அப்துல்லாஹ் பின் ஸலிமா (ரழி) அவர்கள் கூறியதாவது: நான் அலி பின் அபீ தாலிப் (ரழி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் சென்று தமது தேவையை நிறைவேற்றிவிட்டு வெளியே வருவார்கள்; பிறகு எங்களுடன் ரொட்டியையும் இறைச்சியையும் சாப்பிடுவார்கள்; குர்ஆனையும் ஓதுவார்கள். ஜனாபத் (பெருந்தொடக்கு) நிலையைத் தவிர வேறெதுவும் அவர்களைக் குர்ஆனை விட்டும் திரையிடாது -அல்லது தடுக்காது-' (அதாவது, சிறு தொடக்கு அல்லது உணவு உண்ட நிலை குர்ஆன் ஓதுவதைத் தடுக்காது).