அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் செய்யும்போது, தங்களது வாகனம் எந்த திசையை நோக்கிச் சென்றாலும் அதன் மீது (அமர்ந்தவாறு உபரித் தொழுகைகளை) தொழுவார்கள்.
அப்துல்லாஹ் இப்னு தீனார் அவர்கள் கூறினார்கள், "அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்."