حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى {سُنَّةَ الْفَجْرِ} فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் சுன்னத்தை தொழுது முடித்ததும், நான் விழித்திருந்தால் என்னிடம் பேசுவார்கள்; இல்லையென்றால், தொழுகைக்காக (இகாமத் மூலம்) அறிவிக்கப்படும் வரை படுத்துக் கொள்வார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுத பின், நான் விழித்திருந்தால் என்னிடம் பேசுவார்கள்; இல்லையென்றால் அவர்கள் (தம் வலது பக்கமாக) படுத்துக் கொள்வார்கள்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்களை (சுன்னத் தொழுகையை) தொழுததும், நான் உறங்கிக்கொண்டிருந்தால் (தம் வலது புறமாக) சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்; நான் விழித்திருந்தால், என்னுடன் பேசுவார்கள்.