அபூமூஸா (ரலி) அவர்கள் சிறுநீர் கழிக்கும் விஷயத்தில் மிகவும் கடுமை காட்டுபவர்களாக இருந்தார்கள்; மேலும் ஒரு புட்டியில் சிறுநீர் கழிப்பார்கள் (சிறுநீர் தெறித்துவிடக் கூடாது என்ற அச்சத்தின் காரணமாக). மேலும் அவர்கள், "பனூ இஸ்ராயீல் மக்களில் எவருடைய தோலிலாவது சிறுநீர் பட்டால், அவர் அப்பகுதியை கத்தரிக்கோலால் வெட்டி விடுவார்" என்று கூறுவார்கள்.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: 'உங்கள் தோழர் (அபூமூஸா) இத்தகைய கடுமையைக் காட்டாமல் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். (ஏனெனில்,) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் (சிறுநீர் கழிக்க) நிற்பது போன்று அவர்களும் (அங்கே) நின்று சிறுநீர் கழித்தார்கள். (அப்போது) நான் அவர்களை விட்டு விலகிச் சென்றேன். ஆனால், அவர்கள் என்னைச் சைகை செய்து அழைத்தார்கள். உடனே நான் சென்று, அவர்கள் (சிறுநீர் கழித்து) முடிக்கும் வரை அவர்களது குதிக்காலுக்கு அருகில் நின்றேன்.'