அப்துல்லாஹ் பின் ஜைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்தார்கள். நாங்கள் அவர்களுக்கு ஒரு பித்தளைப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்தோம். அவர்கள் உளூச் செய்தார்கள். தங்கள் முகத்தை மூன்று முறையும், தங்கள் இரு கைகளையும் இரண்டு இரண்டு முறையும் கழுவினார்கள். தங்கள் தலையை மஸஹ் செய்தார்கள்; அப்போது (கைகளை) முன்பின்னாகக் கொண்டு சென்றார்கள். மேலும், தங்கள் இரு கால்களையும் கழுவினார்கள்.