">

தேடல் வார்த்தை: "யஃகூ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

23 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 23)

وَاِذْ اَخَذْنَا مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ ۫ وَبِالْوَالِدَیْنِ اِحْسَانًا وَّذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ ؕ ثُمَّ تَوَلَّیْتُمْ اِلَّا قَلِیْلًا مِّنْكُمْ وَاَنْتُمْ مُّعْرِضُوْنَ ۟
وَاِذْஇன்னும் சமயம்اَخَذْنَاவாங்கினோம்مِيْثَاقَஉறுதிமொழியைبَنِىْٓசந்ததிகள்اِسْرَآءِيْلَஇஸ்ராயீலுடையلَا تَعْبُدُوْنَவணங்காதீர்கள்اِلَّاதவிரاللّٰهَஅல்லாஹ்வைوَبِالْوَالِدَيْنِஇன்னும் பெற்றோருக்குاِحْسَانًاநன்மை செய்யுங்கள்وَّذِى الْقُرْبٰىஇன்னும் உறவினர்கள்وَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகள்وَالْمَسٰکِيْنِஇன்னும் ஏழைகள்وَقُوْلُوْاஇன்னும் கூறுங்கள்لِلنَّاسِமக்களிடம்حُسْنًاஅழகியதைوَّاَقِيْمُواஇன்னும் நிலைநிறுத்துங்கள்الصَّلٰوةَதொழுகையைوَاٰتُواஇன்னும் கொடுங்கள்الزَّکٰوةَ ؕஸகாத்தைثُمَّபிறகுتَوَلَّيْتُمْதிரும்பி விட்டீர்கள்اِلَّاதவிரقَلِيْلًاகுறைவானவர்கள்مِّنْکُمْஉங்களில்وَاَنْـتُمْநீங்களோمُّعْرِضُوْنَ‏புறக்கணிப்பவர்கள்
வ இத் அகத்னா மீதாக Bபனீ இஸ்ரா'ஈல லா தஃBபுதூன இல்லல் லாஹ வ Bபில் வாலிதய்னி இஹ்ஸான(ன்)வ் வ தில் குர்Bபா வல்யதாமா வல்மஸாகீனி வ கூலூ லின்னாஸி ஹுஸ்ன(ன்)வ் வ அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ்Zஜகாத தும்ம தவல்லய்தும் இல்லா கலீலம் மின்கும் வ அன்தும் முஃரிளூன்
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
یٰبَنِیْۤ اِسْرَآءِیْلَ اذْكُرُوْا نِعْمَتِیَ الَّتِیْۤ اَنْعَمْتُ عَلَیْكُمْ وَاَنِّیْ فَضَّلْتُكُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟
يٰبَنِىْٓசந்ததிகளேاِسْرَآءِيْلَஇஸ்ராயீலின்اذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَتِىَஎன் அருளைالَّتِىْٓஎதுاَنْعَمْتُஅருள் புரிந்தேன்عَلَيْكُمْஉங்கள் மீதுوَاَنِّىْஇன்னும் நிச்சயமாக நான்فَضَّلْتُكُمْமேன்மையாக்கினேன்/உங்களைعَلَى الْعٰلَمِيْنَ‏உலகத்தாரைவிட
யா Bபனீ இஸ்ரா'ஈலத்-குரூ னிஃமதியல் லதீ அன்'அம்து 'அலய்கும் வ அன்னீ Fபள்ளல்துகும் 'அலல் 'ஆலமீன்
(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.
وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ
وَوَصّٰىஇன்னும் உபதேசித்தார்بِهَآஅதைاِبْرٰهٖمُஇப்ராஹீம்بَنِيْهِபிள்ளைகளுக்கு/தன்وَ يَعْقُوْبُؕஇன்னும் யஃகூப்يٰبَنِىَّஎன் பிள்ளைகளேاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اصْطَفٰىதேர்ந்தெடுத்தான்لَكُمُஉங்களுக்குالدِّيْنَமார்க்கத்தைفَلَا تَمُوْتُنَّஎனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள்اِلَّاதவிரوَاَنْـتُمْநீங்கள் இருக்கவேمُّسْلِمُوْنَؕ‏‏முஸ்லிம்களாக
வ வஸ்ஸா Bபிஹா இBப்ராஹீமு Bபனீஹி வ யஃகூBப், யா Bபனிய்ய இன்னல் லாஹஸ் தFபா லகுமுத் தீன Fபலா தமூதுன்ன இல்லா வ அன்தும் முஸ்லிமூன்
இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.”
اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
اَمْஅல்லதுكُنْتُمْஇருந்தீர்கள்شُهَدَآءَசாட்சிகளாகاِذْபோதுحَضَرَவந்ததுيَعْقُوْبَயஃகூபுக்குالْمَوْتُۙமரணம்اِذْபோதுقَالَகூறினார்لِبَنِيْهِபிள்ளைகளை நோக்கி/தன்مَاயாரைتَعْبُدُوْنَநீங்கள் வணங்குவீர்கள்مِنْۢ بَعْدِىْؕஎனக்குப் பின்னர்قَالُوْاகூறினார்கள்نَعْبُدُவணங்குவோம்اِلٰهَكَகடவுளை/உம்وَاِلٰهَஇன்னும் கடவுளைاٰبَآٮِٕكَமூதாதைகளின்/உம்اِبْرٰهٖمَஇப்ராஹீம்وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்اِلٰهًاஒரு கடவுளைوَّاحِدًا ۖۚஒரேوَّنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனுக்குمُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள்
அம் குன்தும் ஷுஹதா'அ இத் ஹளர யஃகூBபல் மவ்து இத் கால லிBபனீஹி மா தஃBபுதூன மிம் Bபஃதீ காலூ னஃBபுது இலாஹக வ இலாஹ ஆBபா'இக இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக இலாஹ(ன்)வ் வாஹித(ன்)வ் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ۖؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُوْلُوْٓاகூறுங்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைக் கொண்டுوَمَآஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلَيْنَاநமக்குوَمَآஇன்னும் எதுاُنْزِلَஇறக்கப்பட்டதுاِلٰٓى اِبْرٰهٖمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَ الْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَمَآஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)مُوْسٰىமூசாوَعِيْسٰىஇன்னும் ஈஸாوَمَآஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்(கள்)النَّبِيُّوْنَநபிமார்களுக்குمِنْஇருந்துرَّبِّهِمْ‌ۚஇறைவன்/தங்கள்لَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம்بَيْنَமத்தியில்اَحَدٍஒருவருக்குمِّنْهُمْஅவர்களில்وَنَحْنُஇன்னும் நாம்لَهٗஅவனுக்குمُسْلِمُوْنَ‏முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
கூலூ ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில இலய்னா வ மா உன்Zஜில இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மாஊதிய மூஸா வ 'ஈஸா வ மா ஊதியன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகூ Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
(முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக.
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
اَمْஅல்லதுتَقُوْلُوْنَகூறுகிறீர்கள்اِنَّநிச்சயமாகاِبْرٰهٖمَஇப்ராஹீம்وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطَஇன்னும் சந்ததிகள்كَانُوْاஇருந்தார்கள்هُوْدًاயூதர்களாகاَوْஅல்லதுنَصٰرٰى‌ؕகிறித்துவர்களாகقُلْகூறுவீராகءَاَنْتُمْநீங்களா?اَعْلَمُமிக அறிந்தவர்(கள்)اَمِஅல்லதுاللّٰهُ‌ ؕஅல்லாஹ்வா?وَمَنْஇன்னும் யார்?اَظْلَمُமகா அநியாயக்காரர்مِمَّنْஎவரைவிடكَتَمَமறைத்தார்شَهَادَةًசாட்சியத்தைعِنْدَهٗதன்னிடத்தில்مِنَ اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَمَاஇல்லைاللّٰهُஅல்லாஹ்بِغَافِلٍகவனமற்றவனாகعَمَّاபற்றி/அல்லாஹ்تَعْمَلُوْنَ‏செய்கிறீர்கள்
அம் தகூலூன இன்ன இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஷ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாத கானூ ஹூதன் அவ் னஸாரா; குல் 'அ-அன்தும் அஃலமு அமில் லாஹ்; வ மன் அள்லமு மிம்மன் கதம ஷஹாததன் 'இன்தஹூ மினல்லாஹ்; வ மல்லாஹு BபிகாFபிலின் 'அம்மா தஃமலூன்
“இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.”
قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪ لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
قُلْகூறுவீராகاٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைعَلَيْنَاஎங்கள் மீதுوَمَاۤ اُنْزِلَஇன்னும் இறக்கப்பட்டதைعَلٰٓىமீதுاِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَ اِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَمَاۤஇன்னும் எதுاُوْتِىَகொடுக்கப்பட்டார்مُوْسٰى وَ عِيْسٰىமூஸா/இன்னும் ஈஸாوَالنَّبِيُّوْنَஇன்னும் நபிமார்கள்مِنْ رَّبِّهِمْதங்கள் இறைவனிடமிருந்துلَا نُفَرِّقُபிரிக்க மாட்டோம்بَيْنَ اَحَدٍஒருவருக்கு மத்தியில்مِّنْهُمْஇவர்களில்وَنَحْنُஇன்னும் நாங்கள்لَهٗஅவனுக்கேمُسْلِمُوْنَ‏முற்றிலும் பணிந்தவர்கள்
குல் ஆமன்னா Bபில்லாஹி வ மா உன்Zஜில 'அலய்னா வ மா உன்Zஜில 'அலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ மா ஊதிய மூஸா வ 'ஈஸா வன் னBபிய்யூன மிர் ரBப்Bபிஹிம் லா னுFபர்ரிகு Bபய்ன அஹதிம் மின்ஹும் வ னஹ்னு லஹூ முஸ்லிமூன்
“அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِیْلُ عَلٰی نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰىةُ ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰىةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
كُلُّஎல்லா(ம்)الطَّعَامِஉணவு(ம்)كَانَஇருந்ததுحِلًّاஆகுமானதாகلِّبَنِىْۤ اِسْرَآءِيْلَஇஸ்ரவேலர்களுக்குاِلَّاதவிரمَاஎவைحَرَّمَவிலக்கினார்اِسْرَآءِيْلُஇஸ்ராயீல்عَلٰى نَفْسِهٖதன் மீதுمِنْ قَبْلِமுன்னர்اَنْ تُنَزَّلَஇறக்கப்படுவதற்குالتَّوْرٰٮةُ ؕதவ்றாத்قُلْகூறுவீராகفَاْتُوْاவாருங்கள்بِالتَّوْرٰٮةِதவ்றாத்தைக்கொண்டுفَاتْلُوْهَاۤஇன்னும் ஓதுங்கள்/அதைاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
குல்லுத் த'ஆமி கான ஹில்லல் லி Bபனீ இஸ்ரா'ஈல இல்லா மா ஹர்ரம இஸ்ரா'ஈலு 'அலா னFப்ஸிஹீ மின் கBப்லி அன் துனZஜ்Zஜலத் தவ்ராஹ்; குல் Fப'தூ Bபித் தவ்ராதி Fபத்லூஹா இன் குன்தும் ஸாதிகீன்
இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.
اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلَيْكَஉமக்குكَمَاۤபோன்றேاَوْحَيْنَاۤவஹீ அறிவித்தோம்اِلٰى نُوْحٍநூஹுக்குوَّالنَّبِيّٖنَஇன்னும் நபிமார்களுக்குمِنْۢ بَعْدِهٖ‌ ۚஅவருக்குப் பின்னர்وَاَوْحَيْنَاۤஇன்னும் வஹீ அறிவித்தோம்اِلٰٓى اِبْرٰهِيْمَஇப்ராஹீமுக்குوَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீல்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَஇன்னும் யஃகூப்وَالْاَسْبَاطِஇன்னும் சந்ததிகள்وَعِيْسٰىஇன்னும் ஈஸாوَاَيُّوْبَஇன்னும் அய்யூப்وَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَهٰرُوْنَஇன்னும் ஹாரூன்وَسُلَيْمٰنَ‌ ۚஇன்னும் ஸுலைமான்وَاٰتَيْنَاஇன்னும் கொடுத்தோம்دَاوٗدَதாவூதுக்குزَبُوْرًا‌ஸபூரை
இன்னா அவ்ஹய்னா இலய்க கமா அவ்ஹய்னா இலா னூஹி(ன்)வ் வன் னBபிய்யீன மிம் Bபஃதிஹ்; வ அவ்ஹய்னா இலா இBப்ராஹீம வ இஸ்மா'ஈல வ இஸ்ஹாக வ யஃகூBப வல் அஸ்Bபாதி வ 'ஈஸா வ அய்யூBப வ யூனுஸ வ ஹாரூன வ ஸுலய்மான்; வ ஆதய்னா தாவூத ZஜBபூரா
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ كُلًّا هَدَیْنَا ۚ وَنُوْحًا هَدَیْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّیَّتِهٖ دَاوٗدَ وَسُلَیْمٰنَ وَاَیُّوْبَ وَیُوْسُفَ وَمُوْسٰی وَهٰرُوْنَ ؕ وَكَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟ۙ
وَوَهَبْنَاஇன்னும் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ؕஇன்னும் யஃகூபைكُلًّاஎல்லோரையும்هَدَيْنَا ۚநேர்வழி செலுத்தினோம்وَنُوْحًاஇன்னும் நூஹைهَدَيْنَاநேர்வழி செலுத்தினோம்مِنْ قَبْلُ‌இதற்கு முன்னர்وَمِنْஇன்னும் இருந்துذُرِّيَّتِهٖஅவருடைய சந்ததிدَاوٗدَதாவூதைوَسُلَيْمٰنَஇன்னும் ஸுலைமானைوَاَيُّوْبَஇன்னும் அய்யூபைوَيُوْسُفَஇன்னும் யூஸýஃபைوَمُوْسٰىஇன்னும் மூஸாவைوَ هٰرُوْنَ‌ؕஇன்னும் ஹறாரூனைوَكَذٰلِكَஇவ்வாறேنَجْزِىகூலிகொடுக்கிறோம்الْمُحْسِنِيْنَۙ‏நல்லறம்புரிவோருக்கு
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப்; குல்லன் ஹதய்னா; வ னூஹன் ஹதய்னா மின் கBப்லு வ மின் துர்ரிய்யதிஹீ தாவூத வ ஸுலய்மான வ அய்யூBப வ யூஸுFப வ மூஸா வ ஹாரூன்; வ கதாலிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
وَامْرَاَتُهٗ قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ یَعْقُوْبَ ۟
وَامْرَاَ تُهٗஅவருடைய மனைவிقَآٮِٕمَةٌநின்று கொண்டிருந்தாள்فَضَحِكَتْசிரித்தாள்فَبَشَّرْنٰهَاநற்செய்தி கூறினோம்/அவளுக்குبِاِسْحٰقَ ۙஇஸ்ஹாக்கைக் கொண்டுوَمِنْ وَّرَآءِஇன்னும் பின்னால்اِسْحٰقَஇஸ்ஹாக்கிற்குيَعْقُوْبَ‏யஃகூப்
வம்ர அதுஹூ கா'இமதுன் Fபளஹிகத் FபBபஷ்ஷர்னாஹா Bபி இஷ்ஹாக வ மி(ன்)வ் வரா'இ இஷ்ஹாக யஃகூBப்
அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.
وَكَذٰلِكَ یَجْتَبِیْكَ رَبُّكَ وَیُعَلِّمُكَ مِنْ تَاْوِیْلِ الْاَحَادِیْثِ وَیُتِمُّ نِعْمَتَهٗ عَلَیْكَ وَعَلٰۤی اٰلِ یَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰۤی اَبَوَیْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبَّكَ عَلِیْمٌ حَكِیْمٌ ۟۠
وَكَذٰلِكَஇவ்வாறேيَجْتَبِيْكَதேர்ந்தெடுப்பான்/உன்னைرَبُّكَஉன் இறைவன்وَيُعَلِّمُكَஇன்னும் கற்பிப்பான்/ உனக்குمِنْ تَاْوِيْلِவிளக்கத்திலிருந்துالْاَحَادِيْثِபேச்சுகளின்وَيُتِمُّஇன்னும் முழுமையாக்குவான்نِعْمَتَهٗஅவன் தன் அருளைعَلَيْكَஉம்மீதுوَعَلٰٓىஇன்னும் மீதுاٰلِகிளையார்يَعْقُوْبَயஃகூபின்كَمَاۤபோன்றுاَتَمَّهَا عَلٰٓىமுழுமைப்படுத்தினான்/அதை/மீதுاَبَوَيْكَஉன்இருபாட்டன்கள்مِنْ قَبْلُமுன்னர்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْحٰقَ‌ ؕஇன்னும் இஸ்ஹாக்اِنَّநிச்சயமாகرَبَّكَஉன் இறைவன்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏மகா ஞானவான்
வ கதாலிக யஜ்தBபீக ரBப்Bபுக வ யு'அல்லிமுக மின் த'வீலில் அஹாதீதி வ யுதிம்மு னிஃமதஹூ 'அலய்க வ 'அலா ஆலி யஃகூBப கமா அதம்மஹா 'அலா அBபவய்க மின் கBப்லு இBப்ராஹீம வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபக 'அலீமுன் ஹகீம்
இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
قَالَ اِنِّیْ لَیَحْزُنُنِیْۤ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ یَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ۟
قَالَகூறினார்اِنِّىْநிச்சயமாக நான்لَيَحْزُنُنِىْகவலையளிக்கும்/ எனக்குاَنْ تَذْهَبُوْا بِهٖநீங்கள்அவரை அழைத்துச் செல்வதுوَاَخَافُஇன்னும் பயப்படுகின்றேன்اَنْ يَّاْكُلَهُஅவரை தின்றுவிடுவதைالذِّئْبُஓநாய்وَاَنْـتُمْநீங்கள்عَنْهُஅவரை விட்டுغٰفِلُوْنَ‏கவனமற்றவர்கள்
கால இன்னீ ல யஹ்Zஜுனுனீ அன் தத்ஹBபூ Bபிஹீ வ அகாFபு அ(ன்)ய் ய'குலஹுத் தி'Bபு வ அன்தும் 'அன்ஹு காFபிலூன்
(அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِیْۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَیْءٍ ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَیْنَا وَعَلَی النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَشْكُرُوْنَ ۟
وَاتَّبَعْتُஇன்னும் பின்பற்றினேன்مِلَّةَமார்க்கத்தைاٰبَآءِىْۤஎன் மூதாதைகளாகியاِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَ‌ؕயஃகூப்مَا كَانَதகுமானதல்லلَنَاۤஎங்களுக்குاَنْ نُّشْرِكَநாங்கள் இணைவைப்பதுبِاللّٰهِஅல்லாஹ்வின்مِنْ شَىْءٍ‌ؕஎதையும்ذٰلِكَஇதுمِنْஇருந்துفَضْلِஅருள்اللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْنَاஎங்கள் மீதுوَعَلَىஇன்னும் மீதுالنَّاسِமக்கள்وَلٰـكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَشْكُرُوْنَ‏நன்றி செலுத்த மாட்டார்கள்
வத்தBபஃது மில்லத ஆBபா'ஈ இBப்ராஹீம வ இஷ்ஹாக வ யஃகூBப்; மா கான லனா அன் னுஷ்ரிக Bபில்லாஹி மின் ஷய்'; தாலிகமின் Fபள்லில் லாஹி 'அலய்னா வ 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
“நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَیْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰۤی اَخِیْهِ مِنْ قَبْلُ ؕ فَاللّٰهُ خَیْرٌ حٰفِظًا ۪ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟
قَالَகூறினார்هَلْ اٰمَنُكُمْஉங்களை நான் நம்புவதா?عَلَيْهِஇவர் விசயத்தில்اِلَّاதவிரكَمَاۤபோல்اَمِنْتُكُمْநம்பினேன்/உங்களைعَلٰٓى اَخِيْهِஇவருடைய சகோதரர் விஷயத்தில்مِنْ قَبْلُ‌ؕமுன்னர்فَاللّٰهُஅல்லாஹ்خَيْرٌமிக மேலானவன்حٰفِظًا‌பாதுகாவலன்وَّهُوَஅவன்اَرْحَمُமகா கருணையாளன்الرّٰحِمِيْنَ‏அருள் புரிபவர்களில்
கால ஹல் ஆமனுகும் 'அலய்ஹி இல்லா கமா அமின்துகும் 'அலா அகீஹி மின் கBப்ல்; Fபல் லாஹு கய்ருன் ஹாFபிள(ன்)வ் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰی تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَاْتُنَّنِیْ بِهٖۤ اِلَّاۤ اَنْ یُّحَاطَ بِكُمْ ۚ فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰی مَا نَقُوْلُ وَكِیْلٌ ۟
قَالَகூறினார்لَنْஅனுப்பவே மாட்டேன்اُرْسِلَهٗஅவரைمَعَكُمْஉங்களுடன்حَتّٰىவரைتُؤْتُوْنِகொடுப்பீர்கள்/எனக்குمَوْثِقًاஓர் உறுதிமானத்தைمِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்لَــتَاْتُنَّنِىْநிச்சயமாக வருவீர்கள்/என்னிடம்بِهٖۤஅவரைக் கொண்டுاِلَّاۤதவிரاَنْ يُّحَاطَஅழிவு ஏற்பட்டால்بِكُمْ‌ۚஉங்களுக்குفَلَمَّاۤபோதுاٰتَوْஅவர்கள்கொடுத்தனர்هُஅவருக்குمَوْثِقَهُمْதங்கள் உறுதிமானத்தைقَالَகூறினார்اللّٰهُஅல்லாஹ்வேعَلٰى مَا نَقُوْلُநாம் கூறுவதற்குوَكِيْلٌ‏பொறுப்பாளன்/சாட்சியாளன்
கால லன் உர்ஸிலஹூ ம'அகும் ஹத்தா து'தூனி மவ்திகம் மினல் லாஹீ லதா துன்னனீ Bபிஹீ இல்லா அய் யுஹாத Bபிகும் Fபலம்மா ஆதவ்ஹு மவ்திகஹும் காலல் லாஹு 'அலா மா னகூலு வகீல்
அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
وَلَمَّا دَخَلُوْا مِنْ حَیْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕ مَا كَانَ یُغْنِیْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَیْءٍ اِلَّا حَاجَةً فِیْ نَفْسِ یَعْقُوْبَ قَضٰىهَا ؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
وَلَمَّاபோதுدَخَلُوْاநுழைந்தனர்مِنْ حَيْثُமுறையில்اَمَرَகட்டளையிட்டார்هُمْஅவர்களுக்குاَبُوْهُمْதந்தை/தங்கள்ؕمَا كَانَ يُغْنِىْதடுப்பதாக இல்லைعَنْهُمْஅவர்களைவிட்டுمِّنَ اللّٰهِஅல்லாஹ்விடமிருந்துمِنْ شَىْءٍஎதையும்اِلَّاஒரு தேவைحَاجَةًதவிரفِىْ نَفْسِமனதில்يَعْقُوْبَயஃகூபுடையقَضٰٮهَا‌ؕநிறைவேற்றினார்/அதைوَاِنَّهٗநிச்சயமாக அவர்لَذُوْ عِلْمٍஅறிவுடையவர்لِّمَاநாம் கற்பித்த காரணத்தால்عَلَّمْنٰهُஅவருக்குوَلٰكِنَّஎனினும்اَكْثَرَஅதிகமானவர்(கள்)النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ லம்மா தகலூ மின் ஹய்து அமரஹும் அBபூஹும் மா கான யுக்னீ 'அன்ஹும் மினல் லாஹி மின் ஷய்'இன் இல்லா ஹாஜதன் Fபீ னFப்ஸி யஃகூBப களாஹா; வ இன்னஹூ லதூ 'இல்மில் லிமா 'அல்லம்னாஹு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
یَّرِثُنِیْ وَیَرِثُ مِنْ اٰلِ یَعْقُوْبَ ۖۗ وَاجْعَلْهُ رَبِّ رَضِیًّا ۟
يَّرِثُنِىْஅவர் எனக்கும் வாரிசாக ஆகுவார்وَيَرِثُஇன்னும் வாரிசாக ஆகுவார்مِنْ اٰلِகிளையினருக்குيَعْقُوْبَ ۖ யஃகூபுடையوَاجْعَلْهُஇன்னும் அவரை ஆக்குرَبِّஎன் இறைவா!رَضِيًّا‏பொருந்திக் கொள்ளப்பட்டவராக
யரிதுனீ வ யரிது மின் ஆலி யஃகூBப், வஜ்'அல்ஹு ரBப்Bபி ரளிய்யா
“அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”
فَلَمَّا اعْتَزَلَهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ۙ وَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ ؕ وَكُلًّا جَعَلْنَا نَبِیًّا ۟
فَلَمَّا اعْتَزَلَهُمْஅவர் அவர்களை விட்டு விலகியபோதுوَمَا يَعْبُدُوْنَஇன்னும் அவர்கள் வணங்கியதைمِنْ دُوْنِஅன்றிاللّٰهِ ۙஅல்லாஹ்வைوَهَبْنَاவழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கைوَيَعْقُوْبَ‌ ؕஇன்னும் யஃகூபைوَكُلًّاஇன்னும் ஒவ்வொருவரையும்جَعَلْنَاஆக்கினோம்نَبِيًّا‏நபியாக
Fப லம் மஃதZஜலஹும் வமா யஃBபுதூன மின் தூனில் லாஹி வஹBப்னா லஹூ இஸ்-ஹாக வ யஃகூBப்; வ குல்லன் ஜ'அல்னா னBபிய்யா
(இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ مِنْ ذُرِّیَّةِ اٰدَمَ ۗ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؗ وَّمِنْ ذُرِّیَّةِ اِبْرٰهِیْمَ وَاِسْرَآءِیْلَ ؗ وَمِمَّنْ هَدَیْنَا وَاجْتَبَیْنَا ؕ اِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِیًّا ۟
اُولٰٓٮِٕكَஇவர்கள்தான்الَّذِيْنَஎவர்கள்اَنْعَمَஅருள் புரிந்திருக்கின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمْஇவர்கள் மீதுمِّنَ النَّبِيّٖنَநபிமார்களில்مِنْ ذُرِّيَّةِசந்ததிகளில்اٰدَمَஆதமுடையوَمِمَّنْ حَمَلْنَاஇன்னும் நாம் ஏற்றியவர்களிலும்مَعَ نُوْحٍநூஹூடன்وَّمِنْ ذُرِّيَّةِசந்ததிகளிலும்اِبْرٰهِيْمَஇப்றாஹீம்وَاِسْرَآءِيْلَஇன்னும் இஸ்ராயீல்وَمِمَّنْ هَدَيْنَاநாம் நேர்வழிகாட்டிوَاجْتَبَيْنَا‌ ؕதேர்ந்தெடுத்தவர்கள்اِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُவசனங்கள்الرَّحْمٰنِபேரருளாளனுடையخَرُّوْاவிழுந்து விடுவார்கள்سُجَّدًاசிரம்பணிந்தவர்களாகوَّبُكِيًّا ۩‏அழுதவர்களாக
உலா'இகல் லதீன அன்'அமல் லாஹு 'அலய்ஹிம் மினன் னBபிய்யீன மின் துர்ரிய்யதி ஆதம வ மிம்மன் ஹமல்னா ம'அ னூஹி(ன்)வ் வ மின் துர்ரிய்யதி இBப்ராஹீம வ இஸ்ரா'ஈல வ மிம்மன் ஹதய்னா வஜ்த Bபய்னா; இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுர் ரஹ்மானி கர்ரூ ஸுஜ்ஜத(ன்)வ் வ Bபுகிய்யா
இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَ ؕஇஸ்ஹாக்கையும்وَيَعْقُوْبَயஃகூபையும்نَافِلَةً‌  ؕகொடையாகوَكُلًّاஅனைவரையும்جَعَلْنَاஆக்கினோம்صٰلِحِيْنَ‏நல்லவர்களாக
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக; வ யஃகூBப னாFபிலஹ்; வ குல்லன் ஜ'அல்னா ஸாலிஹீன்
இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَیْنٰهُ اَجْرَهٗ فِی الدُّنْیَا ۚ وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟
وَوَهَبْنَاநாம் வழங்கினோம்لَهٗۤஅவருக்குاِسْحٰقَஇஸ்ஹாக்கையும்وَيَعْقُوْبَயஃகூபையும்وَجَعَلْنَاஇன்னும் ஆக்கினோம்فِىْ ذُرِّيَّتِهِஅவரது சந்ததிகளில்النُّبُوَّةَநபித்துவத்தையும்وَالْكِتٰبَவேதங்களையும்وَاٰتَيْنٰهُஇன்னும் அவருக்கு நாம் கொடுத்தோம்اَجْرَهٗஅவருடைய கூலியைفِى الدُّنْيَا ۚஇம்மையில்وَاِنَّهٗநிச்சயமாக அவர்فِى الْاٰخِرَةِமறுமையில்لَمِنَ الصّٰلِحِيْنَ‏நல்லவர்களில் இருப்பார்
வ வஹBப்னா லஹூ இஸ்ஹாக வ யஃகூBப வ ஜ'அல்னா Fபீ துர்ரிய்யதிஹின் னுBபுவ்வத வல் கிதாBப வ ஆதய்னாஹு அஜ்ரஹூ Fபித் துன்யா வ இன்னஹூ Fபில் ஆகிரதி லமினஸ் ஸாலிஹீன்
மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِیْمَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ اُولِی الْاَیْدِیْ وَالْاَبْصَارِ ۟
وَاذْكُرْநினைவு கூர்வீராகعِبٰدَنَاۤநமது அடியார்களானاِبْرٰهِيْمَஇப்ராஹீம்وَاِسْحٰقَஇன்னும் இஸ்ஹாக்وَيَعْقُوْبَயஃகூப்اُولِى الْاَيْدِىْபலமும் உடையவர்களானوَالْاَبْصَارِ‏அகப்பார்வையும்
வத்குர் 'இBபாதனா இBப்ராஹீம வ இஸ்-ஹாக வ யஃகூBப உலில்-அய்தீ வலBப்ஸார்
(நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!