حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحِي مِنَ الْحَقِّ، فَهَلْ عَلَى الْمَرْأَةِ غُسْلٌ إِذَا احْتَلَمَتْ فَقَالَ نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ .
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நிச்சயமாக, அல்லாஹ் உண்மையை (வெளிப்படுத்துவதில்) வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குக் கனவில் ஸ்கலிதம் ஏற்பட்டால், அவள் குளிக்க வேண்டியது அவசியமா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (ஸல்) "ஆம், அவள் (அந்தத்) திரவத்தைக் கண்டால் (குளிக்க வேண்டும்)" என்று பதிலளித்தார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்திற்கு வெட்கப்படமாட்டான். ஒரு பெண், ஒரு ஆண் (கனவில்) காண்பது போன்றே (அதாவது, விந்து வெளியேறும் கனவு போன்றே) தன் கனவில் கண்டால், - அதாவது குளிப்பு - அவள் மீது கடமையாகுமா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம். அவள் நீரைக் (ஈரத்தை) கண்டால், குளிக்க வேண்டும்" என்று பதிலளித்தார்கள்.
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "நான் அவரிடம், 'உம்மு ஸுலைமே! நீர் பெண்களை அவமானப்படுத்திவிட்டீர்!' என்று கூறினேன்."
حَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ جَاءَتْ أُمُّ سُلَيْمٍ امْرَأَةُ أَبِي طَلْحَةَ الأَنْصَارِيِّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ هَلْ عَلَى الْمَرْأَةِ مِنْ غُسْلٍ إِذَا هِيَ احْتَلَمَتْ فَقَالَ نَعَمْ إِذَا رَأَتِ الْمَاءَ .
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அபூ தல்ஹா அல்-அன்ஸாரியின் மனைவி உம்மு ஸுலைம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைக் கூறுவதில் வெட்கப்படமாட்டான். ஒரு பெண் காமக் கனவு கண்டால் குளிக்க வேண்டுமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'ஆம், அவள் (சுரந்த) நீரைக் கண்டால் (குளிக்க வேண்டும்)' என்று கூறினார்கள்."
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ தல்ஹா (ரழி) அவர்களின் மனைவியான உம்மு சுலைம் (ரழி) அவர்கள் கூறினார்கள், “அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் குறித்து அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண் காமக் கனவு கண்டால் அவள் மீது குஸ்ல் (குளியல்) கடமையா?” அதற்கு அவர்கள் (ஸல்) பதிலளித்தார்கள், “ஆம்! அவள் (இந்திரிய) நீரைக் கண்டால்.”