ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "கழுதைக்கும் நாய்க்கும் எங்களை (பெண்களை) நீங்கள் சமமாக்கிவிட்டது மிகவும் மோசமானதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது, நான் அவர்களுக்கு முன்னால் குறுக்காகப் படுத்திருப்பேன். அவர்கள் ஸஜ்தா செய்ய விரும்பினால் என் காலைத் (மெதுவாக) தட்டுவார்கள்; உடனே நான் அதை மடக்கிக் கொள்வேன். பிறகு அவர்கள் ஸஜ்தா செய்வார்கள்."