யஸீத் அவர்கள் அறிவித்தார்கள்:
ஸலமா (ரழி) அவர்கள், குர்ஆன் பிரதிகள் (முஸ்ஹஃப்) வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள தூணுக்கு அருகில் தொழ நாடுபவர்களாக இருந்தார்கள். நான் அவர்களிடம், "அபூ முஸ்லிம் அவர்களே! நீங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே நாடுவதை நான் காண்கிறேனே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இதற்கு அருகில் தொழுவதை நாடுபவர்களாக இருப்பதை நான் பார்த்துள்ளேன்" என்று கூறினார்கள்.