101. ஸூரத்து அல்காரிஆ(திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)
மக்கீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
101:1
101:1 اَلْقَارِعَةُ ۙ‏
اَلْقَارِعَةُ ۙ‏ திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
101:1. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).
101:1. (மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
101:1. பயங்கரமான நிகழ்ச்சி!
101:1. (தன் அமளியினால் இதயங்களைத்) தட்டக்கூடியது.
101:2
101:2 مَا الْقَارِعَةُ‌ ۚ‏
مَا என்ன الْقَارِعَةُ‌ ۚ‏ திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
101:2. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன?
101:2. (அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
101:2. அந்த பயங்கரமான நிகழ்ச்சி என்ன?
101:2. தட்டக்கூடியது என்றால் என்ன?
101:3
101:3 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْقَارِعَةُ ؕ‏
وَمَاۤ இன்னும் எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) الْقَارِعَةُ ؕ‏ திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது
101:3. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது?
101:3. (நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
101:3. அந்தப் பயங்கரமான நிகழ்ச்சி எதுவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
101:3. (நபியே!) தட்டக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
101:4
101:4 يَوْمَ يَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ‏
يَوْمَ (அந்)நாளில் يَكُوْنُ ஆகுவார்கள் النَّاسُ மக்கள் كَالْفَرَاشِ ஈசல்களைப் போன்று الْمَبْثُوْثِۙ‏ பரப்பப்பட்ட
101:4. அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
101:4. அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
101:4. அந்நாளில் மக்கள், சிதறிக் கிடக்கும் ஈசல்கள் போலவும்
101:4. அந்நாளில் மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப்போல் ஆகிவிடுவார்கள்.
101:5
101:5 وَتَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ‏
وَتَكُوْنُ இன்னும் ஆகும் الْجِبَالُ மலைகள் كَالْعِهْنِ முடியைப் போன்று الْمَنْفُوْشِؕ‏ சாயம் ஏற்றப்பட்ட
101:5. மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.
101:5. கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
101:5. மேலும், மலைகள் கடையப்பட்ட வண்ண வண்ணக் கம்பளியைப் போலவும் ஆகிவிடும்!
101:5. இன்னும் மலைகள் கொட்டப்(பட்டு சாயம் ஏற்றப்)பட்ட பஞ்சைப்போன்று ஆகிவிடும்.
101:6
101:6 فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ‏
فَاَمَّا مَنْ ஆகவே, யார் ثَقُلَتْ கனத்தனவோ مَوَازِيْنُهٗ ۙ‏ அவருடைய நிறுவைகள்
101:6. எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
101:6. எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
101:6. பிறகு, எவருடைய எடைத்தட்டுகள் கனத்திருக்குமோ
101:6. ஆகவே, எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
101:7
101:7 فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ‏
فَهُوَ அவர் فِىْ عِيْشَةٍ வாழ்க்கையில் رَّاضِيَةٍ ؕ‏ திருப்தியான
101:7. அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
101:7. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
101:7. அவர் மனத்திற்குகந்த வாழ்வைப் பெறுவார்.
101:7. அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக வாழ்ந்து கொண்)டு இருப்பார்.
101:8
101:8 وَاَمَّا مَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ ۙ‏
وَاَمَّا ஆக, مَنْ யார்? خَفَّتْ இலேசாகி விட்டனவோ مَوَازِيْنُهٗ ۙ‏ அவருடைய நிறுவைகள்
101:8. ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-
101:8. எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
101:8. மேலும், எவருடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ
101:8. மேலும், எவருடைய (நன்மையின்) எடை இலேசாகி)ப் பாவ எடை கனத்துவிட்டதோ,
101:9
101:9 فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ‏
فَاُمُّهٗ அவருடைய தங்குமிடம் هَاوِيَةٌ ؕ‏ ஹாவியா
101:9. அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.
101:9. அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
101:9. அவருடைய தங்குமிடம் ஆழமான படுகுழிதான்!
101:9. அவர் தங்குமிடம் “ஹாவியா”தான்.
101:10
101:10 وَمَاۤ اَدْرٰٮكَ مَا هِيَهْ ؕ‏
وَمَاۤ இன்னும் எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا هِيَهْ ؕ‏ அது என்னவென்று
101:10. இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
101:10. அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
101:10. அது என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
101:10. அ(ந்த ஹாவியாவான)து என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
101:11
101:11 نَارٌ حَامِيَةٌ‏
نَارٌ நெருப்பு حَامِيَةٌ‏ கடுமையாக எரியும்
101:11. அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.
101:11. (அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.
101:11. கொழுந்து விட்டெரியும் நெருப்பு!
101:11. (அதுதான்) கடுமையாக சூடேற்றப்பட்ட (நரக) நெருப்பாகும்.