ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறத் தாங்கள் கேட்டதாக அறிவித்தார்கள்:
யாரேனும் ஒருவர் (மலஜலம் கழித்த பின்) கற்களைக் கொண்டு தம்மைத் துடைத்துக்கொண்டால், அவர் அதை ஒற்றைப்படை எண்ணிக்கையில் செய்யட்டும்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தமது தூக்கத்திலிருந்து எழுந்தால், அவர் தமது கையை மூன்று முறை கழுவும் வரை, தமது உளூவுக்கான தண்ணீரில் அதை முக்க வேண்டாம்; ஏனெனில் உங்களில் எவருக்கும் தமது கை இரவில் எங்கே இருந்தது என்று தெரியாது (மறைந்திருக்கும் அசுத்தங்களை அது தொட்டிருக்கலாம்)."
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்தால், தனது கையை (உளூச் செய்வதற்காக வைத்திருக்கும்) தண்ணீர்ப் பாத்திரத்தில் இடுவதற்கு முன்பு கழுவிக் கொள்ளட்டும்; ஏனெனில், தனது கை இரவில் எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார் (அதாவது, தூக்கத்தில் அசுத்தமான எதையாவது தொட்டிருக்கலாம்)."