فَقَالَகூறினார்لَهُمْஅவர்களுக்குرَسُوْلُதூதர்اللّٰهِஅல்லாஹ்வின்نَاقَةَபெண் ஒட்டகத்தைاللّٰهِஅல்லாஹ்வுடையوَسُقْيٰهَا ؕஇன்னும் அது நீர் பருகுவதை
Fபகால லஹும் ரஸூலுல் லாஹி னாகதல் லாஹி வ ஸுகியாஹா
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.
IFT
அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “எச்சரிக்கை! அல்லாஹ்வின் ஒட்டகம் (அதன் மீது கை வைக்காதீர்கள்;) அது நீர் அருந்துவதைத் (தடுக்காதீர்கள்).”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ் நபி) அ(ந்த ஸமூது கூட்டத்த)வர்களிடம் “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தை (இம்சிப்பதை)யும் அது தண்ணீர் அருந்துவதையயும் (விட்டுவிடுங்கள்)” என்று கூறினார்.
Saheeh International
And the messenger of Allah [i.e., Ṣalih] said to them, "[Do not harm] the she-camel of Allah or [prevent her from] her drink."
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
IFT
ஆனால், அம்மக்கள் அவருடைய பேச்சைப் பொய்யெனத் தூற்றினார்கள். மேலும், ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள். இறுதியில், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பாவத்தின் விளைவாக கடுமையானதொரு ஆபத்தை இறக்கி, அனைவரையும் அழித்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்கள் அவரைப் பொய்யாக்கி (அதன் கால் நரம்பைத்தறித்து) அதை அறுத்துவிட்டனர்; ஆகவே, அவர்களின் இரட்சகன் அவர்களுடைய (இந்தப்)பாவத்தின் காரணமாக அவர்களின் மீது (மண்ணோடு மண்ணாகிவிடும்) கடும் வேதனையை இறக்கிவைத்து பிறகு அதனை (ச் சகலருக்கும்) சமமாக்கினான்.
Saheeh International
But they denied him and hamstrung her. So their Lord brought down upon them destruction for their sin and made it equal [upon all of them].