وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، بْنِ الزُّبَيْرِ قَالَ قَالَتْ عَائِشَةُ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِي - وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - يَسْتُرُنِي بِرِدَائِهِ لِكَىْ أَنْظُرَ إِلَى لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِي حَتَّى أَكُونَ أَنَا الَّتِي أَنْصَرِفُ . فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது அறையின் வாசலில் நின்று கொண்டிருந்ததையும், அபிசீனியர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் தங்கள் ஈட்டிகளால் விளையாடிக் கொண்டிருந்ததையும் நான் பார்த்தேன். நான் அவர்களது விளையாட்டைப் பார்ப்பதற்காகத் தங்களது மேலாடையால் என்னை அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தார்கள். பிறகு, (நான் விளையாட்டை முழுமையாகப் பார்த்து முடித்து) நானாகத் திரும்பும் வரை எனக்காக அவர்கள் நின்றிருந்தார்கள். ஆகவே, வேடிக்கை பார்ப்பதில் ஆவல் கொண்ட ஒரு இளம் வயதுச் சிறுமியின் நிலையை (அவள் எவ்வளவு நேரம் பார்ப்பாள் என்பதை) நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்."