தஃப்சீர் இப்னு கஸீர் - 9:90

﴾وَجَاءَ الْمُعَذِّرُونَ مِنَ الْأَعْرَابِ لِيُؤْذَنَ لَهُمْ﴿


(கிராமப்புற அரபிகளில் உள்ள சிலர் (போருக்கு வராமல் இருப்பதற்குத் தங்களுக்கு) அனுமதி அளிக்கப்பட வேண்டுமென்று கூறி (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தனர்.) தஹ்ஹாக் (ரஹ்) கூறுகிறார்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘அல்முஅத்திருன்’ (பொய்க் காரணம் கூறுபவர்கள்) எனும் சொல்லை ‘அல்முஃதிருன்’ (தகுந்த காரணமுடையவர்கள்) என்று வாசித்தார்கள். அதாவது ‘அல்முஅத்திருன்’ என்பதற்கு, அவர்கள் போருக்கு வராமல் இருப்பதற்குத் தகுந்த காரணமில்லாத நிலையில் பொய்க் காரணங்களைக் கூறினார்கள் என்று பொருள்.


﴾وَقَعَدَ الَّذِينَ كَذَبُواْ اللَّهَ وَرَسُولَهُ﴿


(அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (ஸல்) பொய் சொன்னவர்கள் போருக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கிவிட்டனர்). அதாவது, இவர்கள் போருக்கு வராதிருக்கப் பொய்யான காரணங்களைக் கூறியதோடு, அதற்காக (நபி (ஸல்) அவர்களிடம்) அனுமதியும் கோரவில்லை; மேலும், அல்லாஹ் அவர்களுக்கு நோவினை தரும் தண்டனையைக் குறித்து எச்சரித்தான், ﴾سَيُصِيبُ الَّذِينَ كَفَرُواْ مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ﴿


(அவர்களில் நிராகரிப்பவர்களை நோவினை தரும் வேதனை பீடிக்கும்.)