நபி (ஸல்) அவர்கள் ஒரு வாக்கியத்தைப் பேசினால் (ஒரு விஷயத்தைச் சொன்னால்), மக்கள் அதை அவர்களிடமிருந்து சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள். மேலும் அவர்கள் உள்ளே நுழைய அனுமதி கேட்டால், (கதவைத்) தட்டி மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.
حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَلَّمَ سَلَّمَ ثَلاَثًا، وَإِذَا تَكَلَّمَ بِكَلِمَةٍ أَعَادَهَا ثَلاَثًا.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவருக்கேனும் முகமன் (சலாம்) கூறினால், அவருக்கு மூன்று முறை முகமன் (சலாம்) கூறுவார்கள்; மேலும், அவர்கள் ஒரு வாக்கியத்தைப் பேசினால், அதை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள்.