இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2316ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ جِيءَ بِالنُّعَيْمَانِ أَوِ ابْنِ النُّعَيْمَانِ شَارِبًا، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ كَانَ فِي الْبَيْتِ أَنْ يَضْرِبُوا قَالَ فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ، فَضَرَبْنَاهُ بِالنِّعَالِ وَالْجَرِيدِ‏.‏
உக்பா பின் அல்-ஹாரித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அந்-நுஐமான் அல்லது இப்னு அந்-நுஐமான் (என்பவர்) மது அருந்தியவராகக் கொண்டுவரப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் அவரை அடிக்குமாறு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பாளர் உக்பா (ரழி) அவர்கள்) கூறுகிறார்கள்: அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். நாங்கள் அவரை காலணிகளாலும் பேரீச்ச மட்டைகளாலும் அடித்தோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6774ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عُقْبَةَ بْنِ الْحَارِثِ، قَالَ جِيءَ بِالنُّعَيْمَانِ أَوْ بِابْنِ النُّعَيْمَانِ شَارِبًا، فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ كَانَ بِالْبَيْتِ أَنْ يَضْرِبُوهُ‏.‏ قَالَ فَضَرَبُوهُ، فَكُنْتُ أَنَا فِيمَنْ ضَرَبَهُ بِالنِّعَالِ‏.‏
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அந்நுஐமான் அல்லது அந்நுஐமானின் மகன் மது அருந்திய நிலையில் (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், வீட்டிலிருந்தவர்களை அவரை அடிக்குமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் அவரை அடித்தார்கள். காலணிகளால் அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح