ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக ஆக்கிவிட்டீர்கள். நான் கட்டிலில் படுத்திருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்து கட்டிலின் நடுவில் நின்று தொழுதார்கள். அவர்களுக்கு முன்னால் இருப்பதை நான் விரும்பாததால், கட்டிலின் கால்மாட்டுப் பக்கமாக மெதுவாக நகர்ந்து, என் போர்வையிலிருந்து வெளியேறினேன்."