حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم احْجُبْ نِسَاءَكَ. قَالَتْ فَلَمْ يَفْعَلْ، وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم يَخْرُجْنَ لَيْلاً إِلَى لَيْلٍ قِبَلَ الْمَنَاصِعِ، خَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ، وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهْوَ فِي الْمَجْلِسِ فَقَالَ عَرَفْتُكِ يَا سَوْدَةُ. حِرْصًا عَلَى أَنْ يُنْزَلَ الْحِجَابُ. قَالَتْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ الْحِجَابِ.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "தங்கள் மனைவியரைத் திரையிட்டுக்கொள்ளச் செய்யுங்கள்" என்று கூறுவார்கள். ஆனால், அவர்கள் (நபியவர்கள் உடனடியாக) அப்படிச் செய்யவில்லை. நபிகளாரின் மனைவியர் இரவில் 'அல்மனாஸிஉ' எனும் (இயற்கை கடன் கழிக்கும்) இடத்திற்குச் செல்வது வழக்கம். (ஒருமுறை) ஸம்ஆவின் மகள் சவ்தா (ரலி) அவர்கள் (வெளியே) சென்றார்கள். அவர்கள் உயரமான பெண்மணியாக இருந்தார்கள். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு சபையில் இருந்தபோது அவர்களைப் பார்த்து, "சவ்தாவே! உன்னை நான் அறிந்துகொண்டேன்" என்று கூறினார்கள். ஹிஜாப் (திரை மறைவு) பற்றிய சட்டம் அருளப்பட வேண்டும் எனும் ஆவலின் காரணமாகவே (அவர் அப்படிக் கூறினார்). (இதனையடுத்து) கண்ணியமிக்கவனும் மகத்துவமிக்கவனுமாகிய அல்லாஹ் 'ஹிஜாப்' பற்றிய வசனத்தை அருளினான்.
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ،
خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَزْوَاجَ، رَسُولِ اللَّهِ صلى الله
عليه وسلم كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ وَكَانَ عُمَرُ بْنُ
الْخَطَّابِ يَقُولُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم احْجُبْ نِسَاءَكَ . فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى
الله عليه وسلم يَفْعَلُ فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً مِنَ
اللَّيَالِي عِشَاءً وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً فَنَادَاهَا عُمَرُ أَلاَ قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ . حِرْصًا عَلَى
أَنْ يُنْزِلَ الْحِجَابَ . قَالَتْ عَائِشَةُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْحِجَابَ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர், இரவில் இயற்கை உபாதையை நிறைவேற்றுவதற்காக ‘மனாஸி’ எனும் இடத்திற்குச் செல்வது வழக்கம். அது ஒரு பரந்த திறந்த வெளியாகும். உமர் இப்னு கத்தாப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் (ஸல்), "தங்கள் துணைவியரைத் திரையிட்டு வையுங்கள்" என்று கூறுபவர்களாக இருந்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. (இந்நிலையில்) ஓர் இரவில் இஷா நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழி) அவர்கள் வெளியே சென்றார்கள். அவர்கள் உயரமான பெண்மணியாக இருந்தார்கள். ஹிஜாப் (திரை) பற்றிய சட்டம் அருளப்பட வேண்டும் என்ற ஆவலில் உமர் (ரழி) அவர்கள், "ஸவ்தாவே! அறிந்துகொள்! நாங்கள் உன்னை அடையாளம் கண்டுகொண்டோம்" என்று அவரை அழைத்துக் கூறினார்கள். (இதனையடுத்து) கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் ஹிஜாப் (திரை) பற்றிய சட்டத்தை அருளினான் என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.