இப்னு உமர் (ரழி) அவர்கள் கஅபாவிற்குள் நுழையும்போதெல்லாம், நுழைந்ததும் (கஅபாவின் உட்புறச் சுவரில்) தம் முகத்திற்கு நேராக நடப்பார்கள்; வாசலைத் தம் முதுகுக்குப் பின்னால் ஆக்கிக்கொள்வார்கள். தமக்கும் தமக்கு முன்னால் உள்ள சுவருக்கும் இடையே சுமார் மூன்று முழம் (இடைவெளி) இருக்கும் வரை நடந்து செல்வார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததாக பிலால் (ரழி) தமக்கு அறிவித்த அந்த இடத்தைத் தேடி (அங்கே) தொழுவார்கள். கஅபாவிற்குள் எந்தப் பகுதியில் விரும்பினாலும் தொழுவதில் எவர் மீதும் எந்தக் குற்றமும் இல்லை.