அபூஹுரைரா (ரழி) அவர்கள், தொழுகைக்கான அழைப்பு (அதான்) அறிவிக்கப்பட்ட பின்னர் ஒருவர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறிச் செல்வதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார்” என்று கூறினார்கள். (அதாவது, அதான் சொல்லப்பட்ட பிறகு, நியாயமான காரணமின்றி பள்ளிவாசலை விட்டு வெளியேறி, ஜமாஅத் தொழுகையைத் தவறவிடுபவர் நபியவர்களின் கட்டளையை மீறியவர் ஆவார்.)