இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

673சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ هَانِئٍ، عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ مَحْمُودٍ، قَالَ صَلَّيْتُ مَعَ أَنَسِ بْنِ مَالِكٍ يَوْمَ الْجُمُعَةِ فَدُفِعْنَا إِلَى السَّوَارِي فَتَقَدَّمْنَا وَتَأَخَّرْنَا فَقَالَ أَنَسٌ كُنَّا نَتَّقِي هَذَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏
அப்துல்ஹமீது இப்னு மஹ்மூத் அறிவித்தார்கள்:

நான் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களுடன் ஜும்ஆ தொழுகையை தொழுதேன். நாங்கள் (மக்கள் கூட்டத்தால்) தூண்களை நோக்கித் தள்ளப்பட்டோம். அதனால், நாங்கள் முன்னும் பின்னுமாக நின்றோம். பிறகு அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அதை (தூண்களுக்கு இடையில் வரிசை அமைப்பதை) தவிர்த்து வந்தோம்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)