நான் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன்; அவர்கள் தொழுகைக்காக உளூச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தமது கையை அக்குள் வரை எட்டும் அளவுக்கு நீட்டினார்கள். நான் அவர்களிடம், "அபூ ஹுரைரா அவர்களே! இது என்ன உளூ?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பனூ ஃபர்ரூக் குலத்தரே! நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? நீங்கள் இங்கே இருப்பது தெரிந்திருந்தால் நான் இந்த உளூவைச் செய்திருக்க மாட்டேன். 'உளூவின் (தண்ணீர்) சென்றடையும் இடம் வரை ஒரு முஃமினுக்கு (சொர்க்கத்தின்) அணிகலன்கள் சென்றடையும்' என்று என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
وعنه قال: سمعت خليلي صلى الله عليه وسلم يقول: تبلغ الحلية من المؤمن حيث يبلغ الوضوء ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என் கலீல் (அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன், "இறைநம்பிக்கையாளரின் ஆபரணம் (சுவனத்தில்), உளூவின் நீர் சென்றடையும் இடங்கள் வரை சென்றடையும்."