உக்பா இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "ஒரு மலையின் தனிமையான, கடினமான உச்சியில் (அல்லது பாறையின் உச்சியில்) ஆடு மேய்க்கும் ஒருவர் பாங்கு சொல்லி, தொழுகை நிறைவேற்றுவதைக் கண்டு உங்கள் இறைவன் வியப்படைகிறான் (அதாவது, அவனது செயலை மெச்சி, மகிழ்கிறான்). கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் கூறுகிறான்: 'என்னுடைய இந்த அடியானைப் பாருங்கள்; அவன் பாங்கு சொல்லி, இகாமத் கூறி தொழுகையை நிலைநிறுத்துகிறான்; மேலும் எனக்கு அஞ்சுகிறான். ஆகவே, நான் என் அடியானை மன்னித்துவிட்டேன்; அவனைச் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிட்டேன்'."