அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக (மக்களின் பார்வையிலிருந்து மறைந்து, திறந்த) வெளியிடம் செல்வார்கள். அப்போது நான் அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு வருவேன்; அவர்கள் அதைக் கொண்டு தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.