இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1760, 1761ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا أَفَاضَتْ‏.‏ قَالَ وَسَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ إِنَّهَا لاَ تَنْفِرُ‏.‏ ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لَهُنَّ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
தவாஃபுல் இஃபாதாவை நிறைவேற்றிவிட்டால், மாதவிடாய் ஏற்பட்ட பெண் (மக்காவை விட்டுப்) புறப்படச் சலுகை வழங்கப்பட்டது.

(அறிவிப்பாளர்) தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "இப்னு உமர் (ரழி) அவர்கள், 'அவள் புறப்படக் கூடாது' என்று கூறுவதை நான் கேட்டேன். பின்னர் 'நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களுக்குச் சலுகை வழங்கியுள்ளார்கள்' என்று அவர்கள் கூறுவதையும் கேட்டேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح