அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் இஸ்லாத்தை ஏற்று, அதை சிறந்த முறையில் கடைப்பிடித்தால், அவர் இதற்கு முன் செய்த ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் நன்மையை விதிப்பான், மேலும் அவர் இதற்கு முன் செய்த ஒவ்வொரு தீய செயலும் அழிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு கணக்கு ஆரம்பமாகும்; ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து மடங்கிலிருந்து எழுநூறு மடங்கு வரை நற்கூலி வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு தீய செயலும் அது உள்ளபடியே பதிவு செய்யப்படும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அதை மன்னித்துவிட்டாலே தவிர.'"