அப்துல்லாஹ் பின் உமர் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தால், மஃரிப் தொழுகையை இஷா தொழுகையுடன் சேர்த்துத் தொழுவதற்காகத் தாமதப்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்."
ஸாலிம் அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் பயணத்தில் அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தால் அவ்வாறே செய்வார்கள். மஃரிப் தொழுகைக்கு இகாமத் சொல்லி, அதை மூன்று ரக்அத்கள் தொழுதுவிட்டு சலாம் கொடுப்பார்கள். பிறகு சிறிது நேரமே காத்திருப்பார்கள்; இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லி, அதை இரண்டு ரக்அத்கள் தொழுது சலாம் கொடுப்பார்கள். அவ்விரு தொழுகைகளுக்கு இடையிலோ அல்லது இஷா தொழுகைக்குப் பின்னரோ நள்ளிரவில் (தஹஜ்ஜுத் தொழுகைக்காக) எழும் வரை அவர்கள் (சுன்னத், நபில் என) ஒரு ரக்அத்தும் தொழுவதில்லை.