ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மக்களுடன் கஃபாவுக்காகக் கற்களைச் சுமந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் மீது வேட்டி இருந்தது. அவர்களுடைய சிறிய தந்தை அப்பாஸ் அவர்கள் அவர்களிடம், "என் சகோதரரின் மகனே! உன் வேட்டியை அவிழ்த்து, கற்களுக்கு அடியில் உன் தோளின் மீது (கற்களின் பாரத்திலிருந்து பாதுகாக்க) வைத்துக் கொண்டால் (நன்றாக இருக்குமே)" என்று கூறினார்கள். உடனே அவர்கள் அதை அவிழ்த்துத் தம் தோளின் மீது வைத்தார்கள்; மயக்கமுற்று விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் ஒருபோதும் நிர்வாணமாகக் காணப்படவில்லை.