இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

808ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ وَاصِلٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ، رَأَى رَجُلاً لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ مَا صَلَّيْتَ ـ قَالَ وَأَحْسِبُهُ قَالَ ـ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صلى الله عليه وسلم‏.‏
ஹுதைஃபா (ரழி) அவர்கள், ஒரு மனிதர் தமது ருகூவையும் ஸஜ்தாவையும் பூரணமாகச் செய்யாததைக் கண்டார்கள். அவர் தொழுகையை முடித்ததும் ஹுதைஃபா (ரழி) அவரிடம், “நீர் தொழவில்லை (உமது தொழுகை செல்லாது)” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் கூறுகிறார்:) மேலும், (ஹுதைஃபா அவர்கள் அவரிடம்,) ‘நீர் (இந்த நிலையில்) இறந்தால், முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறை அல்லாத ஒன்றிலேயே இறந்திருப்பீர்’ என்றும் கூறினார்கள் என நான் கருதுகிறேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح