அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்:
"அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ மினத்-துனூபி வல்-கதாயா. அல்லாஹும்ம நக்கினீ மின்ஹா கமா யுனக்கா அஸ்-ஸவ்புல் அப்யளு மினத்-தனஸ், அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ பிஸ்-ஸல்ஜி வல்-பரதி வல்-மாஇல் பாரித் (யா அல்லாஹ், பாவங்கள் மற்றும் தவறுகளிலிருந்து என்னைப் பரிசுத்தப்படுத்துவாயாக. யா அல்லாஹ், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போல் அதிலிருந்து என்னை நீ தூய்மைப்படுத்துவாயாக, யா அல்லாஹ், பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் குளிர்ச்சியான நீரைக் கொண்டு என்னைப் பரிசுத்தப்படுத்துவாயாக)."
அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்:
“அல்லாஹ்வே, பனிக்கட்டி, ஆலங்கட்டி மற்றும் குளிர்ச்சியான நீரைக் கொண்டு என் இதயத்தைக் குளிரச் செய்வாயாக. அல்லாஹ்வே, வெள்ளை ஆடையை அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவதைப் போல் பாவங்களிலிருந்து என் இதயத்தை தூய்மைப்படுத்துவாயாக (அல்லாஹும்ம பர்ரித் கல்பீ பித்-தல்ஜி வல்-பரதி வல்-மாஇல்-பாரித். அல்லாஹும்ம நக்கி கல்பீ மின் அல்-கதாயா கமா நக்கய்தத் தவ்பல்-அப்யள மின் அத்-தனஸ்).”