حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا أَفَاضَتْ. قَالَ وَسَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ إِنَّهَا لاَ تَنْفِرُ. ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لَهُنَّ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
தவாஃபுல் இஃபாதாவை நிறைவேற்றிவிட்டால், மாதவிடாய் ஏற்பட்ட பெண் (மக்காவை விட்டுப்) புறப்படச் சலுகை வழங்கப்பட்டது.
(அறிவிப்பாளர்) தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "இப்னு உமர் (ரழி) அவர்கள், 'அவள் புறப்படக் கூடாது' என்று கூறுவதை நான் கேட்டேன். பின்னர் 'நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளார்கள்' என்று அவர்கள் கூறுவதையும் கேட்டேன்."