இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் என் மாமி மைமூனா (ரழி) அவர்களின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்; பின்னர் உறங்கினார்கள். இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதி வந்தபோது, அவர்கள் (தூக்கத்திலிருந்து எழுந்து) அமர்ந்து வானத்தைப் பார்த்து:
என்று கூறினார்கள். (இதன் பொருள்: "நிச்சயமாக! வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் இருக்கின்றன." - அல்குர்ஆன் 3:190).
பின்னர் அவர்கள் எழுந்து, உளூ செய்தார்கள்; மிஸ்வாக் கொண்டு பல் துலக்கினார்கள்; பின்னர் பதினொரு ரக்அத்கள் (தஹஜ்ஜுத் தொழுகையாக) தொழுதார்கள். பின்னர் பிலால் (ரழி) அவர்கள் அதான் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் பின்னர் இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத் தொழுகையாக) தொழுதுவிட்டு, பின்னர் புறப்பட்டுச் சென்று, சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي شَرِيكٌ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ بِتُّ فِي بَيْتِ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا، فَلَمَّا كَانَ ثُلُثُ اللَّيْلِ الآخِرُ أَوْ بَعْضُهُ قَعَدَ فَنَظَرَ إِلَى السَّمَاءِ فَقَرَأَ {إِنَّ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالأَرْضِ وَاخْتِلاَفِ اللَّيْلِ وَالنَّهَارِ لآيَاتٍ لأُولِي الأَلْبَابِ}.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் (என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவு தங்கினேன். (அன்று) நபி (ஸல்) அவர்கள் அங்கு அவர்களுடன் இருந்தார்கள். இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதி வந்தபோது -அல்லது அதன் ஒரு பகுதி வந்தபோது- நபி (ஸல்) அவர்கள் (படுக்கையிலிருந்து) எழுந்து அமர்ந்து வானத்தை நோக்கிப் பார்த்தார்கள். பின்னர், "நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன" (எனும் 3:190 ஆவது வசனத்தை) ஓதினார்கள்.
وَحَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ رَقَدْتُ فِي بَيْتِ مَيْمُونَةَ لَيْلَةَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَهَا لأَنْظُرَ كَيْفَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ - قَالَ - فَتَحَدَّثَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَعَ أَهْلِهِ سَاعَةً ثُمَّ رَقَدَ . وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ ثُمَّ قَامَ فَتَوَضَّأَ وَاسْتَنَّ .
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரழி) அவர்களிடம் (அன்றிரவு) தங்கியிருந்த ஓர் இரவில், நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) எவ்வாறு இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக நான் மைமூனா (ரழி) அவர்களின் வீட்டில் படுத்தேன். (அறிவிப்பாளர் கூறினார்:) நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியுடன் (மைமூனாவுடன்) சிறிது நேரம் உரையாடினார்கள்; பிறகு உறங்கினார்கள். (அறிவிப்பாளர்) இந்த ஹதீஸை (முழுமையாக) அறிவித்தார். அதில், "பிறகு அவர்கள் எழுந்தார்கள்; உளூச் செய்தார்கள்; (மிஸ்வாக் கொண்டு) பல் துலக்கினார்கள்" என்று உள்ளது.