“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பர் (மேடை) பற்றியும், அது எதனால் செய்யப்பட்டது என்பது குறித்தும் மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, அவர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) அவர்களிடம் வந்து (அது குறித்துக்) கேட்டார்கள். அவர் கூறினார்கள்: ‘அது பற்றி என்னை விட அதிகமாக அறிந்தவர் (இப்போது) மக்களில் யாரும் இல்லை. அது ‘ஃகாபா’ எனும் இடத்திலுள்ள ‘அத்ல்’ மரத்தால் செய்யப்பட்டது. அதை இன்னாருடைய (ஒரு பெண்) அடிமையான இன்னார்தான் செய்தார்; (அவர்) ஒரு தச்சர். அவர் அதைக் கொண்டு வந்தார். அது (அதற்குரிய இடத்தில்) வைக்கப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் அதன் மீது நின்றார்கள். அவர்கள் கிப்லாவை முன்னோக்கினார்கள்; மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். அவர்கள் குர்ஆனை ஓதினார்கள்; பிறகு ருகூஃ செய்து, தம் தலையை உயர்த்தினார்கள். பிறகு, அவர்கள் பின்னோக்கி நகர்ந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர், அவர்கள் மீண்டும் மிம்பருக்குச் சென்று குர்ஆனை ஓதினார்கள்; பிறகு ருகூஃ செய்தார்கள்; பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நின்றார்கள்; பிறகு பின்னோக்கி நகர்ந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள்.”