حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ أَخْبَرَهُ قَالَ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعَ عُمَرٍ كُلُّهُنَّ فِي ذِي الْقَعْدَةِ، إِلاَّ الَّتِي كَانَتْ مَعَ حَجَّتِهِ. عُمْرَةً مِنَ الْحُدَيْبِيَةِ فِي ذِي الْقَعْدَةِ، وَعُمْرَةً مِنَ الْعَامِ الْمُقْبِلِ فِي ذِي الْقَعْدَةِ، وَعُمْرَةً مِنَ الْجِعْرَانَةِ حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ فِي ذِي الْقَعْدَةِ، وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவர்கள் தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தும் துல்கஅதா மாதத்திலேயே நடைபெற்றன. (அவை:) துல்கஅதா மாதத்தில் ஹுதைபியாவிலிருந்து செய்த ஒரு உம்ரா, அடுத்த ஆண்டில் துல்கஅதா மாதத்தில் (கழாவாகச்) செய்த ஒரு உம்ரா, ஹுனைன் போர்ச் செல்வங்களை அவர்கள் பங்கிட்ட ஜிஅரானாவிலிருந்து துல்கஅதா மாதத்தில் செய்த ஒரு உம்ரா, மற்றும் தமது ஹஜ்ஜுடன் செய்த ஒரு உம்ரா (ஆகியனவாகும்).