அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மேகம் வந்து, கூரை ஒழுகுமளவிற்கு மழை பெய்தது; அந்தக் கூரை பேரீச்சம் மட்டைகளால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீரிலும் சேற்றிலும் ஸஜ்தா செய்வதை நான் கண்டேன். அவர்களின் நெற்றியில் சேற்றின் அடையாளம் இருப்பதை நான் பார்த்தேன்.