இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

235aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَاصِمٍ الأَنْصَارِيِّ، - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - قَالَ قِيلَ لَهُ تَوَضَّأْ لَنَا وُضُوءَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَدَعَا بِإِنَاءٍ فَأَكْفَأَ مِنْهَا عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ كَفٍّ وَاحِدَةٍ فَفَعَلَ ذَلِكَ ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ وَجْهَهُ ثَلاَثًا ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَغَسَلَ يَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ ثُمَّ أَدْخَلَ يَدَهُ فَاسْتَخْرَجَهَا فَمَسَحَ بِرَأْسِهِ فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ قَالَ هَكَذَا كَانَ وُضُوءُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
நபித்தோழராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம் அல் அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அவரிடம் (மக்கள்), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்தது போல் எங்களுக்காக உளூச் செய்து காட்டுங்கள்" என்று கூறினார்கள். அவர் (அப்துல்லாஹ் இப்னு ஸைத் (ரழி) அவர்கள்) ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து தம் கைகளில் தண்ணீர் ஊற்றி, அவற்றை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தம் கையை (பாத்திரத்தினுள்) நுழைத்து (தண்ணீரை) வெளியே எடுத்து, வாய் கொப்பளித்து, உள்ளங்கையால் தண்ணீர் எடுத்து மூக்கிற்குள் செலுத்தி (வெளியேற்றினார்கள்); இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். மீண்டும் தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் முகத்தை மூன்று முறை கழுவினார்கள், பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து ஒவ்வொரு கையையும் முழங்கை வரை இரண்டு முறை கழுவினார்கள், பிறகு தம் கையை நுழைத்து வெளியே எடுத்து தம் கைகளால் தலையின் முன்பகுதியையும் பின்பகுதியையும் தடவினார்கள் (மஸஹ் செய்தார்கள்). பிறகு தம் பாதங்களைக் கணுக்கால் வரை கழுவினார்கள், பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறே உளூச் செய்தார்கள்" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح