அபூ பஸ்ரா அல்ஃகிஃபாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'முகம்மஸ்' எனும் இடத்தில் எங்களுக்கு 'அஸ்ர்' தொழுகையைத் தொழவைத்தார்கள். பின்னர் கூறினார்கள்: "நிச்சயமாக இந்தத் தொழுகை உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு வழங்கப்பட்டது; ஆனால் அவர்கள் அதை(த் தொழாது) வீணடித்துவிட்டார்கள். எனவே, யார் இதைப் பேணித் தொழுகிறாரோ அவருக்கு இரண்டு மடங்கு நற்கூலி உண்டு. மேலும், 'சாட்சி' தோன்றும் வரை இதற்குப் பிறகு எந்தத் தொழுகையும் இல்லை." (இங்கு) 'சாட்சி' என்பது நட்சத்திரமாகும்.