணெதிரில் கொண்டு வரப்படும்போது அந்நாளில்தான் மனிதன் புரிந்து கொள்வான். அப்போது அவன் புரிந்துகொள்வது என்ன பயனை அளிக்கும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் (பாவிகளுக்காக) நரகமும் கொண்டுவரப்பட்டுவிட்டால், அந்நாளில் மனிதன் (உலகில் அவன் அல்லாஹ்விற்கு மாற்றமாக நடந்ததை) நினைவு கூர்வான்; இன்னும், (அச்சமயம்) அவனுக்கு நினைவு கூர்வது எவ்வாறு (பயனுள்ளதாக) ஆகும்?
Saheeh International
And brought [within view], that Day, is Hell - that Day, man will remember, but how [i.e., what good] to him will be the remembrance?
یَقُوْلُ یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْ ۟ۚ
یَقُوْلُஅவன் கூறுவான்یٰلَیْتَنِیْஅந்தோ! நான்قَدَّمْتُமுற்படுத்தியிருக்கலாமேلِحَیَاتِیْۚஎன் வாழ்விற்காக
யகூலு யா லய்தனீ கத்தம்து லிஹயாதீ
முஹம்மது ஜான்
“என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘என் வாழ்க்கையில் நான் (ஒரு) நன்மையைச் செய்து வைத்திருக்க வேண்டுமே!'' என்று புலம்புவான்.
IFT
அவன் புலம்புவான்: ‘அய்யகோ! எனது இந்த வாழ்க்கைக்காக சில ஏற்பாடுகளை, நான் முன்னரே செய்திருக்கக்கூடாதா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“என்னுடைய (இந்த) வாழ்க்கைக்காக (நன்மையைச் செய்து) நான் முற்படுத்தி (அனுப்பி) இருக்க வேண்டுமே என்று அப்போது மனிதன் கூறுவான்.
Saheeh International
He will say, "Oh, I wish I had sent ahead [some good] for my life."
فَیَوْمَىِٕذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۟ۙ
فَیَوْمَىِٕذٍஅந்நாளில்لَّاமாட்டார்یُعَذِّبُவேதனை செய்யعَذَابَهٗۤஅவனது வேதனையைاَحَدٌۙஎவரும்
Fப யவ்ம இதில் லா யு'அத்திBபு 'அதாBபஹூ அஹத்
முஹம்மது ஜான்
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் (பாவிகளை) அவன் செய்யும் வேதனையைப் போல் மற்றெவனும் (எவரையும்) செய்யமாட்டான். (அவ்வளவு கடினமாக அவன் வேதனை செய்வான்.)
IFT
அந்நாளில் அல்லாஹ் தண்டிப்பதுபோல், தண்டிப்பவர் எவருமிலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, அந்நாளில் (அல்லாஹ்வாகிய) அவன் செய்யும் வேதனையைப் போல், மற்றெவனும் வேதனை செய்யமாட்டான்.
Saheeh International
So on that Day, none will punish [as severely] as His punishment,
وَّلَا یُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ۟ؕ
وَّ لَاமேலும் இல்லைیُوْثِقُகட்டுவான்وَ ثَاقَهٗۤஅவனது கட்டைப் போல்اَحَدٌؕஎவரும்
வ லா யூதிகு வதாக ஹூ அஹத்
முஹம்மது ஜான்
மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
(பாவிகளை) அவன் கட்டுவதைப்போல் பலமாக மற்ற எவனுமே கட்டமாட்டான். (அவ்வளவு பலமாக அவன் கட்டுவான்.)
IFT
அவன் கட்டுவதுபோல் கட்டுபவரும் எவரும் இலர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவன் கட்டுவதுபோல் வேறு எவனும் கட்டமாட்டான்.
Saheeh International
And none will bind [as severely] as His binding [of the evildoers].
یٰۤاَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُ ۟ۗۖ
یٰۤاَیَّتُهَاالنَّفْسُஆன்மாவேالْمُطْمَىِٕنَّةُۗۖஅமைதியுற்ற
யா அய்யதுஹன் னFப்ஸுல் முத்ம 'இன்னஹ்
முஹம்மது ஜான்
(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
அப்துல் ஹமீது பாகவி
(எனினும், அந்நாளில் நல்ல மனிதனை நோக்கி) “நிம்மதிபெற்ற ஆத்மாவே!
IFT
(மற்றொரு புறத்தில் அறிவிக்கப்படும்:) ஓ! அமைதியடைந்த ஆன்மாவே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வின் கட்டளைகளை உண்மைப்படுத்துவது கொண்டு) அமைதிபெற்ற ஆத்மாவே!
Saheeh International
[To the righteous it will be said], "O reassured soul,
ارْجِعِیْۤ اِلٰی رَبِّكِ رَاضِیَةً مَّرْضِیَّةً ۟ۚ
ارْجِعِیْۤதிரும்புவாயாகاِلٰیநோக்கிرَبِّكِஉன் இறைவனைرَاضِیَةًதிருப்தியடைந்தவளாகمَّرْضِیَّةًۚதிருப்தி கொள்ளப்பட்டவளாக
இர்ஜி'ஈ இலா ரBப்Bபிகி ராளியதம் மர்ளிய்யஹ்
முஹம்மது ஜான்
நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
அப்துல் ஹமீது பாகவி
நீ (இறைவனைக் கொண்டு) திருப்தியடைந்ததாக! (இறைவனால் நீ) திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பச் செல்!'' (என்றும்)
IFT
செல் உன் இறைவனின் பக்கம்! (உன் நல்ல முடிவைக்கொண்டு) மகிழ்ந்த நிலையில்; (மேலும் உன் இறைவனின்) திருப்தியைப் பெற்ற நிலையில்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீ உன் இரட்சகன் பக்கம் (அவனைத்) திருப்தியடைந்த நிலையிலும், (அவனிடம்) பொருந்திக் கொள்ளப்பட்ட நிலையிலும் மீள்வாயாக!
Saheeh International
Return to your Lord, well-pleased and pleasing [to Him],
فَادْخُلِیْ فِیْ عِبٰدِیْ ۟ۙ
فَادْخُلِیْஎனவே நுழைந்துவிடுفِیْகூட்டத்தில்عِبٰدِیْۙஎன் அடியார்கள்
Fபத்குலீ Fபீ 'இBபாதீ
முஹம்மது ஜான்
நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
அப்துல் ஹமீது பாகவி
‘‘நீ என் நல்லடியார்களில் சேர்ந்து,
IFT
இணைந்துவிடு, என்னுடைய (நல்) அடியார்களுடன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீ எனது அடியார்(களான நல்லோர்களின் கூட்டங்)களில் பிரவேசிப்பாயாக!
Saheeh International
And enter among My [righteous] servants
وَادْخُلِیْ جَنَّتِیْ ۟۠
وَ ادْخُلِیْமேலும் நுழைவாயாகجَنَّتِیْ۠எனது சுவனத்தில்
வத்குலீ ஜன்னதீ
முஹம்மது ஜான்
மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).
அப்துல் ஹமீது பாகவி
என் சொர்க்கத்திலும் நீ நுழைந்துவிடு'' (என்றும் கூறுவான்).
IFT
மேலும், புகுந்துவிடு, என்னுடைய சுவனத்தில்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், என்னுடைய சுவனத்தில் நீ நுழைந்துவிடுவாயாக! (என்றும் அல்லாஹ் கூறுவான்.)
Saheeh International
And enter My Paradise."