அப்துல்லாஹ் இப்னு ஆமிர் இப்னு ரபிஆ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: தம் தந்தை (ஆமிர் இப்னு ரபிஆ (ரழி)) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின் போது இரவில், அவர்களுடைய வாகனத்தின் மீது, அது எந்த திசை நோக்கித் திரும்பினாலும், நஃபில் தொழுகையைத் தொழுதுகொண்டிருந்ததை தாம் கண்டதாகக் கூறினார்கள்.