இஸ்ராயீல் சந்ததியினருக்கு அல்லாஹ் புரிந்த அருட்கொடைகளை நினைவூட்டுதல்
ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது கொடுங்கோன்மையிலிருந்தும், அவர்கள் அனுபவித்து வந்த அவமானம் மற்றும் இழிவிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றியது போன்ற அல்லாஹ்வின் அருட்கொடைகளை மூஸா (அலை) அவர்கள் இஸ்ராயீல் சந்ததியினருக்கு நினைவூட்டினார்கள்.
தங்கள் எதிரிகள் இழிவடைந்து, நீரில் மூழ்கி, முற்றிலுமாக அழிந்து போவதை அவர்கள் நேரில் கண்டபோது, தங்களுக்குக் கிடைத்த கண்ணியத்தையும், தங்கள் எதிரி பழிவாங்கப்பட்டதையும் அவர் அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.
இந்த விஷயத்தைப் பற்றி நாம் ஸூரத்துல் பகராவின் தஃப்ஸீரில் குறிப்பிட்டிருக்கிறோம்.