حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنِ امْرَأَتِهِ، فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا قَالَتْ أَتَيْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ خَسَفَتِ الشَّمْسُ، فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ، وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي فَقُلْتُ مَا لِلنَّاسِ فَأَشَارَتْ بِيَدِهَا إِلَى السَّمَاءِ، وَقَالَتْ سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ آيَةٌ فَأَشَارَتْ أَىْ نَعَمْ. قَالَتْ فَقُمْتُ حَتَّى تَجَلاَّنِي الْغَشْىُ، فَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي الْمَاءَ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ مَا مِنْ شَىْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلاَّ قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ، وَلَقَدْ أُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مِثْلَ ـ أَوْ قَرِيبًا مِنْ ـ فِتْنَةِ الدَّجَّالِ ـ لاَ أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ ـ يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ لَهُ مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ فَأَمَّا الْمُؤْمِنُ ـ أَوِ الْمُوقِنُ لاَ أَدْرِي أَىَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى، فَأَجَبْنَا وَآمَنَّا وَاتَّبَعْنَا. فَيُقَالُ لَهُ نَمْ صَالِحًا، فَقَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُوقِنًا. وَأَمَّا الْمُنَافِقُ ـ أَوِ الْمُرْتَابُ لاَ أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ ـ فَيَقُولُ لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ .
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"சூரிய கிரகணம் ஏற்பட்டிருந்தபோது நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது மக்கள் (கிரகணத் தொழுகைக்காக) நின்று கொண்டிருந்தார்கள்; ஆயிஷாவும் (தொழுது) நின்று கொண்டிருந்தார்கள். நான் (ஆயிஷாவிடம்), 'மக்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தமது கையால் வானத்தை நோக்கிச் சுட்டிக் காட்டி, 'ஸுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். நான், '(இது ஓர்) அத்தாட்சியா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்' என்று சைகை செய்தார்கள்."
அஸ்மா (ரலி) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: "பிறகு நானும் (தொழுகையில்) நின்றேன். எந்த அளவிற்கென்றால், எனக்கு மயக்கம் ஏற்படும் நிலை உருவானது; உடனே நான் என் தலைமீது தண்ணீரை ஊற்றத் தொடங்கினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்துத்) திரும்பியதும், அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
'நான் இதுவரை பார்த்திராத எதையும் - சொர்க்கம் மற்றும் நரகம் உட்பட - என்னுடைய இந்த இடத்திலிருந்தே பார்த்துவிட்டேன். மேலும், தஜ்ஜாலின் சோதனையைப் போன்ற - அல்லது அதற்கு நெருக்கமான - ஒரு சோதனை மண்ணறைகளில் (கப்ருகளில்) உங்களுக்கு இருக்கிறது என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டது' (இவ்விரண்டில் எதை அஸ்மா கூறினார் என்பது எனக்கு நினைவில்லை என அறிவிப்பாளர் கூறுகிறார்).
(கப்ரில்) உங்களில் ஒருவரிடம், 'இந்த மனிதரைப் பற்றி (அதாவது முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி) உனது அறிவு யாது?' என்று கேட்கப்படும். இறைநம்பிக்கையாளர் (முஃமின்) அல்லது உறுதிகொண்டவர் (மூக்கின்) - இவ்விரண்டில் எதை அஸ்மா கூறினார் என்பது எனக்கு நினைவில்லை - பின்வருமாறு பதிலளிப்பார்: 'இவர் முஹம்மது (ஸல்); அல்லாஹ்வின் தூதர். எங்களிடம் தெளிவான சான்றுகளுடனும் நேர்வழியுடனும் வந்தார். நாங்கள் (அவரது அழைப்பை) ஏற்றோம், ஈமான் கொண்டோம், (அவரைப்) பின்பற்றினோம்.' அவரிடம், 'நல்லடியாராக நீர் உறங்குவீராக! நீர் (உலகில்) உறுதிகொண்டவராக இருந்தீர் என்பதை நாம் அறிவோம்' என்று சொல்லப்படும்.
ஆனால் நயவஞ்சகன் (முனாஃபிக்) அல்லது சந்தேகவாதி (முர்தாப்) - இவ்விரண்டில் எதை அஸ்மா கூறினார் என்பது எனக்கு நினைவில்லை - (கேள்வி கேட்கப்படும்போது), 'எனக்குத் தெரியாது; மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன்; நானும் அதையே சொன்னேன்' என்று பதிலளிப்பான்."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். நான், "மக்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் தொழுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தம் தலையால் வானத்தை நோக்கிச் சைகை செய்தார்கள். நான், "(இது ஓர்) அத்தாட்சியா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நிலையில்) வெகு நேரம் நின்றார்கள்; எந்த அளவிற்கென்றால், எனக்கு மயக்கம் வந்துவிட்டது. உடனே நான் எனக்குப் பக்கத்திலிருந்த தண்ணீர்ப் பையை எடுத்து, என் தலையின் மீதும் அல்லது என் முகத்தின் மீதும் தண்ணீரை ஊற்றலானேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையை) முடித்தபோது சூரியன் (கிரகணத்திலிருந்து) விலகி வெளிச்சமாகியிருந்தது. நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள்; பிறகு கூறினார்கள்:
"அம்மா பஅத் (இறைப்புகழுக்குப்பின்), நான் இதுவரை கண்டிராத எதையும் என்னுடைய இந்த இடத்திலிருந்தே கண்டு கொண்டேன்; சொர்க்கம் மற்றும் நரகத்தையும் தான். மேலும், நிச்சயமாக எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 'நிச்சயமாக நீங்கள் கப்ருகளில் (மண்ணறைகளில்) மஸீஹ் தஜ்ஜாலின் குழப்பத்திற்கு நிகரான - அல்லது அதற்கு நெருக்கமான - ஒரு சோதனக்குள்ளாக்கப்படுவீர்கள்' என்று எனக்கு அறிவிக்கப்பட்டது." (இவ்விரண்டில் - 'நிகரான' அல்லது 'நெருக்கமான' - எதை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அறிவிப்பாளர் அஸ்மா (ரழி) அவர்களுக்குத் தெரியவில்லை).
(மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்): "உங்களில் ஒருவர் (கப்ருக்குள்) கொண்டுவரப்பட்டு அவரிடம், 'இந்த மனிதரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?' என்று கேட்கப்படும்.
இறைநம்பிக்கையாளர் (முஃமின்) அல்லது உறுதிகொண்டவர் (மூகின்) - இவ்விரண்டில் எதை அஸ்மா (ரழி) சொன்னார்கள் என்று தெரியவில்லை - அவர், 'இவர் முஹம்மத்; இவர் அல்லாஹ்வின் தூதர். எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நேர்வழியையும் கொண்டுவந்தார். நாங்கள் (அவருக்குப்) பதிலளித்தோம்; (அவரைப்) பின்பற்றினோம்' என்று கூறுவார்." (இவ்வாறு மூன்று முறை கூறப்படும்).
"பிறகு அவரிடம், 'நீர் நல்லவராக உறங்குவீராக! நீர் அவரை நம்பியிருந்தீர் என்பதை நாம் அறிவோம்' என்று சொல்லப்படும்.
நயவஞ்சகன் (முனாஃபிக்) அல்லது சந்தேகப்படுபவன் (முர்தாப்) - இவ்விரண்டில் எதை அஸ்மா (ரழி) சொன்னார்கள் என்று தெரியவில்லை - அவன், 'எனக்குத் தெரியாது; மக்கள் எதையோ சொல்லக் கேட்டேன்; நானும் அதையே சொன்னேன்' என்று கூறுவான்."