ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் மாதவிடாய் நின்ற பிறகு குளிப்பது பற்றிக் கேட்டாள். நபி (ஸல்) அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குக் கூறி, "கஸ்தூரி மணம் ஊட்டப்பட்ட ஒரு துணித்துண்டால் உன்னைச் சுத்தப்படுத்திக் கொள்" என்று கூறினார்கள். அந்தப் பெண், "அதனால் நான் எப்படி என்னைச் சுத்தப்படுத்திக் கொள்வது?" என்று கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ்! (அதனால்) உன்னைச் சுத்தப்படுத்திக் கொள்" என்று கூறினார்கள். (அப்போது) நான் அவளை என் பக்கம் இழுத்து, "இரத்தம் பட்ட இடத்தை அதனால் தேய்த்துக்கொள்" என்று கூறினேன்.