அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின்போது பிலால் (ரழி) அவர்களிடம், "பிலாலே! இஸ்லாத்தில் நீங்கள் செய்த செயல்களில், (உமது பார்வையில்) மிகப்பெரும் நன்மையை நீங்கள் எதிர்பார்க்கும் செயல் எது என்பதை எனக்கு அறிவியுங்கள். ஏனெனில், நிச்சயமாக (இன்றிரவு) சொர்க்கத்தில் எனக்கு முன்னால் உங்களது காலடி ஓசையை நான் கேட்டேன்" என்று கூறினார்கள்.
அதற்கு பிலால் (ரழி) அவர்கள், "நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாகத் தூய்மையடைந்தாலும், அந்தத் தூய்மையுடன் அல்லாஹ் எனக்கு விதித்த (நஃபிலான) தொழுகைகளைத் தொழாமல் இருப்பதில்லை. இதைத் தவிர நன்மையை அதிகம் எதிர்பார்க்கக்கூடிய வேறெந்தச் செயலையும் நான் இஸ்லாத்தில் செய்யவில்லை" என்று கூறினார்கள்.
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لبلال: يا بلال حدثني بأرجى عمل عملته في الإسلام، فإني سمعت دف نعليك بين يدي في الجنة، قال: ما عملت عملا أرجى عندي من أني لم أتطهر طهورًا في ساعة من ليل أو نهار إلا صليت بذلك الطهور ما كتب لي أن أصلي. ((متفق عليه وهذا لفظ البخاري)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரழி) அவர்களிடம், "இஸ்லாத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டதிலிருந்து நீங்கள் செய்த செயல்களில், (அல்லாஹ்விடம்) அதிக நன்மையை எதிர்பார்க்கும் செயல் எதுவென்று எனக்குக் கூறுங்கள்; ஏனெனில், சுவர்க்கத்தில் எனக்கு முன்னால் உங்கள் காலணிகளின் காலடி ஓசையை நான் கேட்டேன்" என்று கூறினார்கள். பிலால் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் நான் உளூச் செய்தாலும் (அல்லது குளித்தாலும்), எனக்குத் தொழ விதிக்கப்பட்ட (நஃபிலான) தொழுகையை நான் தொழுது விடுவேன். இதைவிட அதிக நன்மையை எதிர்பார்க்கும் செயல் வேறு எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை."