حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ جَاءَتْ فَاطِمَةُ ابْنَةُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي ". قَالَ وَقَالَ أَبِي " ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الْوَقْتُ ".
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உதிரப்போக்குத் தொடர்கிறது; நான் தூய்மையடைவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை; அது ஒரு நரம்பிலிருந்து வருவதாகும்; மாதவிடாய் அல்ல. ஆகவே, உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு. அது சென்றுவிட்டால் உன்னிடமிருந்து இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுதுகொள்" என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்) ஹிஷாம் கூறினார்: என் தந்தை (உர்வா) கூறினார்: "பிறகு அந்த நேரம் வரும் வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூ செய்துகொள்" (என்று நபி (ஸல்) கூறினார்கள்).
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரழி) அவர்கள் இஸ்திஹாதாவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் இஸ்திஹாதாவால் பாதிக்கப்பட்டுள்ளேன், நான் தூய்மையடைவதில்லை; நான் தொழுகையை விட்டுவிட வேண்டுமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அது ஒரு (உடல்) நரம்பாகும், மாதவிடாய் அல்ல. உமக்கு மாதவிடாய் ஏற்படும்போது, தொழுகையை நிறுத்திவிடுங்கள், அது நின்றதும் உம்மீதுள்ள இரத்தத்தின் தடயங்களைக் கழுவிவிட்டு, வுளூ செய்துகொள்ளுங்கள். அது ஒரு (உடல்) நரம்பாகும், மாதவிடாய் அல்ல." அவரிடம் (அறிவிப்பாளர்களில் ஒருவரிடம்), "குஸ்ல் பற்றி என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அதில் எவருக்கும் சந்தேகம் இல்லை" என்று கூறினார்.