அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மழை நாளில் அவர்கள் தமது முஅத்தினரிடம், "நீர் 'அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்', 'அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்' என்று கூறிய பிறகு, 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூற வேண்டாம். மாறாக, 'ஸல்லூ ஃபீ புயூதிக்கும்' (உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்) என்று கூறுவீராக!" என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) மக்கள் அதை ஆட்சேபிப்பதைப் போன்று இருந்தார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), "இதைக்கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? என்னைவிடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இதையே செய்துள்ளார்கள். ஜும்ஆ (தொழுகை) உறுதியான கடமையாகும். (ஆயினும்) உங்களைச் சிரமத்திற்குள்ளாக்கி, சேற்றிலும் வழுக்கும் தரையிலும் நடக்கச் செய்வதை நான் விரும்பவில்லை" என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் ஒரு மழை நாளில் தம்முடைய முஅத்தினிடம் கூறினார்கள்: “நீர் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ்’ என்று சொல்லும்போது, ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று கூற வேண்டாம். மாறாக, ‘ஸல்லூ ஃபீ புயூதிக்கும்’ (உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்) என்று கூறுங்கள்.”
இதை மக்கள் (சற்று) விசித்திரமாகப் பார்த்தது போல் இருந்தது. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “என்னை விடச் சிறந்தவரான (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) இதைச் செய்துள்ளார்கள். ஜும்ஆத் தொழுகை ஒரு கட்டாயக் கடமையாகும். ஆனால், நீங்கள் சேற்றிலும் மழையிலும் நடந்து வந்து சிரமப்படுவதை நான் விரும்பவில்லை.”